Wednesday, March 23, 2011

வீட்டுக்காவலில் வைக்கபட்ட ஜெயலலிதா.... அதிமுக அதிர்ச்சி


http://makkalavaitherdhal2009.files.wordpress.com/2009/03/subramaniam-swamy.jpg?w=257&h=300 

இன்றைக்கு வெளியான ஜூனியர் விகடனில் வந்த அம்மா பற்றிய நியூஸ் பதட்டத்தை கிளப்பியது.அ தி மு க மத்தியிலும் சரி சாதாரண அரசியல் ஆர்வலர்களும் சரி , இந்த செய்தியை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தனர்...


 ஏனெனில் வெளியான இதழ் நம்பகத்தன்மை மிக்க விகடன் குரூப் நியூஸ்.. ஆனால் சொன்ன ஆள் அரசியல் காமெடியன் சு சுவாமி....அவரது பேட்டியும் எனது கமெண்ட்டும்.......


1. ''அ.தி.மு.க. வேட்பாளர் லிஸ்ட் முதலில் வெளியிட்டது எனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்லியதில் இருந்தே, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்கிற பரிதாப நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்! இரண்டாவது லிஸ்ட் இப்போது வெளி வந்து இருக்கிறது. இதாவது அவருக்குத் தெரியுமா, என்பது போகப் போகத்தான் நமக்குத் தெரியும்.

இதென்னங்க பெரிய பிரமாதம், ஏப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க..அவர் வந்து என்னை சந்தித்ததே எனக்கு நினைவில் இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விடப்போறரா ?இல்லையா?ன்னு பாருங்க...
 http://thatstamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg

2. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஜெயலலிதா பக்கம் வெற்றி என்கிற நிலை இருந்தது. இப்போது மாறி வருகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. 'மன்னார்குடி  கும்பல் பிடியில்... நவ துஷ்டக் கிரகங்களின் பிடியில்... ராகு கேது பிடியில் ஜெயலலிதா சிக்கிக்கொண்டு தவிக்கிறாரோ?' என்று சந்தேகப்படும் அளவுக்கு, அடுத்தடுத்த குழப்பங்களை செய்து வருகிறார்.

நவக்கிரகம்கறீங்க.. ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்..  அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க.

3. மெஜாரிட்டியான ஸீட்டுகளைப் பிடித்து, காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிவைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் திட்டம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் ராமதாஸைக் கூட்டணியைவிட்டு விரட்டினார். இப்போது வைகோவையும் அனுப்பிவிட்டார். விஜயகாந்த்தையும் அலைக்கழித்து விரட்டப் பார்த்தார். இப்படித் தப்பும் தவறுமாக ஜெயலலிதா அரசியலில் முடிவெடுப்பதாக வெளியில் பிரகடனப்படுத்தி, அவரது இமேஜை சீர் குலைக்கும்விதமாக செயல்படுகிறது அந்தக் கூட்டம்.

காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா அம்மா இமேஜ் டேமேஜ்தான் ஆகும்.
ராம்தாஸ் புற்றுநோய் மாதிரி.. விரட்டுனதே நல்லது...கேப்டன் இப்போ அம்மா கூட இருக்கறது நல்லதுதான்..  

http://thatstamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg

4. அ.தி.மு.க-வில் எந்தக் கட்சிகளை சேர்க்க வேண்டும்? யாரை கழட்டிவிட வேண்டும்? ஜெயலலிதா யாருடன் போனில் பேச வேண்டும்? யாரை நேரில் சந்திக்க வேண்டும்? இன்றைக்கு ஜெயலலிதா என்ன சேலை கட்ட வேண்டும்? என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ணுவது சசிகலாதான்!'' 

 மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...


5. , ''சசிகலா சொல்வதைச் செய்யும் ரோபோ பொம்மைதான் ஜெயலலிதா. சுயமாக அவரால் எதையும் செய்ய முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி இனி ஜெயலலிதா எங்கே பேசப்போகிறார்? பொறுப்பான எதிர்க்கட்சி என்கிற வகையில், முதலில் ஜெயலலிதா என்னுடன் ஆலோசனை செய்து இருக்கலாம். ஆனால், செய்தாரா? நானும்கூட, 'சசிகலா போயஸ் கார்டனில் இருக்கும் வரை பேசப் போவது இல்லை' என்று முடிவு எடுத்து இருக்கி​றேன். அதனால்தான், நானும் ஜெயலலிதாவுடன் தொடர்புகொள்ளவே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது!'' 

