Saturday, March 26, 2011

திருச்சியில் கலைஞரின் அத்து மீறிய பேச்சும், தேர்தல் கமிஷனை வம்புக்கு இழுத்த ஏச்சும் - காமெடி கும்மி


திருச்சியில்  25. 3.2011 நேற்று ( வெள்ளிக்கிழமை )இரவு நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதும்  அதற்கான என் கேள்விகளும்...


 தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் .  "எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது,


ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவது மட்டும் சரியா தலைவரே..?


"நான் 80 வருடத்துக்கு முன்பு திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய குடும்பத்தில் பிறந்தேன். அங்கு சாதி, மத, பண ஆதிக்கம் இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் கருத்துக்களை காதால் கேட்டும், அண்ணாவின் அரிச்சுவடிகளை கண்ணால் பார்த்தும், இரண்டு பேரின் அறிவுரைகளை கேட்டும் இந்த இயக்கத்தை நடத்தும் வலிமையை பெற்றேன்.


தலைவரே ... அம்மா மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணாம கமுக்கமாவும், விஞ்ஞானப்பூர்வமாவும் ஊழல் பண்ணும் வித்தையை யார் கிட்டே கத்துக்கிட்டீங்க..? ஒரு வேளை சுயம்புவா..?
 

இப்படி திரட்டப்பட்ட வலிமையை மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எண்ணி உழைக்கின்றேன். அந்த காலத்தில் நான், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒரு கருத்தை அன்பிலாரிடம் கேட்டால் அவர் அண்ணாவிடம் கேட்போம் என்று சொல்வார்.


அன்று முதல் இன்று வரை உங்க கூடவே இருக்கும் விசுவாசி ஆன அன்பழகனை ஏன் துணை முதல்வர் ஆக்காம ஸ்டாலினை துணை முதல்வர்ஆக்கினீங்க தலைவரே..? 

உடனே நாங்கள் அண்ணாவிடம் கேட்டால் நமது காதர் மொய்தீனிடம் அந்த கருத்தை கேட்டு என்னிடம் சொல்லுங்கள், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார். அப்படிப்பட்ட காதர் மொய்தீன் இங்கு பேசும்போது அவற்றை சற்று எண்ணிப் பார்த்தேன்.


எல்லாத்தையும் எண்ணிப்பாருங்க.. ஆனா இலங்கைத்தமிழர் நிலையையும்,இங்கே இருக்கற தமிழர் நிலையையும், மீனவர் வாழ்வையும் நினைச்சுப்பார்த்துடாதீங்க.... 

எனது அரசியல் ஏற்றத்துக்கு, சமுதாய பணிக்கு வித்திட்டது திருச்சி மாவட்டம் தான். இந்த கருணாநிதியை அரசியலில் முதலில் வளர்த்தது திருச்சி மாவட்டம் தான். ஆரம்பத்தில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப் பெரிய எழுச்சியைத் தந்து வெற்றி பெற்றது. அதற்கு திருச்சி மாவட்டத்தின் தீரர்கள், உடன் பிறப்புகள் முக்கிய காரணம்.


அடடா... திருச்சி செண்ட்டரான ஊருன்னு நினைச்சேன்.. இப்படி டெண்ட்டர்ரான ஊரா?பாவம்.. அந்த ஊரு பண்ணுன பாவத்துக்கு பரிகாரத்தை எப்படி செய்யப்போகுதோ.. பார்ப்போம் ஸ்ரீரங்கத்துல நிக்கற அம்மாவை ஜெயிக்க வைக்குதான்னு... 

 

நான் இங்கு பார்த்து பழகிய நண்பர்களை எண்ணிப்பார்க்கிறேன். அன்பில் தர்மலிங்கம் எப்போதும் எனக்கு முழு ஆதரவு தருபவராக இருந்து வந்துள்ளார். அழகுமுத்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் துணிச்சலாக பேசக் கூடியவர். ஒரு சமயம் அவர் என்னிடம் பேசும்போது யாதவ சமுதாயத்திற்கு மந்திரி பதவி இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் யாதவர் என்றாலே மந்திரிதான் என்று சொன்னேன்.


