Sunday, March 27, 2011

உமா சங்கர் ஐ.ஏ.எஸ். பரபரப்பு பேட்டி - சி எம் போஸ்ட்டுக்கு கலைஞர், ஜெ இருவருமே தகுதியானவர்கள் இல்லை


http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/uma-shankar-ias.jpg
நிமிடத்துக்கு நிமிடம் அரசியல் நிலை மைகள் மாறிக்கொண்டே இருக் கின்றன. கூட்டு, பிளவு, மீண்டும் கூட்டு எனத் தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத கூத்துக்கள் எல்லாம் அரங்கேறுகின்றன.அரசியல் கட்சிகளின் அனுதின அதிரடிகளில் நியாயமும் நிலைப்பாடும் கேலிக்கு உள்ளாகின்றன

. கண் முன்னே நடக்கும் அத்தனை தலைகீழ் நிகழ்வுகளையும்  அப்பாவியாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் வாக்காளன். 'இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது?’ என மனசாட்சியோடு மல்லுக்கட்டும் வாக்காளனுக்கு நம்பிக்கை பகர்கிறார் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். 


''கொடைக்கானலுக்குக் குடும்பத்தோடு கிளம்பினோம். 120 கி.மீ. வேகத்தில் சென்ற எங்களுடைய கார், திடீரெனத் தலை குப்புறக் கவிழ்ந்துவிட்டது. அவ்வளவு பெரிய விபத்து நடந்தும் எங்களுக்குச் சிறு சிராய்ப்புகூட இல்லை. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு கார் வரவழைத்து, எவ்விதப் பதற்றமும் பயமும் இல்லாமல் கொடைக்கானல் பயணத்தை முடித்தேன். 'இந்த விபத்தில் நமக்கோ, குழந்தைகளுக்கோ ஏதும் ஆகிஇருந்தால்...’ என நான் யோசிக்கவே இல்லை.

'நான் நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடனும் இருக்கிறேன். அதனால், எந்த நிகழ்வாலும் என்னைக் குலைக்க முடியாது. நான் என் பாதையில் போய்க்கொண்டே இருப்பேன். நியாயமாகவும் நேர்மையாகவும் வேலை பார்ப்பவர்களுடன் கடவுள் எப்போதும் உடன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை மந்திரம். இது என் மனசாட்சியை வழிநடத்துகிறது. இத்தகைய மந்திரம் ஒவ்வொரு வாக்காளரின் மனத்திலும் எதிரொலித்தால், நமக்கான தலைமை தகுதி வாய்ந்ததாக இருக்கும்.


'தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும்’ என ஒரு சொலவடை சொல்வார் களே... அதைப்போல் நமக்கான தலைவர் களைத் தகுதிமிக்கவர்களாக நாம் தேர்ந்தெடுத்தால், இந்த தேசமே தகுதியான தேசமாகிவிடும்!

இன்றைய அரசியலில் 95 சதவிகிதத் தலைவர்கள், சுயநலனை மட்டுமே குறிக் கோளாக வைத்திருக்கிறார்கள். அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்தால் போதும். மக்களைப் பற்றி யோசிக்க வேண்டியதே இல்லை. 

முடிந்தவரை நான்கைந்து தலைமுறைகளுக்குத் தேவையானவற்றைக் குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும். இன்றைய தலைவர் களில் பெரும்பாலானவர்களுக்கு இதுதான் பிரதான கனவு. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற சிறு அக்கறைகூட இன்றைய தலைவர்களுக்கு இல்லை.

பிரதமர் என்கிற உயரிய பதவி தொடங்கி, பஞ்சாயத்துத் தலைவர் என்கிற பதவி வரை இதே மாதிரியான பாராமுகங்கள்தான் மக்களுக்கான பரிசாகக் கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் புறக்கணிக்கவும், சில நேரங்களில் மக்களை அடக்கி ஆளவும் நினைக்கிறார்கள். தேர்தலின்போது மட்டுமே திரும்பிப் பார்க்கப்படுகிற ஜீவன்களாக மக்களைப் பார்க்கிறார்கள்.