 அம்மா ஒரு கண்ணாடி மாதிரி.. யார் வந்து மோதுனாலும் விரிசல் விழத்தான் செய்யும்...


6. ''வைகோ இருந்தால், தேர்தலுக்குப் பிறகு காங்கிர​ஸுடன் கூட்டணி சேர முடியாதே? அதனால்தான், கழட்டிவிட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, புதிய கூட்டணி ஏற்படப்போகிறது. எம்.எல்.ஏ-க்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டு, குதிரை பேரங்கள் நடக்கும். முடிவில், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... முதல்வர் பதவியில் அமர மாட்​டார்கள். அமரப்போவது யார் என்கிறீர்களா? காங்​கிரஸ்! அதற்காகத்தான் சசிகலா மறைமுகமாக அரசியல்​ரீதியாக காய் நகர்த்துகிறார்!''

இதென்ன புதுக்கதை?காங்கிரஸ்க்கு டெபாசிட்டே கிடைக்காம கேவலப்படப்போகுது....
 http://img.dinamalar.com/data/uploads/WR_316760.jpeg

'7. 'சொன்னால் நம்ப மாட்டீர்கள். தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்பது முடிவானதே லண்டனில்! கடந்த சில நாட்களாக டெல்லியை சேர்ந்த முக்கிய அரசியல் வி.வி.ஐ.பி. ஒருவர் லண்டனுக்கு ஆஸ்துமா சிகிச்சைக்காகப் போனார். அங்கே புலிகள் ஆதரவாளர் ஒருவரை அவருக்கு ஏற்கெனவே தெரியும். அந்தத் தொடர்பு மூலம், சென்னையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரை அணுகி, தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன்!'' 

 பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே...



8. ''ஜெயலலிதாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பிவிடுவார்கள். இங்கே சசிகலாவின் திரை மறைவு அரசியல் தொடரும். அதன் மூலம் வரும் பலாபலன்களை நிர்வகிப்பார். அவரது டம்மிகள் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். மிடாஸ் மதுபான உற்பத்தி கம்பெனியானது சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படுவது. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஐந்து வருட தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது என்று கேட்டால், மயக்கமே போட்டுவிடுவீர்கள். அந்த அளவுக்கு தி.மு.க-வுடன் தொழில் முறைத் தொடர்புகள் உண்டு. இவை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், நடந்தது உண்மை. இதைப்போலவே, தேர்தலுக்குப் பிறகும் நான் சொன்னது நிச்சயமாக நடக்கும்!''


விட்டா சசிகலா ,கலைஞர் கூட்டு சதின்னு சொல்லிடுவீங்க போல....

42 comments:

அஞ்சா சிங்கம் said...

வடை ........

ரஹீம் கஸ்ஸாலி said...

பாவம்...சுவாமி.....வெயில் ஜாஸ்திபோல.....

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

நவக்கிரகம்கறீங்க.. ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்.. அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க.////

அட விடுங்க.....S-ல ஆரம்பிச்சு A-ல முடியுற பேருக்கெல்லாம் கஷ்டகாலம்ன்னு நம்ம நல்லநேரம் சதீஷ் சொல்லிருக்காப்ள...அந்த வரிசையில இப்ப சசிகலா வருவாருன்னு நினைச்சேன். ஆனா சசிகலாவோ J-ல ஆரம்பிச்சு A-ல முடியற பெயருடையவரை காலிபண்ணாம விடமாட்டார் போல....

சக்தி கல்வி மையம் said...

மூனாவது ஷோவும் சூப்பரு..

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி அரசியல் பதிவுல கமெண்ட் போட்டுட்டாரு.. யோவ் விக்க்கி... தக்காளி.. இப்போ என்னய்யா சொல்றே,,?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மூனாவது ஷோவும் சூப்பரு..

