Thursday, March 24, 2011

வை கோ - ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு.

கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்! 



1. ''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.


ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.


'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

அண்ணே.. முதல்ல பேச்சு வார்த்தைன்னா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருக்கனும்.. முதல் கட்ட பேச்சு வார்த்தை, 2வது கட்ட பேச்சு வார்த்தை.. இதெல்லாம் எதுக்கு..பேரம் பேச இதென்னா மாட்டுச்சந்தையா?
2. ''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?'' 

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார்.

எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!


அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். 

அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை.

ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.


சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

அதிமுக என்றாலே அ வமானத்தை தி னமும்  மு ந்திக்கொண்டு தரும் க ழகம் என்று தான் பொருள்.. ஏம்ப்பா அவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே போறீங்க.. அந்தம்மா குணம்தான் தெரியுதல்ல....


3. ''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?'' 


''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!


48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. 

ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. 

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.

ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.


தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 

'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

இப்படி சொல்ற நீங்க.. இதே ஜெ உங்களுக்கு 20 சீட் குடுத்திருந்தா அம்மான்னா சும்மா இல்ல... ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொல்லி இருப்பீங்க.. மனுஷனோட நாக்கு இருக்கே அது நரம்பில்லாதது.. எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசும்....


4. ''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?'' 


''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''


அப்படி சொல்ல முடியாது.. தி மு க வின் நிரந்தர ஓட்டு வங்கி 32%, அதிமுகவின் நிரந்தர ஓட்டு வங்கி 29 % ... மீதி இருக்கற எல்லா எதிர்க்கட்சியும் ஒண்ணு சேர்ந்து ஓட்டே போடாத, போடப்பிடிக்காத அனைவரும் ஒன்று சேர்ந்தா மாற்றம் நிகழும்...

5. ''தனியாக நிற்பது..?'' 


''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

அதுவும் இல்லாம கைக்காசு வீணா செலவு தான் ஆகும்.. அதையும் சொல்லுங்க.. இதுல என்ன ஒளிவு மறைவு.?
6. ''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?'' 

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.


ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்னு எல்லாரும் சொன்னப்பவே நீங்க ஒண்ணு மறந்துட்டீங்க... தன்மானம் இருக்கறவங்க இந்தக்காலத்துல அரசியலுக்கே வரக்கூடாது.. சுய மரியாதை இருக்கறவங்க அம்மா கூட கூட்டுன்னு அங்கே போய் கால்ல விழக்கூடாது...

7. ''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?'' 

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

இங்கே தான் கலைஞர் தப்பு பண்ணீட்டார்.. லட்சங்களை காட்டாம கோடியை காட்டி இருந்தா எல்லாரும் புற்றீசல் மாதிரி அங்கே போய் இருப்பாங்க.. உங்க கட்சி ஆளுங்களை குறைச்சு மதிப்பிட்டுட்டார் கலைஞர்....


8. ''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?'' 


''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? அம்மாவுக்கு எதிராத்தான் போடுவாங்க.. அது அய்யாவுக்குத்தான் போகும்.. கலைஞருக்கு செம லாபம்...
9. ''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?'' 

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். 

ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

எனக்கென்னவோ நீங்க அடுத்த எலக்‌ஷனுக்கு அய்யா கூடவே சேர்ந்து எனது ஒரே தலைவன் கலைஞர் தான்னு வீர முழக்கம் இடுவீங்களோன்னு டவுட்டா இருக்கு...


10. '' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?'' 

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

சீட் குடுக்க முடியலைன்னா கலைஞர் இதயத்தில் இடம் உண்டுன்னு டகால்டி அடிப்பாரே.. அந்த மாதிரி இது அம்மா டெக்னிக்....


11. ''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?'' 

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''

நீங்க இருப்பீங்க... கட்சி இருக்குமா? # டவுட்டு

45 comments:

டக்கால்டி said...

vadai

டக்கால்டி said...