இன்றைக்கும் மக்களின் ஊழியனாகத்தான் என்னை அடையாளப்படுத்துகிறேன். அதன்படியே நடக்கிறேன். திருவாரூரில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சாலைகள் போடப்படும் இடத்தை நேரடியாக ஆராய்வேன். டேப் பிடித்து அளந்து பார்ப்பேன். வெறும் 40 சதவிகிதக் கற்களைப் போட்டுவிட்டு, 100 சதவிகிதம் போட்டதாகச் சொன்னதை, களத்திலேயே கண்டு பிடித்தேன்.


'என்னுடைய எஜமானர்கள் மக்கள்தான்!’ என்கிற எண்ணமே, நேர்மையான அதிகாரிகளை மக்களின் கடைக்கோடி வாழ்க்கை வரை உற்றுப் பார்க்கவைக்கிறது. அரசியல் தலைவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது இத்தகைய அக்கறையான கவனிப்பைத்தான். ஆனால், ஓட்டு வாங்கி ஜெயித்த உடனேயே மக்களின் எஜமானர்களாக அரசியல் தலைவர்கள் மாறிவிடுவதுதான் காலம் காலமாக இந்த சமூகத்தைத் துரத்தும் அவலம். 'தானாக எதுவும் மாறாது’ என்கிற பேருண்மை ஒவ்வொரு வாக்காளரையும் உந்தித்தள்ளும்போது, இந்த அவலம் நிச்சயம் அகற்றப்படும்!

யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில், வாக்காளர்கள் மிகுந்த நிதானத்துடனும் ஆராய்ந்து தெளிந்த அறிவுடனும் செயல்பட வேண்டும். முதலில் வேட்பாளர் போட்டியிடும் கட்சியின் நிலைப்பாட்டை யும், அவர்களின் முந்தைய செயல்பாட்டை யும் கவனிக்க வேண்டும். அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தெரிந்து, அவரைப்பற்றியும் தேர்ந்த அறிவோடு ஆராய வேண்டும். 

முதலமைச்சர் வேட்பாளர் சரியில்லாதவராக இருந்தால், அவருடைய கட்சி வேட்பாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவருக்கு நம் வாக்கைச் செலுத்தக் கூடாது. காரணம், நல்ல வேட்பாளருக்கு நாம் செலுத்தும் வாக்கே தவறான ஒருவரைப் பதவியில் அமர்த்த அடிகோலிவிடும் அபாயம் இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் நல்லவராக இருந்து, நம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தவறான வராக இருந்தாலும், அவருக்கு நாம் வாக்களிக்கக் கூடாது.


யாராவது ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் என முடிவு எடுத்தால், போட்டியில் இருக்கும் கட்சிகளில் யார் குறைந்தபட்ச ஊழல் பேர்வழி என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாக்களிக்கலாம். 'நமக்கான பிரதிநிதி கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்!’ என்கிற அக்கறை வாக்களிக்கும்போது நமக்குள் ரீங்கரித்துக்கொண்டே இருக்க வேண்டும். போட்டியிடும் யாரையுமே பிடிக்கவில்லை என்றால், சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கலாம். இல்லையேல், 49 ஓ-வுக்கு வாக்கு அளிக்கலாம்.


தேர்தல் தினத்தில் எத்தகைய வேலைகள் இருந்தாலும், வாக்குப் போடும் வாய்ப்பை மட்டும் தவறவிடக் கூடாது. கிராமங்களைக் காட்டிலும் நகரவாசிகள்தான் வாக்களிப்பது வெட்டி வேலை என எண்ணி, அன்றைய தின விடுமுறையை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

க்யூவில் நிற்பதைக்கூட அவர்கள் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு இருக்கிறது என்கிற ராஜ மரியாதையை அவமானமாக நினைக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஐந்து வருட ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும் தகுதியைத் தவிர்த்துவிட்டு, வாக்குப் போடாமல் புறக்கணிப்பது தேசத் துரோகம். 

வாக்களிக்க மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். எத்தனையோ பேர் சிந்திய ரத்தத் துளிகளின் வடிவம் தான் நமக்கான சுதந்திரம். அதை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமமானதுதான் வாக்களிக்காமல் புறக்கணிப்பது!