உங்க வாய் முஹூர்த்தம் பலிச்சா....

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மூனாவது ஷோவும் சூப்பரு..

உங்க வாய் முஹூர்த்தம் பலிச்சா....
-- என்னா பன்னுவீங்க...

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மூனாவது ஷோவும் சூப்பரு..

உங்க வாய் முஹூர்த்தம் பலிச்சா....
-- என்னா பன்னுவீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

கருண் விரும்பும் கில்மா பட டி வி டி ஃபிரீ

காங்கேயம் P.நந்தகுமார் said...

சுப்பிரமணிய சுவாமி விகடனுக்கு அளித்த பேட்டி நீங்கள் முன்பே கூறியது அதிர்ச்சியை தந்தது. சசிகலா என்ற சாவி இருந்தால் தான் ஜெ என்ற பொம்மை சுழலும் என்பது உண்மை போல் தெரிகிறது. அப்படியில்லை என்றால் வேட்பாளர் பெயர் பட்டியலை வெளியிட்டு விட்டு இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானது எனக்கே தெரியாமல் நடந்தது என்று ஜெ கூறியிருப்பாரோ? அவர் கூறியது போல் விஜயகாந்த் நிலைமை சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை நிலைதான். நல்ல கட்டுரையை வெளிச்சம் போட்டு காண்பித்த ஆவிக்கும் அதை நாங்கள் படிக்க வெளியிட்ட சி.பி. அண்ணாவிற்கும் பாரட்டுக்கள்

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

கருண் விரும்பும் கில்மா பட டி வி டி ஃபிரீ
---------மன்னிக்கவும் வேறு ஏதேனும்...

சக்தி கல்வி மையம் said...

எதாவது பதிவு மெயிலில் அனுப்பினால் அவசர காலத்திற்கு உதவும்..

சி.பி.செந்தில்குமார் said...

லத்திகா விமர்சனம்?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
ப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க../////

இப்படி உண்மையல்லாம் வெளியில சொல்லக்கூடாது..

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

சுப்பிரமணிய சுவாமி விகடனுக்கு அளித்த பேட்டி நீங்கள் முன்பே கூறியது அதிர்ச்சியை தந்தது. ச

காங்கேயங்காளை கரெக்ட்டாத்தான் சொல்லி இருக்காரு.. ஆனா கேப்டன் கறிவேப்பிலையா ஜெவுக்கு தோணுனாலும் இந்த கூட்டணியால அம்மாவை விட கேப்டனுக்கே லாபம்.. பொறுத்திருந்து பாருங்க

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
ப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க../////

இப்படி உண்மையல்லாம் வெளியில சொல்லக்கூடாது.

ஹி ஹி ..எதைத்தான் அப்புறம் சொல்வது?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்.. அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க./////////

அது ஜென்ம கிரகம் அது விலகாதுங்க..

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

லத்திகா விமர்சனம்?--- அப்ப படம் பார்த்திர்க்கிங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...

//////

இலக்கியம் படிச்சிருக்கின்னு தெரியுது..

சக்தி கல்வி மையம் said...

நம்ம கடை ரெண்டாவது ஷோவே ஈயடிக்குதே என்ன பன்னலாம்?

சக்தி கல்வி மையம் said...

நம்ம கடை ரெண்டாவது ஷோவே ஈயடிக்குதே என்ன பன்னலாம்?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவ்வளவுதான் கிளம்பியாச்சி..

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...



அது ஜென்ம கிரகம் அது விலகாதுங்க..

விலக்க நினைத்தால் விலக்கலாம் வழியா இல்லை பூமியில்?

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நம்ம கடை ரெண்டாவது ஷோவே ஈயடிக்குதே என்ன பன்னலாம்?

அட விடுங்க.. என்ன்மோ மாமா பொண்ணையே பறி குடுத்த மாதிரி பேசறீங்க.. இன்னைக்கு விட்டா நாளைக்கு பிடிச்சிட்டா போகுது...

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...

////
மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...

//////

இலக்கியம் படிச்சிருக்கின்னு தெரியுது..

ஹி ஹி வனசுதா டீச்சர் சொல்லிக்குடுத்தது..

Unknown said...

