Wednesday, April 13, 2011

ஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்பு...

http://www.tamiluk.net/wp-content/uploads/2011/01/AVN_RAJATAKE_118406f.jpg

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனங்கள் ட்ராய்க்கு விண்​ணப்​பித்தன. இவர்கள் ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தின்படி மொ​பைல் கனெக்ஷன் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்று இருந்தனர்.

ஆனால், டிராய் செய்த சிபாரிசு தொலைத் தொடர்புத் துறைக்கு வருவதற்கு முன்பே ரிலையன்ஸ் நிறுவனம் (18 சர்க்கிள்கள்), ஷியாம் டெலி லிங்க்ஸ், ஹெச்.எஃப்.சி.எல். இன்ஃபோடெல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்தது. டாடா நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. 'டாடா நிறுவனத்தைப் படாத பாடுபடுத்தினர்’ என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது.

'தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் அவரது கூட்டாளி சந்தோலியாவும்... ஸ்வான் டெலிகாமையும், யுனிடெக் டெலிகாமையும் முன்னுக்குக் கொண்டுவரவே, டாடா டெலி சர்வீஸைப் பின்னுக்குத் தள்ளினார்கள்’ என்கிறது சி.பி.ஐ.

டாடா கொடுத்த விண்ணப்பப் படிவங்கள்​கூட தொலைத் தொடர்புத் துறையில் காணாமல்போய்​விட்டதாக சி.பி.ஐ. தெரிவித்து இருக்கிறது. 'டாடாவுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்டால், டெல்லி, மும்பையில் ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாமும், சஞ்சய் சந்திராவின் யுனிடெக் நிறுவனமும் பயன் அடைய முடியாமல் போகும் என்று ஆ.ராசா கருதினார். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMYmrObnygz4N5ODvWCro3lQQO5N89Y5lQZG9vQiXgUETIm4M1d6_lURAG4rDawh82dQbLAvgwQ1GKO7bmXLlouXV5JPS3j4fy9rblfMnFLc0mML4alLovarh3t1kvQC62EgqkJDbMDTM/s1600/photo007.jpg
அதனால், டாடா​வின் விண்ணப்பங்கள் மூடி மறைக்கப்​பட்டுவிட்டன. அவர்கள் 10.1.2008 அன்று கட்டணம் செலுத்தி, அதற்கான ரசீது கொடுக்கப்பட்டு, சீனியாரிட்டி பட்டியலில் பெயர் இருந்தாலும், டாடா கொடுத்த விண்ணப்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமாக மறைந்துவிட்டது’ என்று சி.பி.ஐ. சொல்கிறது. ஆ.ராசா இந்த அளவுக்கு டாடாவை இழுத்தடித்த பிறகும், அவரை சீராட்டி, பாராட்டி கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுதியது ஏன் என்ற மர்மம் பற்றி சி.பி.ஐ. ஏனோ குறிப்பிடவில்லை.

ஸ்வான் நிறுவனத்துக்குச் சொந்த​மான டிபி ரியாலிட்டியின் சகோதர நிறுவனத்துக்கு ஆர்.கே. சந்தோலியா, அவரது வீட்டை வாடகைக்குக் கொடுத்து இருக்கிறார். அதன் மூலம், மாதம்தோறும் 63,000 சந்தோலியாவுக்கு ரியாலிட்டி கொடுக்கிறது. 2008 டிசம்பரில் ஸ்வானின் பங்குகள் வாங்கப்பட்டது குறித்து நீளமான பட்டியலை குற்றப் பத்திரிகையில் வைத்துள்ளது சி.பி.ஐ. ஐக்கிய அரேபிய நிறுவனமான எடிஸாலட் நிறுவனம், ஸ்வான் டெலிகாமின் பங்குகளை 3,200 கோடிக்கு வாங்கியது. சென்னையைச் சேர்ந்த ஜினெக்ஸ் எக்ஸ்ம் வென்சர் நிறுவனம் 380 கோடிக்கு ஸ்வானின் பங்குகளை வாங்கியது. இந்த பணம் வந்த வழியையும் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் வைத்து இருக்கிறது.
http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/cart-Din.JPG
தகுதியில்லாத நிறுவனங்கள்!

ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, இதன் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற அரசியல் செல்வாக்கோடு ரிலையன்ஸ் இறங்கியது. இதற்கு ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்கள் பணம் முதலீடு செய்துள்ளன. இந்த விவரங்களை முழுமையாக சி.பி.ஐ. பட்டியல் போட்டு, 45 பக்கங்களுக்குப் படம் போட்டு விளக்கி இருக்கிறது. 

