Monday, March 21, 2011

வை கோ வை இழுக்க கலைஞர் பகிரங்க முயற்சி.. அரசியல் உலகில் பர பரப்பு

http://rachelchitra.files.wordpress.com/2008/10/vaiko_tn_chiefminister.jpg 

கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதை இப்போதும் நிரூபித்துக்கொண்டே தான் இருக்கிறார்,வை கோ வை இழுக்க வீரமணி மூலம் தூது விட்டு இருக்கிறார்.

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: வைகோவுக்கு வீரமணி திறந்த மடல்!
சென்னை, மார்ச் 21,2011
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளரை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோக்கு அவர் இன்று எழுதிய திறந்த மடல்:

"அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiUmyuVFFeIGTdM0PJ-59cv63dyJonmK4IAB5iQ60A0Fu4XahSTq6zhnkdd5fRoub8RkijMbGm-tlPnHtOgsD0INUXBm1PQPzbg1_x3ZG-r4WU1ZJuteX2JaOfSn3PLS2SPEJhKAcVlZbp/s400/0016.JPG
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?
தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வதாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணியிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் "ஆரிய மாயை" பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. 

இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.
வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!


கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!
என்றாலும் ஆரியம் தனது வஞ்சத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv5i6muKCDDt6hlslqkPStoIWT6Zqym8vw0drJWwr0WxX7a4h234PLi9khfKMRV1iMEIbxhTHJw5Z7xQgUzLZut4LO1O4nguJ6kd1YNm9EYHZxirLLpU8LcYBXrQ2uOi1kd1x8k0JyWtk/s1600/vaiko.jpg
ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது?

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திரமாகவே காட்சி அளிப்பது - அவரது இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன்முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டியவையல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்தது அறிந்த செய்தியாகும்.

அவரது தற்போதைய ஆலோசகர் சோ., சுப்ரமணிய சுவாமி இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்னையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?

தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட "பொடா" கொடுமையை தாங்கள் அரசியல் காரணமாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!


எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?


சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் "பளிச்சிடும்" நிலை உண்டு.


அதையொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத்தினீர்கள்.


- இவைபோன்ற பல்வேறு பிரச்னைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க.வாகவும் - அதன் தலைவர் கருணாநிதியுமாகத்தான் இருப்பார்கள்.

ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் "நீரடித்து நீர் விலகாது" என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி "விஸ்வரூபம்" எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!

தேர்தலில் மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.
வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கருணாநிதி - தங்களை அம்மையார் "பொடா"வில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்டபோதுகூட தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரைஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது தலைவர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.


உள்நோக்கமற்ற வேண்டுகோள் நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.


பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்
என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!"
இவ்வாறு அந்தக் கடித்தில் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதன் மூலம் வை கோவை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கலைஞர் திட்டம் போட்டிருக்கிறார்.. தாய்க்கழகத்தில் இணைய சான்ஸ் இருக்கு எனவே  ம தி மு க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

37 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் முதலாய்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாங்களும் முதல்ல வருவோம்ல..

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க.. இது ஓப்பன் கிரவுண்டு.. யார் வேணாலும் முதல்ல வரலாம்...

Unknown said...

சரி அப்படியே இருந்தாலும், கலைஞர் இருக்கும் தற்போதைய நிலையில் இதயத்தில் மட்டும் தானே கொடுக்க முடியும்.

Unknown said...

காங்கிரஸ் இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பது தான் உண்மையில் அரசியல் தற்கொலையாக இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைதான்.. சீட் தர முடியாது.. ஆனா சில்லறை தரலாம்.. அல்லது அடுத்த எலக்‌ஷன்ல அதை தர்றேன் இதை தர்றேன்னு கதை விடலாம்.. இப்போதைக்கு வை கோ வை இழுத்தா போதும்னு கலைஞர் நினைக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

>>பாரத்... பாரதி... said...

காங்கிரஸ் இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பது தான் உண்மையில் அரசியல் தற்கொலையாக இருக்கும்.

நிறைய பேர் இப்படி சொல்றாங்க.. என்னைப்பொறுத்தவரை காங்கிரஸ் + தி மு க 2ம் விரட்டப்படவேண்டியவர்கள்தான். அப்போதுதான் இலங்கைத்தமிழர்கள் ஆத்மா சாந்தி அடையும்

Unknown said...

என்னங்கடா இது இந்த குடும்பத்துக்கு எத்தன MAMA அடங்கொன்னியா!