Padichutu varen boss

Unknown said...

வந்துட்டேன் ஹிஹி

டக்கால்டி said...

அருமை...மனசாட்சி வைஸ் உங்களுதா?

டக்கால்டி said...

மனசாட்சி வாய்ஸ் உங்களுதா?

வைகை said...

தவறான முடிவுகளை எடுக்கும் நல்ல மனிதர்!- இது வைகோவுக்கு மிகவும் பொருந்தும்

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

மனசாட்சி வாய்ஸ் உங்களுதா?

வாங்க வாங்க.. ஆமா. கேள்வி விகடன்.. பதில் வை கோ... பிளாக் கலர்ல போல்டு பண்ணுனது என் கமெண்ட்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வைகை said...

தவறான முடிவுகளை எடுக்கும் நல்ல மனிதர்!- இது வைகோவுக்கு மிகவும் பொருந்தும்

March 24, 2011 8:41 AM

அதே போல் தவறான இடத்தில் இருந்த சரியான மனிதர் எனவும் சொல்லலாம் வைகை

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

வந்துட்டேன் ஹிஹி

நேத்து ஃபுல்லா எங்கேய்யா இருந்தே..?

Unknown said...

ஒரே புல்லா இருந்தேன் ஹி ஹி!

Unknown said...

மொல்லாளிக்கும் எனக்கும் ஒரே சண்ட அதான் அவரு பாவம்னு வேல பண்றாப்புல ஆயிடுச்சி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

முதலாளி கூட சண்டை.. பதிவர்கள் கூட சண்டை, பொண்டாட்டி கூட சண்டை.. ஆனா ஆஃபீஸ் ஸ்டெனோ கூட மட்டும் ஜல்ஸா.. ஏன்யா இப்படி?

டக்கால்டி said...

ஆனா ஆஃபீஸ் ஸ்டெனோ கூட மட்டும் ஜல்ஸா.. ஏன்யா இப்படி?

March 24, 2011 8:55 AM//

Correct

Unknown said...

நல்ல மன்சனான என்னை இப்படி புலம்ப வச்சிட்டாங்களே ஹி ஹி!

Unknown said...

யாரும் துட்டு குடுத்தாலும் சொல்ல மாட்டேங்குறாங்க அதேன் நானே சொல்லிகிறேன் ஹிஹி!

Unknown said...

இந்த அருமையான விஷயங்கள் இந்தப்பதிவின் மனிதருக்கும் பொருந்துமோ ஹிஹி!

Unknown said...

"முதலாளி கூட சண்டை.. பதிவர்கள் கூட சண்டை, பொண்டாட்டி கூட சண்டை.. ஆனா ஆஃபீஸ் ஸ்டெனோ கூட மட்டும் ஜல்ஸா.. ஏன்யா இப்படி?"

>>>>>>>>>>>>>>>>>>>

ஆபிசில் இருக்கும் சிபிக்கு தங்கை போன்ற நங்கையை பப்ளிக்கில் கூறியதால்..................!

நிரப்பிக்கொள்ளவும் ஹிஹி!

உணவு உலகம் said...

நானும் வந்திட்டேன்.வாக்கிட்டேன். வருகிறேன்.

Unknown said...

//6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது//
//தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்//
//அதுவும் இல்லாம கைக்காசு வீணா செலவு தான் ஆகும்.. அதையும் சொல்லுங்க.. இதுல என்ன ஒளிவு மறைவு.?//
//'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்னு எல்லாரும் சொன்னப்பவே நீங்க ஒண்ணு மறந்துட்டீங்க... தன்மானம் இருக்கறவங்க இந்தக்காலத்துல அரசியலுக்கே வரக்கூடாது.. சுய மரியாதை இருக்கறவங்க அம்மா கூட கூட்டுன்னு அங்கே போய் கால்ல விழக்கூடாது.//

வைகோ = வைwhy கோGO
வைகோ = வைwhy கோவம்
VAI'GO !