அடுத்தது அன்பளிப்பு... ஐந்தாவது ஆண்டின் 11-வது மாதம் வரை மக்களைத் திரும்பியே பார்க்காதவர்கள், திடீரென அன்பு அவதாரம் எடுப்பார்கள். வலிய வந்து வணங்குவார்கள். ஏழைகளைப் பணத்தால் லபக்க முடியும் என்கிற ஆணையத்தில் இல்லாத 'தேர்தல் விதி’ அவர்களின் ஆணவத்தில் இருக்கும். அதனாலேயே வற்புறுத்திப் பணத்தைத் திணிப்பார்கள்.
Hilarious political cartoon images
அன்பளிப்புகள் தாராளமயமாகும். தேர்தல் நேரத்துத் தூண்டில்கள் துரத்தும்போது, எதற்கும் ஆசைப்படாத நிமிர்தலோடு, நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவது சாபத்துக்குச் சமமானது. அந்தப் பணமோ, பொருளோ, நம் வீட்டில் இருக்கவே கூடாது. நம் உழைப்பை விஞ்சி ஒரு பைசா கிடைத்தாலும், நாம் பிச்சைக்காரர்களே! 

இந்த உண்மையும் உளமார்ந்த வன்மையும் இன்றைக்கும் நிறைய கிராம மக்களிடம் இருக்கிறது. 'ஒன்னோட பணம் எனக்கெதுக்கு... நீ யார் வயித்துல அடிச்சு சம்பாரிச்சியோ?’ என வேட்பாளர்களைத் துரத்தும் பல பாட்டிகளை நான் பார்த்துஇருக்கிறேன். அத்தகைய நேர்மையும் வன்மையும் அனைத்து வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும்.


நம் கையில் இடப்படும் ஒரு துளி மையால் இந்த தேசத்தையே திருத்தி எழுத முடியும் என்கிற நம்பிக்கை நம்முள் எழுந்தால்... லஞ்சம், ஊழல், சமூக ஏற்றத்தாழ்வு, மக்களை மதிக்காத போக்கு என அத்தனை கேடுகளும் அகற்றப்பட்டுவிடும். மீண்டும் சொல்கிறேன்... தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும். 'தலை’யைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தகுதிபடைத்த நாம், தலைஆட்டும் வர்க்கமாக இனிமேலும் இருக்கக் கூடாது!''

டிஸ்கி 1 - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 3 SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

52 comments:

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

சக்தி கல்வி மையம் said...

நேற்று என் பக்கம் வராததற்கு சிபி க்கு கன்டனங்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

அடடா.. அப்புறம் எதுக்கு ஃபோன் நெம்பர் குடுத்தேன்.. எஸ் எம் எஸ் பண்ணி இருக்க வேண்டியதுதானே.. இன்றைய பதிவில் நீங்க முன் தின பதிவுகள் டிஸ்கி போடலையே ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

வெல்கம் ஹீரோ.. ஏன்ன் லோகோ சேஞ்ச்?

சக்தி கல்வி மையம் said...

என்னடா பயபுள்ள சனிக்கிழமைக்கூட
பொறுப்பா போஸ்ட் போட்டிருக்கே.. அத தேத்தலாம்ன்னு ஒரு பொறுப்புணர்ச்சி வேனாமா?

தமிழ் 007 said...

///சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

வெல்கம் ஹீரோ.. ஏன்ன் லோகோ சேஞ்ச்?///


எத்தனை நாளுக்குத்தான் முகத்தை மறைக்கிறது அதான் உங்கள மாதிரி நானும் என் போட்டோவை போட்டுட்டேன்.

சக்தி கல்வி மையம் said...

ஆமா.. நான் என்னவோ கஸ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, அந்த கூட்டத்துல முட்டிமோதி , வசனங்களை ஞாபகம் வச்சிகிட்டு , அதை 2 மணி நேரம் டைப்பன்னி போஸ்ட் போட்ட மாதிரி இருக்கே..

சக்தி கல்வி மையம் said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்... --- இவரு இத்தனைநாள் எங்க போயிருந்தாரு கேளுங்க..

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னடா பயபுள்ள சனிக்கிழமைக்கூட
பொறுப்பா போஸ்ட் போட்டிருக்கே.. அத தேத்தலாம்ன்னு ஒரு பொறுப்புணர்ச்சி வேனாமா?