சி.பி.செந்தில்குமார் said...

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்.. வந்துச்சா? வந்துச்சா? சொல்லு சொல்லு?

சக்தி கல்வி மையம் said...

அரசியலில் எதுவும் நடக்கலாம்...
ஆன்மீகப் பதிவு 4.00 மணிக்கா..

சி.பி.செந்தில்குமார் said...

ஆமா கருண்

செல்வா said...

ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள்னா என்ன ?

செல்வா said...

நான் போய் என்னைக் கேவலப்படுத்திய பிகர்கள் படிச்சிட்டு வரேன் .. இப்பத்தான் கொஞ்சம் ஆணி குறைஞ்சிருக்கு .. ஆனா மறுபடி ஆணி வந்திரும்போல

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

நான் போய் என்னைக் கேவலப்படுத்திய பிகர்கள் படிச்சிட்டு வரேன் .. இப்பத்தான் கொஞ்சம் ஆணி குறைஞ்சிருக்கு .. ஆனா மறுபடி ஆணி வந்திரும்போல

haa haa ஹா ஹா மேனேஜர் லீவாக்கும்?

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள்னா என்ன ?

இல்லை.. ஒரே ஊழலில் திளைத்தவர்கள்

தமிழ் 007 said...

தன்மான சிங்கம் எங்கேயும் போகாது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HOT NEWS....

WAITING FOR AANMIGA PATHIVU...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தமிழ் 007 said...

தன்மான சிங்கம் எங்கேயும் போகாது.

போனால் போகட்டும் போடா... (உங்களை இல்ல)இந்த அரசியலில் நிலையாய் ஒரே கட்சியில் இருந்தவர் யாரடா..

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HOT NEWS....

WAITING FOR AANMIGA PATHIVU...

ரொம்ப எதிர்பார்க்கறீங்க.. சுமாராத்தான் இருக்கும்

ரஹீம் கஸ்ஸாலி said...

நேற்று ஜெயலலிதா வைகோவிற்கு எழுதிய கடிதத்தை விட ...இன்னைக்கு வீரமணி எழுதிய கடிதம் இன்னும் அருமையா இருக்கே....வைகோ தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அறிவித்ததும் இருக்கும் கொஞ்ச பேரும் தாய் கழகத்தில்(தி.மு.க) கரைந்தாலும் ஆச்சர்யமில்லை.

ramalingam said...

இது அவருக்கான கடிதமல்ல. அவர் தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சி.

ராஜேஷ், திருச்சி said...

வைகோ முடிவால் எப்படியும் பலன் தி மு க வுக்கு தான் .

அ தி மு க மீது வெறியில் இருக்கும் ம தி மு க தொண்டர்களை உசுப்பி.. தி மு க வோட்டக (ஜெ க்கு எதிரான ஓட்டு என்ற அளவில்) மாற்றப்படும்.. ம தி மு க முக்கிய செயல் வீரரர்கள் திரை மறைவில் வளைக்கபடுவர்கள்.. மொத்தத்தில் தி மு க வுக்கு 30 தொகுதிகளில் லாபம்..

வைகோ தனித்து போட்டி என்றால் கூட ஓட்டுக்கள் பிரிந்து தன் இருக்கும்ம்.. ஆனால் இப்போது சிதராமல் தி மு க அள்ளிவிடும்.

என் ம தி மு க நண்பன் ஜெ மீது கோவத்தில் , ஆலந்தூரில் தி மு க வின் தா மோ அன்பரசுக்கு வாக்களிக்க முடிவெடுத்து விட்டான் .. 80 % மதிமுகவினர் இப்படி தன் வாக்களிப்பர்

ராஜ நடராஜன் said...

//ramalingam said...

இது அவருக்கான கடிதமல்ல. அவர் தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சி.//

முன்பெல்லாம் சினிமாவுக்கு பரிட்சைன்னாத்தான் பெயில் ஆகாதவங்க இருப்பாங்க.இப்பவெல்லாம் அரசியல்ல phd யே வாங்கிடுவாங்க போல இருக்குது:)

அஹோரி said...

மானங்கெட்ட மாமா வுக்கு டைம் பாஸ் ஆகல .. ஏதோ பேசுறார் ... யாரும் கண்டுகாதீங்க .

நிகழ்காலத்தில்... said...

வீரமணியின் அழைப்புக்கு காரணம் மு.க என்றாலும்...

யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவரோடு கூட்டுச்சேர வெட்கமில்லாமல் அழைப்பு..

ஊதுகுழல் போர்வாளை அழைக்கிறது:)

இதன் நோக்கம் மீண்டும் ஜெ வோடு கூட்டு சேர்ந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டுமே..

ஜெ தன் தவறுக்கு தேர்தலுக்கு பின் வருத்தப்படுவார்.

வைகோ நடுநிலை வகிக்கலாம். ஆனால் தொண்டர்கள் நிச்சயம் ஜெக்கு எதிரான நிலையை எடுப்பார்கள்.

ம்ம்ம்ம் பார்ப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

>>ரஹீம் கஸாலி said...

நேற்று ஜெயலலிதா வைகோவிற்கு எழுதிய கடிதத்தை விட ...இன்னைக்கு வீரமணி எழுதிய கடிதம் இன்னும் அருமையா இருக்கே....வைகோ தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அறிவித்ததும் இருக்கும் கொஞ்ச பேரும் தாய் கழகத்தில்(தி.மு.க) கரைந்தாலும் ஆச்சர்யமில்லை.


எனக்கு அப்படி நடக்கும் என தோன்றவில்லை.வை கோ ஆதரவாளர்கள் அம்மாவை வெறுக்கவே வாய்ப்பு உண்டு.அவை எல்லாம் தி மு கவுக்கு போகும்

சி.பி.செந்தில்குமார் said...

>>ramalingam said...

இது அவருக்கான கடிதமல்ல. அவர் தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சி.

கரெக்ட்

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜேஷ், திருச்சி said...

வைகோ முடிவால் எப்படியும் பலன் தி மு க வுக்கு தான் .

80 % உண்மை

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜ நடராஜன் said...

//ramalingam said...

இது அவருக்கான கடிதமல்ல. அவர் தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சி.//

முன்பெல்லாம் சினிமாவுக்கு பரிட்சைன்னாத்தான் பெயில் ஆகாதவங்க இருப்பாங்க.இப்பவெல்லாம் அரசியல்ல phd யே வாங்கிடுவாங்க போல இருக்குது:)

உபயம் - கலைஞர் .. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>அஹோரி said...

மானங்கெட்ட மாமா வுக்கு டைம் பாஸ் ஆகல .. ஏதோ பேசுறார் ... யாரும் கண்டுகாதீங்க

ஹா ஹா நல்ல பட்டம்..

தமிழ் அமுதன் said...

கீழே கொட்டி கிடக்கும் மதிமுக ஓட்டுகளை பொறுக்கும் முயற்சி.!

pichaikaaran said...

எது எப்படியோ... தான் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தி என வைகோ நிரூபித்துவிட்டார்

jothi said...

**தாய்க்கழகத்தில் இணைய சான்ஸ் இருக்கு எனவே ம தி மு க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...**

ஆழ‌ ம‌ர‌த்தின் விழுதுக‌ள் மீண்டும் வேரை நோக்கி??

Kumar said...

"வை கோ" வை ஜெயலலிதா நடத்திய விதம் சற்றும் ஏற்று கொள்ள முடியாத அநாகரிகமான ஒன்று...
இதை விட இவரை ஆதரிப்பதாக தினமலர்(மலம்) செய்தி தாள் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை.. நமது எம்.ஜி.யார் பத்திரிகையே தோற்றுவிடும் போல... இன்றைய தலைப்பு செய்தியில் "வை கோ ஓட்டம்" என்று பெரிதாக போட்டு அவரை அவமான படுத்தியுள்ளது...

"வை கோ" எப்போதும் எங்கும் ஓட மாட்டார்... இந்த அம்மா தான் தோற்றால் கொட நாடு ஓடி ஒளிந்து கொள்ளும்...

ssk said...

வைகோ ஒரு அவலமான ஆள். கழுத்தை பிடித்து தள்ளினாலும், செருப்படி பட்டாலும் ஜெவின் காலில் விழுந்து கிடப்பதை மட்டுமே விரும்ப வாய்ப்புண்டு. அவரின் முந்தைய நடவடிக்கைகள் இதை விளக்கும். ஈழ தமிழன் எப்படி போனால் என்ன என்று ஜெவின் காலில் சுற்றி பூனை போல் திரிந்ததே ஒரு எடுத்து காட்டு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதயம் இளித்தது, வாய் புளித்தது....!

Adirai Seithi said...

Yaar Yaarai Iluthlum Velvathu ADMK