இதில், ரிலையன்ஸின் நிர்வாகிகள் கௌதம் டோஸி, சுரேந்திர பைப்பாரா, ஹரி நாராயணன் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால், இவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அனில் அம்பானியை விசாரித்த சி.பி.ஐ., அவரிடம் பணிபுரிபவர்களை மட்டுமே குற்றவாளிகளாகச் சிக்கவைத்துள்ளது.

இதே மாதிரி, ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்த யுனிடெக் நிறு​வனத்தின் சில துணை நிறுவனங்கள், டெலிகாம் உரிமத்துக்கான தகுதியைப் பெறுவதற்காக, சில மோசடியான தகவல்​களைக் கொடுத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கண்டுபிடித்து உள்ளது. 

அந்தத் தகவல்களை ஆராயாமல், தொலைத் தொடர்புத் துறை அனுமதி கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான விண்ணப்பம் செய்த​போது, ஸ்வானுக்கும் யுனிடெக் நிறுவனத்துக்கும் முறையான தகுதிகள் இல்லை. இவர்களது விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

ஆனால், இவர்களுக்கு உரிமங்கள் கொடுக்கவே கட்-ஆஃப் தேதி முதல் ஸ்பெக்ட்ரம் விலை மதிப்பு வரை அனைத்திலும் தில்லுமுல்லுகள் நடந்து உள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடுகிறது.
http://lh4.ggpht.com/_IEYubfMaOJM/TOC0zTmSYZI/AAAAAAAACao/YPUUgLvpYNk/hindu%20cartoon%5B4%5D.jpg

நுழைவுக் கட்டணத்தில் தில்லுமுல்லு!

அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்து சி.பி.ஐ. ஒரு கணக்கைச் சொல்கிறது! செல்லுலார் சேவை நிறுவனங்களிடம் இருந்து ஒரு மெகா ஹெட் வீதம் ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை 2002-03 முதல் 2007 வரை கணக்கிடும்போது, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. 

இதைவைத்துக் கணக்கிடும்போது, 2008-ம் ஆண்டு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டதில், 22,535 கோடி நுழைவுக் கட்டணத்தில் நஷ்டம். இதே மாதிரி, இரட்டைத் தொழில்நுட்பத்துக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால், 8,448 கோடி அரசுக்கு இழப்பு. ஒட்டுமொத்தமாக, அரசுக்கு 30,983 கோடி நஷ்டம் என்கிறது சி.பி.ஐ.


தொலைத் தொடர்புத் துறை, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை 1,650 கோடி என நிர்ணயித்தது. இது 2001-ல் நான்காவது செல்லுலார் மொபைல் டெலிபோன் சர்வீஸுக்கு (சி.எம்.டி.எஸ்.) விடப்பட்ட ஏலத் தொகை. இந்த ஏலத் தொகையை உயர்த்தாமல், 2008-ல் கொடுக்கப்பட்ட உரிமங்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயித்தது தவறு என்கிறது சி.பி.ஐ..

http://www.tamilhindu.com/wp-content/uploads/niira_radia.jpg
'தொலைத் தொடர்புத் துறை எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதனால், 2001-க்குப் பிறகு ஏற்பட்டுள்ள தொலைபேசிகளின் அடர்த்தி, வளர்ச்சி, ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, இந்த ஏலத் தொகையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.

2003-ல் பீகார், ஒரிஸ்ஸா, வட கிழக்கு மாநிலங்களில் யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால், 2001-ம் ஆண்டு முறையே பின்பற்றப்பட்டது. ஆனால், கடுமையான போட்டி உருவான பிறகும் அதையே எப்படிப் பின்பற்ற முடியும்?’ என்று சி.பி.ஐ. கேள்வி எழுப்புகிறது.


'நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம், அதற்கும் மேலாக பிரதமர் கூறிய ஆலோசனைகளைஎல்லாம் ஆ.ராசா புறக்கணித்தார். எல்லோருடைய கருத்துகளையும் மீறி தன்னிச்சையாக ஆ.ராசா முடிவு எடுத்தார். தனக்கு வேண்டியவர்களான ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா, வினோத் கோயங்காவோடு, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திராவும் பயனடையவே, அரசுக்கு ஆ.ராசா நஷ்டம் ஏற்படுத்தினார்!’ என்கிறது சி.பி.ஐ.


இந்த விவகாரத்தில் கட்டுக்கட்டான ஆவணங்களை மட்டுமின்றி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் தவிர, குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் சாட்சிகளாக நிறுத்துகிறது. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், டிராய் தலைவர்கள், சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, முன்னாள் தொலைத் தொடர்புச் செயலாளர் மாத்தூர், சட்டத் துறை செயலாளராக இருந்த டி.கே. விஸ்வநாதன், முன்னாள் நிதிச் செயலாளர் டி.சுப்பா ராவ் என்று பெரிய படையே சிறப்பு நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLEjb2_MLmJGmpzp_IdrxuLOF7DZUJIDeg1Z2G3VADwMKBMeG2pUzOSeB6Lx-4_a7YXq-D2zETFlgN-QeoGhwOPTZjEljmwXYOu4NlL15C5SIiOk97guqn6dTtQcaXYZ94dRCtN6L67sS2/s1600/spectrum_cartoon_kalki2.jpg
இதில் முக்கியமான ஏழு பேர் ஆ.ராசாவுக்கு எதிராக மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலங்களும் கொடுத்து இருக்கிறார்கள்.