நல்லா வெறும் வாயிலயே முழம் போடறதுல தமிழ் இனத்தலைவரை அடிச்சுக்க ஆள் இல்ல..  

எம்.எஸ்.மணி எங்களுக்கு மாவட்ட கணக்கு பிள்ளையாக இருந்தார். காலையிலும், மாலையிலும் அவர் அயராது உழைத்தார். நாகசுந்தரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், இளமுருகு பொற்செல்வி, குளித்தலை முத்துகிருஷ்ணன், வெற்றிகொண்டான், காமாட்சி இப்படி எத்தனையோ பேரை மறக்க முடியாது. வெற்றிகொண்டானின் இடி முழக்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.


அவங்களுக்கெல்லாம் ஊழல்ல பங்கு குடுக்க மாட்டீங்க.. கேட்டா என் இதயத்துல இடம் உண்டுன்னு சொல்வீங்க.. எல்லாத்துக்கும் பிரிச்சுக்குடுங்க தலைவரே....
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6-வது முறையாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவிப்போட்டிக்காக இறங்கி இருக்கிறேன். எனக்கு போட்டி யார்? எதிரி யார்? எதிர்ப்பாளர் யார்? யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று தம்பி திருமாவளவன் பேசினார். எனக்கு எதிரி, எதிர்ப்பாளர் என்று யாரையும் நான் கருதவில்லை.

அதான் பிரம்மாஸ்திரமான மிக்ஸி,கிரண்டர் இலவசம்கற  துருப்புச்சீட்டு இருக்கே.. உங்களுக்கு சி எம் சீட் கன்ஃபர்ம் தலைவரே...


என்னை பிடிக்காதவர் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய கதைகளை படித்து பார்த்த அண்ணா தம்பி இன்னும் நீ நன்றாக படித்து விட்டு வா என்றார். அண்ணா சொல்லி நான் செய்யாத ஒரு காரியம் அது ஒன்று தான். அப்படி படித்து விட்டு வந்து இருந்தால் இன்று கருணாநிதி எம்ஏ, பி.ஏ என்று பெயருக்கு பின்னால் போட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட தந்தை பெரியாரின், அண்ணாவின் தம்பி என்ற ஒரே பெருமை போதும் என்று நினைப்பவன் நான். அந்த பெருமையின் காரணமாக தான் 6-வது முறையாக என்னை முதல்மைச்சராக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.


அண்ணா சொல்லி நீங்க செய்யாத காரியம் வேணா ஒண்ணா இருக்கலாம் தலைவரே.. ஆனா அண்ணா சொல்லாமல் நீங்க செஞ்ச காரியம்தான் எத்தனை எத்தனை....அதன் மூலம் கிடைச்ச வருமானம் தான் எத்தனை..? 

நான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது அந்த தொகுதி மக்கள் முசிறிக்கும், குளித்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்த நான் முதலமைச்சர் ஆனதும் பாலம் கட்டி கொடுத்ததோடு அதனை திறந்தும் வைத்தேன்.

 அந்த பாலம் கட்டுன மேட்டர்ல எத்தனை தலைவரே தேறுச்சு..? மன்னிச்சுக்குங்க.. அது உங்க குடும்ப மேட்டரு... 


இப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து அறிந்து அதற்கு பரிகாரம் காணவும், சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் தான் எனது பொது வாழ்வில் பெரும்பகுதியை செலவழித்து இருக்கிறேன்.

ஆமாம் தலைவரே.. அடிக்கடி உங்களை சினிமா ஃபங்க்‌ஷன்லயும், பாராட்டு விழாக்கள்லயும் பார்க்க முடியுது.. உலக அளவில இந்த அளவு ஒரு சி எம்  கேளிக்கை விழாக்களில் பங்கெடுத்ததே இல்லையாம் தலைவரே..
நான் செய்த சமுதாய பணிகளை எல்லாம் பட்டியல் இட்டு பேச நேரம் இல்லை. தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிற நேரம் தாண்டிவிடும். அதுவும் இப்போது இருக்கிற தேர்தல் ஆணையம் ரொம்ப கண்டிப்பான தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனில் இருக்கிற சில அதிகாரிகளின் போக்கு அப்படிப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்த பின்னரும் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது.