சரி நண்பன் தான் மறந்துட்டான். ஒரு எஸ் எம் எஸ் அனுப்புவோம்னு தோண வேணாம்?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

///சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

வெல்கம் ஹீரோ.. ஏன்ன் லோகோ சேஞ்ச்?///


எத்தனை நாளுக்குத்தான் முகத்தை மறைக்கிறது அதான் உங்கள மாதிரி நானும் என் போட்டோவை போட்டுட்டேன்.

லொள்ளு?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்... --- இவரு இத்தனைநாள் எங்க போயிருந்தாரு கேளுங்க..

அவரு ஃபிகரை கூட்டிட்டு எங்கே போனாரோ.. ? அதை கேக்க முடியுமா?

சக்தி கல்வி மையம் said...

போடர சினிமா நியூஸ் காபி , பேஸ்ட் இதுல கருத்து கேட்டா உதைக்கமாட்டாங்க? அதனாலதான் வேனாம்ன்னு சொன்னேன் இது தப்பா?
இது நக்கலா சொல்லுங்க ..

தமிழ் 007 said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்... --- இவரு இத்தனைநாள் எங்க போயிருந்தாரு கேளுங்க..///

நான் ரொம்ப பிஸி! இப்போ கூட டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணீட்டுத்தான் வந்திருக்கேன்.(ஹிஹிஹி....ஹிஹிஹி)

தமிழ் 007 said...

///சி.பி.செந்தில்குமார் said...

லொள்ளு?///

என்னைக்கு இந்த உலகம் உண்மையை சொன்னா ஏத்துகிட்டிருக்கு!

டக்கால்டி said...

Vanthuten

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஒரே அட்வைசா இருக்கு...? நேத்து வெள்ளிக்கெழம வேற.. ஒரே ஒரு படம்தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// தமிழ் 007 said...
///சி.பி.செந்தில்குமார் said...

லொள்ளு?///

என்னைக்கு இந்த உலகம் உண்மையை சொன்னா ஏத்துகிட்டிருக்கு!///////

அதானே...? ஏண்ணே ப்ரீத்தி ஜிந்தா, தீபிகாவுலாம் நல்லா இருக்காங்களா...? ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க.
அடுத்த தடவ என்னையும் கூட்டிட்டு போங்கண்ணே........!

டக்கால்டி said...

என்ன ஒரே அட்வைசா இருக்கு...? நேத்து வெள்ளிக்கெழம வேற.. ஒரே ஒரு படம்தானா?

March 27, 2011 10:39 AM//

பார்ட்னர் உங்க போஸ்ட்க்கு எதிர் போஸ்ட்டு..ஹி ஹி..

டக்கால்டி said...

ஹ்ம்ம் என்னமோ போடா மாதவா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// டக்கால்டி said...
என்ன ஒரே அட்வைசா இருக்கு...? நேத்து வெள்ளிக்கெழம வேற.. ஒரே ஒரு படம்தானா?

March 27, 2011 10:39 AM//

பார்ட்னர் உங்க போஸ்ட்க்கு எதிர் போஸ்ட்டு..ஹி ஹி..////////

வாங்க பார்ட்னர், நான் என்ன போஸ்ட் ஆபீசா வெச்சு நடத்துறேன்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டக்கால்டி said...
ஹ்ம்ம் என்னமோ போடா மாதவா...////////

அது யாரு பார்ட்னர், நைட்டு நைட்டு முகமூடி போட்டுக்கிட்டு யாருகூடவோ எங்கேயோ போறீங்களே.. அவரா...?

'பரிவை' சே.குமார் said...

Nalla pakirvu... naam sinthippoma??

டக்கால்டி said...

வாங்க பார்ட்னர், நான் என்ன போஸ்ட் ஆபீசா வெச்சு நடத்துறேன்...?

March 27, 2011 10:43 AM//

போஸ்ட் ஆபிஸ்னா என்ன பார்ட்னர்...மறந்து போச்சு...ஐ ஆம் யோசிங் ஒன்லி குரியர் போஸ்ட்ஸ்

டக்கால்டி said...

அது யாரு பார்ட்னர், நைட்டு நைட்டு முகமூடி போட்டுக்கிட்டு யாருகூடவோ எங்கேயோ போறீங்களே.. அவரா...?