செங்கோவி said...

//தவறான முடிவுகளை எடுக்கும் நல்ல மனிதர்!// இது நல்லா இருக்கே!..கலக்கல் பேட்டி.

செங்கோவி said...

தமிழ்மணத்தை எங்கய்யா...அடிக்கடி தொலைச்சுடுதீரு.

சரியில்ல....... said...

வந்துட்டோம்ல ..... ஆங் என்ன பதிவு? ஆ.. ஆமா.. ஆமா வைகோ ... !!! சூப்பர் பதிவு...பகிர்வு..

சரியில்ல....... said...

இந்த அரசியல்வாதிங்களே இப்பிடித்தான் பாஸூ ..... தமிழ்நாட்டுக்கு விடிவுகாலமே இல்லையா முருகா...

உங்க மனச்சாட்சி என்ன சொல்லுதோ , அதே தான் எங்க மனசாட்சியும் சொல்லுது..

சக்தி கல்வி மையம் said...

மறுபடியும் கரன்ட் கட்டா?

நர்மதன் said...

அரசியல் ஒரே காமடிதான்

நர்மதன் said...

////நீங்க இருப்பீங்க... கட்சி இருக்குமா? # டவுட்டு/////

அதே அதே

Speed Master said...

யப்பா முடியல

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐ! இன்னிக்கும் ஒரு சூப்பர் கும்மி! யாரது?

வை கோ வா? ஸோ

லெட்ஸ் கோ!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கென்னவோ நீங்க அடுத்த எலக்‌ஷனுக்கு அய்யா கூடவே சேர்ந்து எனது ஒரே தலைவன் கலைஞர் தான்னு வீர முழக்கம் இடுவீங்களோன்னு டவுட்டா இருக்கு...

இதுல என்னய்யா டவுட்டு வேண்டிக்கிடக்கு? கேப்டனே போற போக்கப்பார்த்தா அந்த நிலைமைக்கு வந்துடுவாரோ னு தோணுது! அரசியல்ல இதெல்லாம்........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதிமுக என்றாலே அ வமானத்தை தி னமும் மு ந்திக்கொண்டு தரும் க ழகம் என்று தான் பொருள்.. ஏம்ப்பா அவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே போறீங்க.. அந்தம்மா குணம்தான் தெரியுதல்ல....//////


வெளக்கமெல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனா யாராச்சும் உணர்ச்சிவசப்பட்டு, எதிர் பதிவு போடப்போறாங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல, நான் வீட்டைவிட்டு கெளம்புறதுக்கு முன்னாடி, நேரகாலத்தோட பதிவு போட்டதுக்கு தேங்க்ஸ்! இதனால நிம்மதியா தமிழ்ல கமென்ட் போடா முடிஞ்சது! இல்லைன்னா ஒர்க் பண்ற எடத்துல மொபைல வச்சு நோண்டி கிட்டு இருக்கணும்!



ஓகே பை நண்பா!

நர்மதன் said...

இதையும் படியுங்கள் ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்

நிரூபன் said...

அதிமுக என்றாலே அ வமானத்தை தி னமும் மு ந்திக்கொண்டு தரும் க ழகம் என்று தான் பொருள்.. ஏம்ப்பா அவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே போறீங்க.. அந்தம்மா குணம்தான் தெரியுதல்ல....//

வணக்கம் சகோ, நீங்க வேறை, நம்ம இடத்திலை இப்பிடியும் சொல்லுவோம்.

திமுக: திருத்த முடியாத கழுதைகள்
அதிமுக: அடித்தும் திருத்த முடியாத கழுதைகள்....

நிரூபன் said...