 விடுங்க தலைவரே.. 1000 கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஓட்டுப்போட பணம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை நமக்கு தோல்வி பயம் இல்லை..

தேர்தல் கமிஷன் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 நடுநிலைமைன்னா தி மு க கட்சிக்காரங்க கள்ள ஓட்டுப்போடறப்ப கண்டுக்கக்கூடாது ...அதானே தலைவரே..?



நடுநிலையோடு பெறும் வெற்றி தான் நிலையானது.
இதற்கு நான் அடிக்கடி சொல்லக்கூடிய கேரளத்து புராணக்கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அங்கு நல்லாட்சி நடத்தி வந்த மாவலி மன்னனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு பெருமான் அழித்தது போல் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சியையும் அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். கேரளத்து மக்களை போல் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் பெரியாரால் தயார் படுத்தப்பட்டவர்கள். தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்," 


தலைவரே.. கேரளாவுல படிச்சவங்க அதிகம்.. சிந்திச்சு ஓட்டுப்போடுவாங்க.. இங்கே இருக்கற பசங்க எல்லாம் படிக்காத பசங்க... எவனும் சிந்திக்க மாட்டான்..ஓட்டுக்கு பணம் வருதா ஓக்கேம்பான்.. மிக்சி கிடைக்குது, கிரைண்டர் கிடைக்குதுன்னு அவனவன் குதிக்கறான்...  கண்டிப்பா நம்ம ஆட்சி தான் தலைவரே,, ஒண்ணும் கவலைப்படாதீங்க. தமிழனுக்கு விடிவு காலமே வராது... நீங்க தான் தமிழினத்தை காக்கும் தலைவர்...

62 comments:

சக்தி கல்வி மையம் said...

1..

சி.பி.செந்தில்குமார் said...

2

சக்தி கல்வி மையம் said...

கண்டிப்பா நம்ம ஆட்சி தான் தலைவரே,, ஒண்ணும் கவலைப்படாதீங்க. தமிழனுக்கு விடிவு காலமே வராது... நீங்க தான் தமிழினத்தை காக்கும் தலைவர்... ////////எப்பத்திலிருந்து தி.மு.க விற்கு பிரசாரம் பன்ன ஆரம்பிச்சிட்டீங்க...

சக்தி கல்வி மையம் said...

எல்லாரும் மேட்ச் பாக்க போயிட்டாங்களே ... இப்ப பதிவு போட்டு கலக்கரீங்க மாப்ள....

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

////////எப்பத்திலிருந்து தி.மு.க விற்கு பிரசாரம் பன்ன ஆரம்பிச்சிட்டீங்க...

hi hi ஹி ஹி இது வஞ்சப்புகழ்ச்சிப்பிரச்சாரம்

சக்தி கல்வி மையம் said...

நான் கூட மேட்ச்சில தான் இருந்தேன்... இங்கிலாந்து 2 விக்கெட் விழுந்திடுச்சி .. போர் அதான் இந்த பக்கம் வந்தேன்..

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எல்லாரும் மேட்ச் பாக்க போயிட்டாங்களே ... இப்ப பதிவு போட்டு கலக்கரீங்க மாப்ள....

ஓ அதான் கூட்டம் கம்மியா இருக்கா? கூட்டத்தை பார்த்து மயங்க நான் என்ன கலைஞரா?

Unknown said...

மாப்ள மாப்ள ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் கூட மேட்ச்சில தான் இருந்தேன்... இங்கிலாந்து 2 விக்கெட் விழுந்திடுச்சி .. போர் அதான் இந்த பக்கம் வந்தேன்..

உலகிலேயே தனது நேரத்தை அதிகமாக கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஒதுக்குபவர்கள் இந்தியர்களே

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

மாப்ள மாப்ள ஹிஹி!

பொண்ணூ பொண்ணு ஹா ஹா

சக்தி கல்வி மையம் said...

ராணா நியூஸ் ஒன்னு இருக்கு போட்டா தேருமா?

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

மாப்ள மாப்ள ஹிஹி!--- யோவ் மாப்ய இருக்கியா நீ ...

சி.பி.செந்தில்குமார் said...