அடங்கொன்னியா இந்த கஸாலி மாப்ளைக்கு என்னாச்சி சாமி அலை அடிசிட்டுதா ஹிஹி!

வைகை said...

இவரு சிலநேரம் சொல்றது நடக்குது..பல நேரம் ஊத்திக்கிது.... இவரு நல்லவரா கெட்டவரா?

சக்தி கல்வி மையம் said...

நம்ம நல்லநேரம் எங்கபோனாரு தெரியுமா... பதிவும் போடல... என்னாச்சு?

Anonymous said...

அம்மா அரெஸ்ட்...
கொடநாட்டில் ரெஸ்ட்
மக்கள் பாத்துவாங்க ஜெஸ்ட்..

ரஹீம் கஸ்ஸாலி said...

விக்கி உலகம் said...

அடங்கொன்னியா இந்த கஸாலி மாப்ளைக்கு என்னாச்சி சாமி அலை அடிசிட்டுதா ஹிஹி!
////

நமக்கு ஒன்னும் ஆகல....நீ என் அறிவுகண்ண தொறந்துட்ட மாம்ஸ்....

Unknown said...

" ரஹீம் கஸாலி said...
விக்கி உலகம் said...

அடங்கொன்னியா இந்த கஸாலி மாப்ளைக்கு என்னாச்சி சாமி அலை அடிசிட்டுதா ஹிஹி!
////

நமக்கு ஒன்னும் ஆகல....நீ என் அறிவுகண்ண தொறந்துட்ட மாம்ஸ்...."

>>>>>>>>>>>>>>>

ரைட்டு மாப்ள நம்ம கடைக்கு வாங்க ஜோதில கலந்துக்கோங்க ஹிஹி!

ஷர்புதீன் said...

she always in house arrest even he was a opposition leader.,
when she roaming outside of the home/kodanaad??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hot news... but you made it very hot news.

Unknown said...

தல நீங்க லத்திகாவ பார்த்துட்டீங்கன்னு நல்லாவே தெரியுது, விமர்சனம் ப்ளீஸ்..

MANO நாஞ்சில் மனோ said...

எங்கிருந்துய்யா இத்தனை படங்களையும் சுடுகிரீர்....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்ன வேணா சொல்லுங்க சுப்ரமணியன் சுவாமி ஒரு கட்ஸ் உள்ள ஆளுதான். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இவருக்கு கமிஷன் கிடைக்கலன்னதும் என்னமா கிளறி விட்டார் பாருங்க ம்ம்ம்ம்....

கோவை நேரம் said...

வாசகர் களின் வேண்டு கோளுக்கு இணங்க லத்திகா விமர்சனம் வெளியிடும் படி கேட்டுகொள்கிறோம் ....எவ்ளவோ பார்த்தாச்சு ...இது மட்டும் முடியாதா என்ன ...?

உணவு உலகம் said...

வணக்கம் சார், வந்திட்டேன், வாக்கிட்டேன்,வர்ரேங்க.

தமிழ்க்காதலன் said...

அன்பு செந்தில், சிரிக்கவும் முடியல, சகிக்கவும் முடியல. நம்ம நிலைமை எப்போ சரியாகும்?. இந்த முறை கிடைத்த சந்தர்ப்பத்தை அம்மா நழுவ விட்டு விட்டார். மீண்டும் நாம் ஒரு உள்நாட்டுப் புரட்சிக்கு தயாராக வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

தமிழ்க்காதலன் said...

அன்பு செந்தில், சிரிக்கவும் முடியல, சகிக்கவும் முடியல. நம்ம நிலைமை எப்போ சரியாகும்?. இந்த முறை கிடைத்த சந்தர்ப்பத்தை அம்மா நழுவ விட்டு விட்டார். மீண்டும் நாம் ஒரு உள்நாட்டுப் புரட்சிக்கு தயாராக வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

பூங்குழலி said...

விட்டா சசிகலா ,கலைஞர் கூட்டு சதின்னு சொல்லிடுவீங்க போல

கண்டிப்பாக கூட்டு இருக்கலாம் ..இதே போல் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அதிமுக பெருந்தலைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்களாம் ...அரசியல்ல சகஜம் தான்