இதில் சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா மற்றும் சுமார் ஒன்பது வருடங்களாக, கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரி அந்தஸ்தில் ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். (இதில் ஆசிர்வாதம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. அல்லது காங்கிரஸ் சார்பில் போட்டியிடவும் முயற்சி செய்தவர் என்பது தனி விவகாரம்) இந்த இருவரது வாக்குமூலங்களைவைத்து ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது.

மோசடி, கூட்டுச் சதி, தில்லுமுல்லு, திட்டமிட்டு ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் கொடுத்தது, லஞ்ச ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்தில் இருந்து அதிகபட்சம் ஏழு வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzL9CAXqf9Ob7eYv2m8tbypgThdDyS3EjV_2nwUR8Ex3khGlZlwI-xrtRaiTTOgFvPYK8CInHvIuK3PZRlt5iBMSq8NXxqnGLPCe1kJjovPobfiocbpWEyONMhPgObfvJqoWLb0Hnwj0a/s400/TM_15-10-08_E1_01-02%2520CNI.jpg
ஆனால், சாட்சிகளில் எத்தனை பேர் பல்டி அடிப்பார்கள், யார் பிறழ் சாட்சிகளாக மாறுவார்கள் என்பதைப் பொறுத்தும்... இனி தாக்கல் செய்யப்பட இருக்கும் கூடுதல் குற்றப் பத்திரிகையைப் பொறுத்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதித் தீர்ப்பு அமையும். இது வரை கலைஞர் டி.வி. பெற்ற 200 கோடியைத் தவிர, வேறு எந்த ஆதாயங்களையும் சி.பி.ஐ. இந்தக் குற்றப் பத்திரிகையில் முன்வைக்கவில்லை. இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த விவேக் ப்ரியதர்சினியிடம் இது குறித்துக் கேட்டபோது, ''பொறுத்திருங்கள்... அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளில் ஒவ்வொன்றாக வெளிவரும்!'' என்கிறார்.



 சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ-யும், பணப் பரிமாற்றம் தொடர்பான மோசடிகளை அமலாக்கப் பிரிவினரும் விசாரித்து வருகின்றனர். சி.பி.ஐ. கடந்த 2-ம் தேதி முதல் கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வெளிநாட்டு நிதி மேலாண்மை சட்டத்தின் கீழ் 4,300 கோடி முதலீடு பற்றிய மோசடிகள்பற்றி குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். '2ஜி முறைகேடு பற்றி சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அடுத்த நாள், அதாவது கடந்த 9-4-11 அன்று அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ளனர். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidk8qE9xTdFRoaXu83O5Y57PPoImGwzia4EQgiwE2-EaJm4CmGYQgKL0tFAxLRrKBocBPeWarbtCo9z-P4EvmwP6OZECO_muYvk0vNEMbMSzgeiF07LbmpCl-AC8QBYlWTPNDUhW4FAd8/s320/1234.jpg
இந்த குற்றப் பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம், லூப் மொபைல், லூப் டெலிகாம் மற்றும் எஸ்.டெல் பற்றி கூறப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஆ.ராசா அண்ட் கோவுக்கு அமலாக்கத் துறையில் இருந்து சம்மன்கள் வழங்கப்பட்டனவாம். மேலும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள யுனிடெக், ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன. 

இதில் ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் சிறையில் உள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்படும். மற்றவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை தொடங்குமாம்!

இந்த ஒரு மாசத்துல அதாவது மே 13 வரை இது காபந்து அரசு என்பதால் ராசாவுக்கு ஆபத்து காத்து இருக்கு...

105 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை....

MANO நாஞ்சில் மனோ said...

அட்ரா அட்ரா.....

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா...

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி...

MANO நாஞ்சில் மனோ said...

சொஜ்ஜி...

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

குத்து...

MANO நாஞ்சில் மனோ said...

அருவா...

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி...

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

soda bottle

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

cycle chain

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

A.K.47

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Pistol

Thirumalai Kandasami said...

சபாஷ்,சரியான போட்டி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

rivolver

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

shell

Thirumalai Kandasami said...

நாட்டு வெடி குண்டு,பெட்ரோல் குண்டு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

kfir, mig, super sonic, F 07, Miraj

ராஜ நடராஜன் said...