ம் .. போடனும்னு முடிவு பண்ணிட்டா தக்காளி விக்கி மாதிரி கலக்கிடனும்... தயங்க்கூடாது

Unknown said...

டேய் நீ டொய்ன் நூல்ல தூக்கு போட்டுக்க ஹிஹி!
அடுத்து அய்யா ஹிஹி

சக்தி கல்வி மையம் said...

காலைல கானோமே ... தியேட்டர் காரனுங்க தொரத்திட்டானுங்களா?

Unknown said...

உயிரு போனா நமக்கு ம று போனா மாதிரிடா...........இவன்குங்களுக்கு அம்மா மேலுடா........

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

டேய் நீ டொய்ன் நூல்ல தூக்கு போட்டுக்க ஹிஹி!
அடுத்து அய்யா ஹிஹி

நல்ல எண்ணம்யா.. உன்னை உன் சம்சாரம் கிட்ட போட்டுக்குடுக்காம நான் ஓய மாட்டேன்.. இது உன் ஆள் பி ஏ மேல சத்தியம்

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காலைல கானோமே ... தியேட்டர் காரனுங்க தொரத்திட்டானுங்களா?

நான் தான் சொன்னேனே கரண்ட் ஈரோட்ல டெயிலி 9 டூ 12 கட்

ராஜி said...

தேர்தலுக்குள் உடன்பிறப்புகளிடம் அடி வாங்காம விடுறதில்லை னு சென்னிமலை முருகனிடம் எதாவது சபதம் போட்டிருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உயிரு போனா நமக்கு ம று போனா மாதிரிடா...........இவன்குங்களுக்கு அம்மா மேலுடா........

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. நம்ம விக்கி அம்மா கட்சி.. அய்யா கட்சிக்காரங்க எல்லாம் மைனஸ் ஓட்டு குத்துங்க.. 150 பதிவு போட்டும் இன்னும் ஒரு மைனஸ் கூட வர்லைன்னு புலம்பறார் மனுஷன்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

தேர்தலுக்குள் உடன்பிறப்புகளிடம் அடி வாங்காம விடுறதில்லை னு சென்னிமலை முருகனிடம் எதாவது சபதம் போட்டிருக்கீங்களா?

அரோகரா அரோகரா

Unknown said...

அடப்பாவி நல்லா இரு ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

எலக்ஷன் தேதி அறிவித்தவுடன் எங்க ஏரியாவுல கரன்ட் கட் இல்ல..

Unknown said...

டேய் சாவுக்கு துனிஞ்சவன்கிட்ட சரக்கு கேக்குறியா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எலக்ஷன் தேதி அறிவித்தவுடன் எங்க ஏரியாவுல கரன்ட் கட் இல்ல..

பரவால்ல.. போட்டுத்தாக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

டேய் சாவுக்கு துனிஞ்சவன்கிட்ட சரக்கு கேக்குறியா ஹிஹி!


இந்தியப்பதிவரை டேய் என அழைத்து அவமானப்படுத்திய ஃபாரீன் பதிவர்.. ஓ பதிவர்களே பதிவர்களே.. ஒன்று கூடுங்கள்... நம்மை நிரூபிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஹி ஹி

குரங்குபெடல் said...

Sixer Attack . . .
Well. . . Thanks

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

டேய் சாவுக்கு துனிஞ்சவன்கிட்ட சரக்கு கேக்குறியா ஹிஹி!


இந்தியப்பதிவரை டேய் என அழைத்து அவமானப்படுத்திய ஃபாரீன் பதிவர்.. ஓ பதிவர்களே பதிவர்களே.. ஒன்று கூடுங்கள்... நம்மை நிரூபிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஹி
>>>>>>>>>>>>>>>>>>>

டேய் இப்பவும் சொல்றேன் நீ யாரு கட்சின்னு சொல்லிடு இல்ல பின்னிபுடுவேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

இப்போதைக்கு தப்ஸி கட்சி

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

இப்போதைக்கு தப்ஸி கட்சி
---- யாருப்பா இந்த தப்ஸி..

Unknown said...

பொண்ணுன்னு சொல்லி நீயும் அம்மா கட்சில சேந்துட்டியா ஹிஹி !

Prakash said...

கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது எதிரணியில் உள்ளவர்களுக்கு உண்டா. சமூக நீதி என்றால் என்ன என்று ஒரு 10 வரி எழுத முடியுமா. கேப்டனால். ஒரு பத்து வரி பேச முடியுமா நடிகர் சரத்குமாரால். ஒரு பத்து வரி மேடைகளிலே உரையாற்ற முடியுமா அம்மா அவர்களால். சமூக நீதி என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் கலைஞரை எதிர்க்கிறார்கள்.

எல்லாம் தோற்றம் அளிக்கிற தலைவர்கள். கொஞ்சம் சிரமப்பட்டாவது சிரித்து பேசு மற்றவர்களிடம் என்று சொல்லி உட்காரவைத்து சிரிக்கச்சொல்வார்கள். மேடைக்கு வரும்போதாவது கொஞ்சம் நேரம் உள்ளுக்குள் போடாமல் பேசு என்று சொல்லி மேடையிலே ஏற்றி வந்து நிறுத்துவார்கள். ஏதாவது எழுதி தந்தாவது படி என, அறிக்கையை எழுதித் தந்து படிக்கச் சொல்வார்கள். அப்படி எழுதித் தருகிற அறிக்கையை படிக்கிற தலைவர்கள். அவர்கள் தோற்றம் அளிக்கிற தலைவர்கள்.

திராவிட இயக்க கொள்கைகள் என்றால் என்ன. அண்ணா சொன்ன கொள்கை எது. மாநில சுயாட்சிதான் அண்ணாவின் இறுதி மூச்சு கொள்கையாக இருந்தது என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநில சுயாட்சியை பற்றி ஓரிரு வரிகளாகவது எழுதுகிற ஆற்றல் கலைஞரை எதிர்ப்பவர்களுக்கு உண்டா. என்ன தகுதி இருக்கிறது.



கலைஞரை போல குறளோவியம் எழுத வேண்டாம். கலைஞரைப் போல தொல்காப்பிய பூங்கா எழுத வேண்டாம். கலைஞரைப் போல இலங்கிய நடையிலே அறிக்கைகள் எழுத வேண்டாம். சொந்தமாக சுயமாக ஒரு பிரச்சனையைப் பற்றி அறிக்கை எழுதுகிற ஆற்றல் அந்த எதிரணியில் இருப்பவர்களுக்கு உண்டா. எந்த தகுதியுமே இல்லை. மக்களை நேரிக்கிற பண்பு உண்டா. கலைஞரை விமர்சிப்பது மட்டும்தான் அவர்களது கொள்கை.

- Thiruma's speach
http://www.nakkheeran.in/users/Election2011.aspx?E2011=436

MANO நாஞ்சில் மனோ said...

//ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவது மட்டும் சரியா தலைவரே..?//

நறுக்............

சி.பி.செந்தில்குமார் said...

சார்.. இப்போ பிரச்னை அதுவல்ல.. கலைஞர் சிறந்த இலக்கிய வாதி,பேச்சாலர்,எழுத்தாளர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அவரளவுக்கு சாதிக்க யாராலும் முடியாது என்பது உண்மை தான்.. நான் கேட்பது இலங்கைத்தமிழர்களுக்காக என்ன செய்தார்?

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவரே ... அம்மா மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணாம கமுக்கமாவும், விஞ்ஞானப்பூர்வமாவும் ஊழல் பண்ணும் வித்தையை யார் கிட்டே கத்துக்கிட்டீங்க..? ஒரு வேளை சுயம்புவா..?//

யார்யா அந்த சுயம்பு...? எந்த ஜெயில்ல இருக்கான்...?

MANO நாஞ்சில் மனோ said...

//அன்று முதல் இன்று வரை உங்க கூடவே இருக்கும் விசுவாசி ஆன அன்பழகனை ஏன் துணை முதல்வர் ஆக்காம ஸ்டாலினை துணை முதல்வர்ஆக்கினீங்க தலைவரே..? //

எலேய் மக்கா பப்ளிக் பப்ளிக்....

MANO நாஞ்சில் மனோ said...