இப்படி சொல்ற நீங்க.. இதே ஜெ உங்களுக்கு 20 சீட் குடுத்திருந்தா அம்மான்னா சும்மா இல்ல... ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொல்லி இருப்பீங்க.. மனுஷனோட நாக்கு இருக்கே அது நரம்பில்லாதது.. எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசும்....//

வைகோ இதைப் படிச்சா தன்னோடை கட்சி ஆபிசு கதிரையிலை சாய்ந்திருந்து ஓகோன்னு அழுதிடுவாரு.

நிரூபன் said...

தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்னு எல்லாரும் சொன்னப்பவே நீங்க ஒண்ணு மறந்துட்டீங்க... தன்மானம் இருக்கறவங்க இந்தக்காலத்துல அரசியலுக்கே வரக்கூடாது.. சுய மரியாதை இருக்கறவங்க அம்மா கூட கூட்டுன்னு அங்கே போய் கால்ல விழக்கூடாது...//

என்ன ஒரு அருமையான தத்துவம்!

நிரூபன் said...

''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?''

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''//

கூட்டணி உடைந்திருப்பது இந்த முறை ஐயாவின் வெற்றிக்கே அடித்தளமாக உள்ளது. மீண்டும் கலைஞர் தான் வருவார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது,

வைகோவை இந்த நேரத்தில் தனது கட்சிக்காக சரியாகப் பயன்படுத்தாத ஜெயலலிதா ஐயாவை வெற்றி வாகை மறைமுகமாக இந்த தேர்தலிலும் நீங்களே வெல்லுங்கள் என விட்டு விலகுகிறார்.

மீண்டும் ஒரு ஐந்தாண்டுகளிற்குள் பொதுமக்கள் அபிவிருத்தியில் இருந்து பல கோடி பணம் மாயமாய் மறையலாம். அடுத்த விசாரணையை சிபி ஐ ஆரம்பிக்கும். விசாரணை பைல்கள் திடீரெனக் காணாமற் போகும்.

என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது. ஒண்ணுமே புரியலை உலகத்திலை என்றாராம் ஒரு கவிஞர்/ பாடலாசிரியர்.

ராஜேஷ், திருச்சி said...

அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.. ! அம்மா சுரத்தே இல்லம் தேமே என்று பேசியது அவரின் பயத்தை காட்டியது.. மேலும் கலைஞ்சர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அருகில் பல கட்சி புள்ளிகள், .. இங்கே அம்மா மட்டுமே .. தான் என்ற அகங்காரம் போகவில்லை போலும்..

ரஹீம் கஸ்ஸாலி said...

அட...நீங்க வேற....விடுங்க பாவமஅவரு....வெந்த புண்ணுல வேலை பாய்ச்சிக்கிட்டு

Sathish said...

இது பற்றிய என்னுடைய கருது இங்கே

http://007sathish.blogspot.com/2011/03/24032011.html

செல்வா said...

இப்பதிவு மிக நீநீநீநீநீநீநீநீநீநீநீளமாக இருப்பதால் சிறிது நேரம் இடைவெளிக்குப் பிறகு வந்து படிக்கிறேன்.. இப்பொழுது சென்று தேநீர் அருந்திவிட்டு வருகிறேன் .. நன்றி ..ஹி ஹி

ராஜி said...

"அதிமுக" விற்கு தாங்கள் அளித்த கருத்து புதுசாவும் வித்தியாசமாகவும் இருக்கு (என் மகள் தூயாவின் கருத்து இது. அவள் சார்பாக நான் கமெண்டினேன்)

செல்வா said...

ஏன் பேச்சு வார்த்தை வேட்டு ஒண்ணு துண்டு ரண்டா இருக்கணும் ? ஹி ஹி எனக்கும் சந்தேகம் ..

செல்வா said...

அதிமுக வுக்கு புது விளக்கம் தந்திருக்கும் அண்ணன் சிபி வாழ்க .. ஹி ஹி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஹேமா said...

சிபி...ஓட்டு உங்களுக்கு மட்டும் போட்டாச்சு !