சிபி!இதை விட சூடான வடை ஆ.ராசாவின் தனிச் செயலாளர் வாக்குமூலம்

http://www.ndtv.com/article/india/confessions-of-a-rajas-former-secretary-98010

நேரம் பார்த்து கோல் போடும் காங்கிரஸை கருணாநிதியும்,கழக கண்மணிகளும் இனியாவது உணர்வார்களா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Where is Senthilkumar?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்த்த்தூ.................

உங்களை இல்ல சிபி, இது மேல உள்ள கமென்டுகளுக்கு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Where is Senthilkumar?////////

வேலூர் ஜெயில்ல கல்லு உடச்சிக்கிட்டு இருக்காரு..........!

Thirumalai Kandasami said...

அண்ணன் ராமசாமி வந்துட்டாரு ,,ஸ்டார்ட் மியூசிக்

நிரூபன் said...

'டாடா நிறுவனத்தைப் படாத பாடுபடுத்தினர்’ என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது.//

இந்தக் குற்றம் மட்டுமா? இன்னும் பல குற்றங்களும் மறைந்திருக்கின்றனவா?

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால பாஸ் வந்துட்டான் வெயிட்...

நிரூபன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்த்த்தூ.................

உங்களை இல்ல சிபி, இது மேல உள்ள கமென்டுகளுக்கு.........//

ஆஹா..ஆஹா..........


சகோ, சிரிப்பை அடக்க முடியலை.....

சகோ மனோ, சகோ ஓட்டவடை ரெண்டு பேருமே பின்னிட்டீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்த்த்தூ.................

உங்களை இல்ல சிபி, இது மேல உள்ள கமென்டுகளுக்கு......

அதானே பார்த்தேன்.. நமதான் ராம்சாமி வழில குறுக்கிடறதே இல்லையேன்னு பார்த்தேன்

Thirumalai Kandasami said...

சிபி ஜி ,,இப்ப எல்லாம் எதுவுமே எழுதுறது கிடையாது..cut copy paste மட்டும் தான் போல ..ஏன்?

நிரூபன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Where is Senthilkumar?////////

வேலூர் ஜெயில்ல கல்லு உடச்சிக்கிட்டு இருக்காரு..........!//

ஏன் பணம் அதிகமாக புழங்குற இடங்களைப் பற்றி பதிவு போட்டு மாட்டிக்கிட்டாரா?

MANO நாஞ்சில் மனோ said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்த்த்தூ.................

உங்களை இல்ல சிபி, இது மேல உள்ள //


ஆஆஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

நிரூபன் said...

இந்தப் பதிவைச் சகோ பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்தா பப்ளிஷ் பண்ணினார்?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Where is Senthilkumar?

திரட்டிகளில் இணைப்பதற்குள் திரட்டி சுத்தும் விழா இங்கே முடிஞ்சிடுச்சே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மோசடி, கூட்டுச் சதி, தில்லுமுல்லு, திட்டமிட்டு ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் கொடுத்தது, லஞ்ச ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்தில் இருந்து அதிகபட்சம் ஏழு வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

m..... vinai vithaiththavan........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இந்த ஒரு மாசத்துல அதாவது மே 13 வரை இது காபந்து அரசு என்பதால் ராசாவுக்கு ஆபத்து காத்து இருக்கு...//////////

எல்லா குத்தத்தையும் ஒப்புக்கிட்டாலும் என்ன ஒரு 10 வருசம் ஜெயில்ல போடுவீங்களா? அடபோங்கய்யா...... 3000 கோடிரூவா பாக்கெட்டுக்குள்ள இருக்கு, ஆப்பாம் ஆப்பு, 3000 இல்ல, 30 கோடி குடுங்கய்யா நான் 20 வருசம் ஜெயில்ல இருந்துட்டு வரேன்.........!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நிரூபன் said...

இந்தப் பதிவைச் சகோ பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்தா பப்ளிஷ் பண்ணினார்?

ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை!
//

மொத்தமா சுத்தி வளச்சிட்டாங்க போல....

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger Thirumalai Kandasami said...

அண்ணன் ராமசாமி வந்துட்டாரு ,,ஸ்டார்ட் மியூசிக்

டன் டன் டம்ம்ச்சுக்கு... இந்த மியூசிக்கா?

டண்டண்டன் டனாக்க மியூசிக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பை எலக்சன் சூப்பர் ஸ்டார் பட்டம்லாம் நல்லாத்தானுங்ணா இருக்கு, ஆனா தேர்தல் கமிசன்ல ஒத்துக்க மாட்டாங்களேணா...........