//எல்லாத்தையும் எண்ணிப்பாருங்க.. ஆனா இலங்கைத்தமிழர் நிலையையும்,இங்கே இருக்கற தமிழர் நிலையையும், மீனவர் வாழ்வையும் நினைச்சுப்பார்த்துடாதீங்க.... //

அட மூச்....வாயை மூடு....

MANO நாஞ்சில் மனோ said...

//நல்லா வெறும் வாயிலயே முழம் போடறதுல தமிழ் இனத்தலைவரை அடிச்சுக்க ஆள் இல்ல.. //

என்னாது தமிழின தலைவனா......ஏன்யா ஒரு ஆந்திரா காரனா தமிழின தலைவனா வரணும்..போயி வாயை கழுவும் ஒய்....

MANO நாஞ்சில் மனோ said...

//அதான் பிரம்மாஸ்திரமான மிக்ஸி,கிரண்டர் இலவசம்கற துருப்புச்சீட்டு இருக்கே.. உங்களுக்கு சி எம் சீட் கன்ஃபர்ம் தலைவரே...//

ஆப்புக்கே ஆப்பு வைக்கிற கில்லாடியா கலீஞர்....

Mohammed Arafath @ AAA said...

இது அரசியல் விசயமெல்லாம் எனக்கு தேவை இல்லை...
உங்க கிட்ட ஒரு கேள்வி...
.
.
.

.
.
"சாந்தி அப்புறம் நித்யா" பட விமர்சனம் எப்போ எழுதுவீங்க..? :)

Unknown said...

அண்ணே என் தளத்தில் வந்து மன்னிப்பு கேட்க்குமாறு அன்போடு அழைக்கிறேன்

Unknown said...

//தமிழனுக்கு விடிவு காலமே வராது... //
நச் CPS !

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
நான் தான் சொன்னேனே கரண்ட் ஈரோட்ல டெயிலி 9 டூ 12 கட்//
இங்கயும் அப்படித்தான்.

உணவு உலகம் said...

உருப்படியா ஒரு கமென்ட் அரசியல் பதிவில போட்டாச்சு!

Prakash said...

Breaking News: New Twist in ADMK & DMDK Alliance, After the last day for filling nominations, Jaya has changed her original campaign plan by Excluding DMDK constituencies, even skipping Vijaykant’s Rishivandiam. Jaya is NOT going to campaign in majority of DMDK constituencies. Jaya is NOT going to do any joint campaign meetings along with any alliance parties.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50959

Jaya’s plan is clear,
1. No alliance with DMDK or other parties.
2. To ensure that DMDK Not contesting in 160 ADMK constituencies and Split DMK Opposition Votes, she has made Vijaykat to believe that ADMK is having alliance with DMDK.
3. Now, the filling of nominations is closed and in 160 ADMK constituencies, there won’t be any 3rd party to split DMK Opposition votes.
4. In 41 DMDK constituencies, cooperation from ADMK will be poor or minimal.
5. Finally Vijaykant has become a comedy & dummy piece.

DMDK supporters need to see Jaya & ADMK attitude and take right decision.

jothi said...

//கேரளாவுல படிச்சவங்க அதிகம்.. சிந்திச்சு ஓட்டுப்போடுவாங்க.//

வ‌ள‌ர்ச்சியின் எல்லா வித‌த்திலும் கேர‌ளாவைவிட‌ த‌மிழ் நாடு முன்ன‌ணியில் இருக்கிற‌து. அங்குள்ள‌வ‌ர்க‌ள் ப‌டித்த‌ முட்டாள்க‌ள்??

ஹேமா said...

கார்ட்டூன்கள்தான் கதை சொல்லுது சிபி !கலைஞருக்கு ஏனோ மூளை சரில்லாமப் போச்சு.இனிச் சரியாகாது !

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! அப்புறமா வர்றேன்... ஆறட்டும்...ரொம்ப சூடா இருக்கு இந்த பதிவு.


எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

பொ.முருகன் said...

ஏன் ஜி கருணாநிதி மேல இவ்வளவு காண்டு. 2ஜி மட்டுமா வேற ஏதாவது காரணமா.கருணாநிதிய சப்போர்ட் பண்ணுங்க,ராசா மாதிரி வாழவய்பார் உங்கள.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னிக்கு கொஞ்சம் லேட் பாஸ்...