March 27, 2011 10:44 AM//

முகமூடியா? புரியலீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆமா.. நான் என்னவோ கஸ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, அந்த கூட்டத்துல முட்டிமோதி , வசனங்களை ஞாபகம் வச்சிகிட்டு , அதை 2 மணி நேரம் டைப்பன்னி போஸ்ட் போட்ட மாதிரி இருக்கே..////////

ஏங்க நம்ம சிபி அந்த தியேட்டர்ல மந்திலி பாஸ் வெச்சிருக்காருன்னு வேற கேள்விப்பட்டேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டக்கால்டி said...
அது யாரு பார்ட்னர், நைட்டு நைட்டு முகமூடி போட்டுக்கிட்டு யாருகூடவோ எங்கேயோ போறீங்களே.. அவரா...?

March 27, 2011 10:44 AM//

முகமூடியா? புரியலீங்க////////

அதான் பார்ட்னர் நாம ரெண்டு பேரும் போனவாரம் ஹவாலா பேங்க கொள்ளையடிக்க போனோமே, அந்த மாதிரி.........

டக்கால்டி said...

அதான் பார்ட்னர் நாம ரெண்டு பேரும் போனவாரம் ஹவாலா பேங்க கொள்ளையடிக்க போனோமே, அந்த மாதிரி.........

March 27, 2011 10:50 AM//

கரடி வந்தா குப்புற படுத்துக்கனும்னு நான் மூணாங்கிளாஸ்ல படிச்சுருக்கேன் பார்ட்னர்...

டக்கால்டி said...

இந்த ஆளுக்கு கொஞ்சம் ஆச்சு பொறுப்பு இருக்கா..தினமும் நாலு பதிவை போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுறாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டக்கால்டி said...
அதான் பார்ட்னர் நாம ரெண்டு பேரும் போனவாரம் ஹவாலா பேங்க கொள்ளையடிக்க போனோமே, அந்த மாதிரி.........

March 27, 2011 10:50 AM//

கரடி வந்தா குப்புற படுத்துக்கனும்னு நான் மூணாங்கிளாஸ்ல படிச்சுருக்கேன் பார்ட்னர்...///////

யோவ் பார்ட்னர் நல்லா பாருய்யா இது கரடி இல்ல.. காண்டாமிருகம்......

டக்கால்டி said...

யோவ் பார்ட்னர் நல்லா பாருய்யா இது கரடி இல்ல.. காண்டாமிருகம்......

March 27, 2011 10:54 AM//

சாரி பார்ட்னர் கன்பியுஸ்ல ஏன் கண்ணு பியூஸ் போய்டுச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டக்கால்டி said...
இந்த ஆளுக்கு கொஞ்சம் ஆச்சு பொறுப்பு இருக்கா..தினமும் நாலு பதிவை போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுறாரு///////

அவரு எஸ்கேப் ஆகல பார்ட்னர், ஏதாவது தியேட்டர்ல நோட்டும் பென்சிலுமா இருப்பாரு..........

டக்கால்டி said...

அவரு எஸ்கேப் ஆகல பார்ட்னர், ஏதாவது தியேட்டர்ல நோட்டும் பென்சிலுமா இருப்பாரு..........

March 27, 2011 10:55 AM//

அவரு யூத்து பதிவர்னு எல்லாரும் சொல்றாங்கோ..அதை ப்ரூவ் பண்ண இப்படி நோட்ஸ் எடுக்குறாரா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// டக்கால்டி said...
அவரு எஸ்கேப் ஆகல பார்ட்னர், ஏதாவது தியேட்டர்ல நோட்டும் பென்சிலுமா இருப்பாரு..........

March 27, 2011 10:55 AM//

அவரு யூத்து பதிவர்னு எல்லாரும் சொல்றாங்கோ..அதை ப்ரூவ் பண்ண இப்படி நோட்ஸ் எடுக்குறாரா ?//////

என்னது யூத்து பதிவரா? என்ன பார்ட்னர் சம்பந்தமில்லாம என்னமோ சொல்றீங்க, தண்ணிய கலந்து அடிங்க........!

ராஜகோபால் said...

உமா சங்கர் யாருப்பா இந்த புண்ணியவான்

ராஜகோபால் said...

சண்டேவும் சிபி ப்ளாக்கள ட்ராபிக் தாங்கலப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ராஜகோபால் said...
உமா சங்கர் யாருப்பா இந்த புண்ணியவான்///////

என்றா ராஜூ, இப்படி கேட்டுப்புட்ட....?