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இந்த ஒரு மாசத்துல அதாவது மே 13 வரை இது காபந்து அரசு என்பதால் ராசாவுக்கு ஆபத்து காத்து இருக்கு...//////////

எல்லா குத்தத்தையும் ஒப்புக்கிட்டாலும் என்ன ஒரு 10 வருசம் ஜெயில்ல போடுவீங்களா? அடபோங்கய்யா...... 3000 கோடிரூவா பாக்கெட்டுக்குள்ள இருக்கு, ஆப்பாம் ஆப்பு, 3000 இல்ல, 30 கோடி குடுங்கய்யா நான் 20 வருசம் ஜெயில்ல இருந்துட்டு வரேன்.........!

ஒரு கோடி குடுங்க .. போதும் நான் உள்ளே போக ரெடி ஹி ஹி ஏலம்..

MANO நாஞ்சில் மனோ said...

//(இதில் ஆசிர்வாதம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. அல்லது காங்கிரஸ் சார்பில் போட்டியிடவும் முயற்சி செய்தவர் என்பது தனி விவகார//

இந்த ஆளை விசாரிச்சா இன்னும் பல உண்மைகள் வெளியே வரும்னு பேசிக்கிறாங்க....

MANO நாஞ்சில் மனோ said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Where is Senthilkumar?////////

வேலூர் ஜெயில்ல கல்லு உடச்சிக்கிட்டு இருக்காரு..........!

April 13, 2011 4:28 PM//

நானும் திகார் ஜெயில்லன்னு நினைச்சிட்டேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Thirumalai Kandasami said...
அண்ணன் ராமசாமி வந்துட்டாரு ,,ஸ்டார்ட் மியூசிக்
//////////

ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..................

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Where is Senthilkumar?

திரட்டிகளில் இணைப்பதற்குள் திரட்டி சுத்தும் விழா இங்கே முடிஞ்சிடுச்சே?

haaaaaaaaa..............haaaaaaaaaaaa

summaoru jaalikkuththaan

MANO நாஞ்சில் மனோ said...

//
Thirumalai Kandasami said...
அண்ணன் ராமசாமி வந்துட்டாரு ,,ஸ்டார்ட் மியூசிக்///

ஆமா உடனே சாமகொடாங்கிய கூப்பிடுங்க...

நிரூபன் said...

Sako, you forget something,

Atomic bomb, multi barrel, Cluster bomb, LMG, Machine gun, 50calibar, 50BMG, Anti miss ells

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Where is Senthilkumar?////////

வேலூர் ஜெயில்ல கல்லு உடச்சிக்கிட்டு இருக்காரு..........!

April 13, 2011 4:28 PM//

நானும் திகார் ஜெயில்லன்னு நினைச்சிட்டேன்....
//////

அண்ணன் திகார் ஜெயில்ல எல்லா கல்லையும் உடச்சு முடிச்சிட்டாரு, அங்க இப்போ கல்லே இல்லியாம் அதுனால வேலூருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.............!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இந்த ஒரு மாசத்துல அதாவது மே 13 வரை இது காபந்து அரசு என்பதால் ராசாவுக்கு ஆபத்து காத்து இருக்கு...//////////

எல்லா குத்தத்தையும் ஒப்புக்கிட்டாலும் என்ன ஒரு 10 வருசம் ஜெயில்ல போடுவீங்களா? அடபோங்கய்யா...... 3000 கோடிரூவா பாக்கெட்டுக்குள்ள இருக்கு, ஆப்பாம் ஆப்பு, 3000 இல்ல, 30 கோடி குடுங்கய்யா நான் 20 வருசம் ஜெயில்ல இருந்துட்டு வரேன்.........


க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்த்த்தூ.................

உங்களை இல்ல panni

for Rasa

hi............
hi............

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

49

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

50

நிரூபன் said...

ஸ்வான் டெலிகாமையும், யுனிடெக் டெலிகாமையும் முன்னுக்குக் கொண்டுவரவே, டாடா டெலி சர்வீஸைப் பின்னுக்குத் தள்ளினார்கள்’ என்கிறது சி.பி.ஐ.//

சகோ, இது ராசாவையும் கலைஞர் குடும்பத்தையும் முன்னுக் கொண்டு வர என்று சொல்லுகிறார்களே வாசகர்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Thirumalai Kandasami said...
அண்ணன் ராமசாமி வந்துட்டாரு ,,ஸ்டார்ட் மியூசிக்
//////////

ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..//

பயமா எனக்கா ஹே ஹே ஹே ஹே நான்.........ஏன் கால் இப்பிடி ஆடுது....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Sako, you forget something,

Atomic bomb, multi barrel, Cluster bomb, LMG, Machine gun, 50calibar, 50BMG, Anti miss ells

paandian shell

cheenaa vedi

mithi vedi

pori vedi

oomal kodda vedi

panang kodda vedi

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....

நிரூபன் said...