காமெடி குமமி தேர்தல் வரை பஞ்சம் இருக்காது.. ம்.. கலக்குங்க..

சி.பி.செந்தில்குமார் said...

Mohammed Arafath @ AAA said...

இது அரசியல் விசயமெல்லாம் எனக்கு தேவை இல்லை...
உங்க கிட்ட ஒரு கேள்வி...
.
.
.

.
.
"சாந்தி அப்புறம் நித்யா" பட விமர்சனம் எப்போ எழுதுவீங்க..? :)

பந்திலயே உட்கார வேண்டாம்கறாங்க...இலை ஓட்டைன்னு சொன்ன கதையா.. படமே இன்னும் ரிலீஸ் ஆகலைண்னே.. பிக்சர் பொட்டி வர்லை.. ஹா ஹா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏங்க பாட்டு ரசிகன் உங்களுக்கு ஒரு பாட்டு போட்டு கலாய்ச்சியிருக்கான் நீங்க இன்னும் பார்க்கல...

நான் தரேன் லீங்க்..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
"சாந்தி அப்புறம் நித்யா" பட விமர்சனம் எப்போ எழுதுவீங்க..? :)/////

இந்த விமர்சனத்திற்கு நானும் தயாரா இருக்கேன்..

எல்லாம் ஒரு ஆசைதான்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணத்தில் பாஸாக்கிவிட்டாச்சி...

ரஹீம் கஸ்ஸாலி said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ் மணத்தில் பாஸாக்கிவிட்டாச்சி...
ஏங்க....ஒரு வாத்தியார் பாஸ் போடறது பெரிய விசயமா?

செங்கோவி said...

தலைவரே..எதுக்கு தலைப்புல காமெடிக்கும்மி-ன்னு போட்டிருக்கீங்க? சீரியஸ் பதிவு தானே இது..

டக்கால்டி said...

அண்ணே எனக்கு ஒரு டவுட்டு ண்ணே...தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் ஊர்ல இருப்பீங்களா?

டக்கால்டி said...

நல்ல எண்ணம்யா.. உன்னை உன் சம்சாரம் கிட்ட போட்டுக்குடுக்காம நான் ஓய மாட்டேன்.. இது உன் ஆள் பி ஏ மேல சத்தியம்
March 26, 2011 3:27 PM//

அண்ணே நீங்களும் அய்யா மாதிரி வாய்ப்பந்தல் போடாம செயல்ல காமியுங்க...

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

அண்ணே எனக்கு ஒரு டவுட்டு ண்ணே...தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் ஊர்ல இருப்பீங்களா?

hi hi ஹி இப்படி எல்லாம் மிரட்டுனா எப்படி?

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

தலைவா... அடி தூள்ள்ள்ள்ள்ள்ள்...

போட்டு தாக்கு தாக்கி இருக்கீயளே!!

//திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.//

“தல”க்கு நல்ல புத்தி தரணும்னு அவிய்ங்க வூட்டுக்காரய்ங்க என்னல்லாம் பண்றாங்கன்னு...

அப்டியே இதையும் பாருங்க தலைவா.

"விதை” – குறும்படம் http://jokkiri.blogspot.com/2011/03/blog-post_22.html

உலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க... http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post_26.html

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

தலைவா... அடி தூள்ள்ள்ள்ள்ள்ள்...

போட்டு தாக்கு தாக்கி இருக்கீயளே!!

//திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.//

“தல”க்கு நல்ல புத்தி தரணும்னு அவிய்ங்க வூட்டுக்காரய்ங்க என்னல்லாம் பண்றாங்கன்னு...

அப்டியே இதையும் பாருங்க தலைவா.

"விதை” – குறும்படம் http://jokkiri.blogspot.com/2011/03/blog-post_22.html

உலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க... http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post_26.html

Shankar said...

Dear CP Senthil,
I am presently reading Kannadasan's Vanavaasam. In three chapters he deals with politicians. Mainly Karunanidhi. He explains the sinister and scheming nature of Karunanidhi. He also explains in detail about the Trichy train protest.Kindly refresh your memory and comment about it. I wish todays youth should read that book and then vote. It will bring a sea change.