டக்கால்டி said...

என்னது யூத்து பதிவரா? என்ன பார்ட்னர் சம்பந்தமில்லாம என்னமோ சொல்றீங்க, தண்ணிய கலந்து அடிங்க........!

March 27, 2011 11:05 AM//

எந்த தண்ணின்னு சொல்லலம்மா

ராஜகோபால் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ராஜகோபால் said...
உமா சங்கர் யாருப்பா இந்த புண்ணியவான்///////

என்றா ராஜூ, இப்படி கேட்டுப்புட்ட....?
//

பின்ன இவரு என்ன நம்ம டாக்டரா இல்ல நம்ம பவர்ஸ்டாரா பாத்த ஒடனே இவரான்னு கேக்கரதுக்கு!

ராஜ நடராஜன் said...

அட்ரா சக்க!அட்ரா சக்க!

நான் தலைப்பைச் சொன்னேன்:)

ராஜ நடராஜன் said...

எப்பொழுதும் பின்னூட்டம்தான் எனது முதல் தேர்வு.பின்னூட்டம் போட்டா ஓட்டுப்போட்ட மாதிரி.இந்த முறை ஓட்டும் போட்டிருக்கேன்.

ராஜ நடராஜன் said...

நல்ல பதிவு போட்டு விட்டு பின்னூட்டக்கும்மியா?வெளங்கிடும்.

Unknown said...

நன்றிங்க

VJR said...

அருமையான இடுகையில் அர்த்தமில்லா கும்மி மனதை அறுக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

//'ஒன்னோட பணம் எனக்கெதுக்கு... நீ யார் வயித்துல அடிச்சு சம்பாரிச்சியோ?’ என வேட்பாளர்களைத் துரத்தும் பல பாட்டிகளை நான் பார்த்துஇருக்கிறேன். அத்தகைய நேர்மையும் வன்மையும் அனைத்து வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும்.//

இப்போ இருக்குற மக்கள்ட்ட இது எடுப்படுமாய்யா....பாட்டிகள் எவ்வளவோ மேல்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
நேற்று என் பக்கம் வராததற்கு சிபி க்கு கன்டனங்கள்..//

ஆரம்பிச்சிட்டாருய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்... --- இவரு இத்தனைநாள் எங்க போயிருந்தாரு கேளுங்க..

அவரு ஃபிகரை கூட்டிட்டு எங்கே போனாரோ.. ? அதை கேக்க முடியுமா?//

பிகரா எங்கே எங்கே ஹி ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ் 007 said...
///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ் 007 said...

டன்...டனா...டன்... --- இவரு இத்தனைநாள் எங்க போயிருந்தாரு கேளுங்க..///

நான் ரொம்ப பிஸி! இப்போ கூட டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணீட்டுத்தான் வந்திருக்கேன்.(ஹிஹிஹி....ஹிஹிஹி)//

கொக்காமக்கா பிடிச்சி போட்டு பின்னுங்கய்யா இவரை...

MANO நாஞ்சில் மனோ said...

//டக்கால்டி said...
இந்த ஆளுக்கு கொஞ்சம் ஆச்சு பொறுப்பு இருக்கா..தினமும் நாலு பதிவை போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுறாரு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
நன்றிங்க//

எதுக்குலேய்.....

MANO நாஞ்சில் மனோ said...

//டக்கால்டி said...
என்னது யூத்து பதிவரா? என்ன பார்ட்னர் சம்பந்தமில்லாம என்னமோ சொல்றீங்க, தண்ணிய கலந்து அடிங்க........!//

ஒ அப்பிடி வேற அடிக்கலாமா....

உணவு உலகம் said...

MANO நாஞ்சில் மனோ said...
//டக்கால்டி said...
என்னது யூத்து பதிவரா? என்ன பார்ட்னர் சம்பந்தமில்லாம என்னமோ சொல்றீங்க, தண்ணிய கலந்து அடிங்க........!//
ஒ அப்பிடி வேற அடிக்கலாமா....//
பார்ரா, அப்பாவி மனோவ!

செங்கோவி said...

நல்ல பதிவு..சாந்தி படம் ரிலீஸ் ஆகாததும் நல்லது தானோ....