இந்திய அரசியல் என்கிற தவளை விழுங்கின மிகப் பெரிய பாம்பு ஸ்பெக்டரம் என்பதை கார்ட்டூன் கப்சியா காட்டுறதே சகோ.

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....//

சகோ ஏனிந்த கொலை வெறி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Thirumalai Kandasami said...
அண்ணன் ராமசாமி வந்துட்டாரு ,,ஸ்டார்ட் மியூசிக்
//////////

ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..//

பயமா எனக்கா ஹே ஹே ஹே ஹே நான்.........ஏன் கால் இப்பிடி ஆடுது....
////////


ஆடிய ஆட்டமென்ன......
பேசிய வார்த்தையென்ன....?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி, ஜீவன்,மனோ 3 பேருக்கும் பெரிய யுத்தமே நடக்குது போல.. தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்போம்# தமிழேண்டா...

நிரூபன் said...

நடுவே இருக்கும் ஒரு படம் டிஸ்பிளே ஆகுதில்லை சகோ?


இந்த பந்திக்கு கீழே உள்ள படம்..
//

நுழைவுக் கட்டணத்தை 1,650 கோடி என நிர்ணயித்தது. இது 2001-ல் நான்காவது செல்லுலார் மொபைல் டெலிபோன் சர்வீஸுக்கு (சி.எம்.டி.எஸ்.) விடப்பட்ட ஏலத் தொகை. இந்த ஏலத் தொகையை உயர்த்தாமல், 2008-ல் கொடுக்கப்பட்ட உரிமங்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயித்தது தவறு என்கிறது சி.பி.ஐ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி, ஜீவன்,மனோ 3 பேருக்கும் பெரிய யுத்தமே நடக்குது போல.. தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்போம்# தமிழேண்டா...////////

யோவ் நல்லா பாருய்யா நாங்க மூணு பேரும் உங்க கூட தான் சண்ட போட்டுக்கிட்டு இருக்கோம்.......... மப்புல யாரு கூட சண்ட போடுறோம்னுகூடவா தெரியாது? தொலச்சிபுடுவேன் தொலச்சி..........!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....

no..... send him srilanka

its the best punishment

MANO நாஞ்சில் மனோ said...

my blog list'ல நாஞ்சில்மனோ பெயரில்லை எதுக்குலேய்ய் சிபி....???

வீச்சருவா கொண்டு வர்றதுக்குள்ளே என் பெயர் அங்கே வந்துரனும் ஜாக்கிரதை....

நிரூபன் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Sako, you forget something,

Atomic bomb, multi barrel, Cluster bomb, LMG, Machine gun, 50calibar, 50BMG, Anti miss ells

paandian shell

cheenaa vedi

mithi vedi

pori vedi

oomal kodda vedi

panang kodda vedi//


ஆய் கிட்டிப் புல்லு, கிளித் தட்டு, எல்லே, கிறிக்கற், புட்பால், பாலிபால், டென்னிஸ், றக்பி, ஹையம்ப், லோங் ஜம்ப்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி, ஜீவன்,மனோ 3 பேருக்கும் பெரிய யுத்தமே நடக்குது போல.. தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்போம்# தமிழேண்டா...////////

யோவ் நல்லா பாருய்யா நாங்க மூணு பேரும் உங்க கூட தான் சண்ட போட்டுக்கிட்டு இருக்கோம்.......... மப்புல யாரு கூட சண்ட போடுறோம்னுகூடவா தெரியாது? தொலச்சிபுடுவேன் தொலச்சி..........!


repeatu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....////////

அங்க இப்போ எல்லாருமே பொம்பள போலீசாம்.............(இப்ப உடனே சிபி ஓடிவந்து ஜீப்புல ஏறுவாரு பாருங்க...........)

நிரூபன் said...

தண்ணீருக்குள் தத்தளிக்கும் ராசாவை... கண்னீருடன் காப்பாற்றும் கலைஞர் படம் கலக்கலோ கலக்கல்......

MANO நாஞ்சில் மனோ said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி, ஜீவன்,மனோ 3 பேருக்கும் பெரிய யுத்தமே நடக்குது போல.. தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்போம்# தமிழேண்டா...////////

யோவ் நல்லா பாருய்யா நாங்க மூணு பேரும் உங்க கூட தான் சண்ட போட்டுக்கிட்டு இருக்கோம்.......... மப்புல யாரு கூட சண்ட போடுறோம்னுகூடவா தெரியாது? தொலச்சிபுடுவேன் தொலச்சி..........!//

மக்கா ரம்மா, வோட்காவா...??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Sako, you forget something,

Atomic bomb, multi barrel, Cluster bomb, LMG, Machine gun, 50calibar, 50BMG, Anti miss ells

paandian shell

cheenaa vedi

mithi vedi

pori vedi

oomal kodda vedi

panang kodda vedi//


ஆய் கிட்டிப் புல்லு, கிளித் தட்டு, எல்லே, கிறிக்கற், புட்பால், பாலிபால், டென்னிஸ், றக்பி, ஹையம்ப், லோங் ஜம்ப்..

running

side roll

bike riding

ellai padai

kadat padai

vevu padai

vaan padai

kanani pirivu

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....////////

அங்க இப்போ எல்லாருமே பொம்பள போலீசாம்.............(இப்ப உடனே சிபி ஓடிவந்து ஜீப்புல ஏறுவாரு பாருங்க...........)//

என்னாது பொம்பளை போலீசா..???
எனக்கும் ஒரு சீட்ல துண்டை போடுங்க....

நிரூபன் said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

எழுவது....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....////////

அங்க இப்போ எல்லாருமே பொம்பள போலீசாம்.............(இப்ப உடனே சிபி ஓடிவந்து ஜீப்புல ஏறுவாரு பாருங்க...........)


haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

haaaaaaaaaaaaaaaaaaaaaaaa

i too come

நிரூபன் said...

நிரூபன் said...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....

no..... send him srilanka

its the best punishment//

No, no, don't send him to Srilanka, because he can't survive.

April 13, 2011 4:49 PM

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி, ஜீவன்,மனோ 3 பேருக்கும் பெரிய யுத்தமே நடக்குது போல.. தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்போம்# தமிழேண்டா...////////

யோவ் நல்லா பாருய்யா நாங்க மூணு பேரும் உங்க கூட தான் சண்ட போட்டுக்கிட்டு இருக்கோம்.......... மப்புல யாரு கூட சண்ட போடுறோம்னுகூடவா தெரியாது? தொலச்சிபுடுவேன் தொலச்சி..........!//

மக்கா ரம்மா, வோட்காவா...??///////////


அவருக்கு எப்பவுமே பேட்டரி செல்லு போட்டு காச்சுற ஐட்டம்தான்........ மத்ததுலாம் எறும்பு கடிச்ச மாதிரிகூட இருக்காதாம்..........!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் எவனாவது சண்டைக்கு வாங்கலேய்....

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....////////

அங்க இப்போ எல்லாருமே பொம்பள போலீசாம்.............(இப்ப உடனே சிபி ஓடிவந்து ஜீப்புல ஏறுவாரு பாருங்க...........)//

என்னாது பொம்பளை போலீசா..???
எனக்கும் ஒரு சீட்ல துண்டை போடுங்க....//

மலையாள ரசிகமணிகள் உங்களின் வாக்கினைக் கேட்டு படையெடுக்கப் போகிறார்கள்..

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
எலேய் எவனாவது சண்டைக்கு வாங்கலேய்....//

ஏன் ஏழரையை இப்பூடி விளக்கு வைச்சு வரவேற்கிறீங்க..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தண்ணீருக்குள் தத்தளிக்கும் ராசாவை... கண்னீருடன் காப்பாற்றும் கலைஞர் படம் கலக்கலோ கலக்கல்......

yes yes

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>> Delete
Blogger Thirumalai Kandasami said...

அண்ணன் ராமசாமி வந்துட்டாரு ,,ஸ்டார்ட் மியூசிக்

டன் டன் டம்ம்ச்சுக்கு... இந்த மியூசிக்கா?

டண்டண்டன் டனாக்க மியூசிக்கா//

என்ன சுடுகாட்டுல அடிக்கிற சத்தம் மாதிரி இருக்கு மியூசிக்....

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....////////

அங்க இப்போ எல்லாருமே பொம்பள போலீசாம்.............(இப்ப உடனே சிபி ஓடிவந்து ஜீப்புல ஏறுவாரு பாருங்க...........)


பெண் என்றால் தெய்வமாக நினைக்கும் என்னையா...? அய்யகோ.. நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கே..? ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் எவனாவது சண்டைக்கு வாங்கலேய்....//////


யோவ், சண்டைல கிழியாத சட்ட வெச்சிருக்கியா, இருந்தா எடுத்துட்டு வாய்யா ... நாம சிபி அண்ணன் கூட சண்ட போட்டு வெள்ளாடலாம்

MANO நாஞ்சில் மனோ said...

எண்பது...

நிரூபன் said...

துரோகி, ஒட்டுப் படை, ஆழ ஊடுவிருவித் தாக்குமணி, விசேட அதிரடிப் படை, காவற் துறை, வருவாய்த் துறை, ஆயப் பகுதி, வீதிக் கண்காணிப்பு பிரிவு

நிரூபன் said...

மகிழ்வுக் குழி, மகிழ்வு உளி, கொங்கை....இதெல்லாம் என்ன என்று தமிழில் யாராவது சொல்லுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பிடிச்சி குவாண்டாமோ ஜெயில்ல போடுங்கலேய்....////////

அங்க இப்போ எல்லாருமே பொம்பள போலீசாம்.............(இப்ப உடனே சிபி ஓடிவந்து ஜீப்புல ஏறுவாரு பாருங்க...........)


பெண் என்றால் தெய்வமாக நினைக்கும் என்னையா...? அய்யகோ.. நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கே..? ஹி ஹி//////////

நெஞ்சு வெடிச்சா கூட பரவால்ல.... ஆனா...
அய்யய்யோ என்னதிது..வரவர விவேக்கு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டேன், எல்லாம் இந்த சன்டீவி வெளம்பரங்களால வந்த வினை..........

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் எவனாவது சண்டைக்கு வாங்கலேய்....//////


யோவ், சண்டைல கிழியாத சட்ட வெச்சிருக்கியா, இருந்தா எடுத்துட்டு வாய்யா ... நாம சிபி அண்ணன் கூட சண்ட போட்டு வெள்ளாடலாம்//

சண்டைன்னா சட்டை கிளிஞ்சாதான் வீரனுக்கு அழகு ஹே ஹே ஹே ஹே...

நிரூபன் said...

வானூர்தி, கடற் கலம், பேரூந்து, மகிழூந்து, உந்துருளி, ஈருருளி, வெதுப்பி, குதப்பி, தீவனம், குளிர்களி, குளிரணி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
மகிழ்வுக் குழி, மகிழ்வு உளி, கொங்கை....இதெல்லாம் என்ன என்று தமிழில் யாராவது சொல்லுங்க...////////

நான் சொல்லிடுவேன், ஆனா சிபி ப்ளாக்க தடை பண்ணிடுவாங்களேன்னு பாக்கிறேண்............

நிரூபன் said...

சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை!//

you mean Superintendent of Police?

நிரூபன் said...

எலிப் பாசாணம், மோட்டீன், நின்ஜா, பூச்சி மருந்து, நாத்த மருந்து

நிரூபன் said...

நடுவிலை இருக்கிற பொம்பிளையோடை படத்தை கீறினது நீங்களா.. அழகாகவும் காமெடியாகவும் இருக்கு சகோ.

நிரூபன் said...

சண்டைக்கு அழைப்பு விடுத்த சகோ மனோவைக் காணவில்லை..
சண்டை தொடங்கும் முன்னரே பயந்து ஓடி விட்டாரா?

நிரூபன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நிரூபன் said...
மகிழ்வுக் குழி, மகிழ்வு உளி, கொங்கை....இதெல்லாம் என்ன என்று தமிழில் யாராவது சொல்லுங்க...////////

நான் சொல்லிடுவேன், ஆனா சிபி ப்ளாக்க தடை பண்ணிடுவாங்களேன்னு பாக்கிறேண்............//

ஆஹா... ஆஹா... வேணாம். விபரிதமாகிடும்..

நிரூபன் said...

நீண்ட நாளுக்குப் பின்னர் மனோ, ஓட்டவடை இருவரினதும் பின்னூட்டங்களைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்தேன்.

நன்றிகள் சிபி.. படங்களிற்கும், பதிவிற்கும், பகிர்விற்கும்.

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

சக்தி கல்வி மையம் said...

அப்படியா?

சக்தி கல்வி மையம் said...

குட்

சக்தி கல்வி மையம் said...

நைஸ்..

சக்தி கல்வி மையம் said...

99..

சக்தி கல்வி மையம் said...

100... வடை..

Unknown said...

இது வடை இல்லை மொய் (101), கட்டுரையை விட படங்கள் நிறைய சொல்லுது விஷயம்.

கேரளாக்காரன் said...

Naan kastapattu sambarichu katra tax a aattayapoduravanuga ellam naasama pogattum

MANO நாஞ்சில் மனோ said...

//நிரூபன் said...
சண்டைக்கு அழைப்பு விடுத்த சகோ மனோவைக் காணவில்லை..
சண்டை தொடங்கும் முன்னரே பயந்து ஓடி விட்டாரா?//

ஹா பயமா எனக்கா....சட்டை கிழிஞ்சி தொங்கினாலும் ஸ்டெடியா நிப்பேனாக்கும் அக்காங்....

வலிப்போக்கன் said...

இந்தியாவின் அம்பானிய பத்தி சீ.பீ.அய்
நோண்ட முடியலையா. பயம் வேலை
போயிடும். ஏனுங்கோ.அப்படித்தானே

சென்னை பித்தன் said...

பின்னூட்டம் போடலாம் என்று வந்தேன்.எல்லாப் பின்னூட்டங்களும் பார்த்தேன்!இதுக்கு நடுவில் மாட்டிச் சட்னியாக வேண்டாம் என்று ஓட்டு மட்டும் போட்டு விட்டு-- எஸ்கேப்!