Wednesday, February 23, 2011

குமுதம் VS கலைஞர் பேட்டி - காமெடி கும்மி & உட்டாலக்கடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd70JSBPxmFqRkMKk1UXeTisNvkoN9v8zCBsIVHYzjWgqkjtDfbqSAoLL6LpgwaI4tC5OrJUA4fUDA9UGScrT7LsdPSVXQb2N9zuuoiVy5AWeO03koY9bWMlbDzwAmiqFZgHpc2ut_I_vh/s1600/Karunanidhi+cartoon.jpg
 
தமி்ழ்நாட்டின் நெம்பர் ஒன் தமிழ் வார இதழான குமுதம் (2.3.2011) இன்று கலைஞரைப்பேட்டி எடுத்து  போட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் பிரச்சனை வெற்றியைப்பாதிக்குமா? என சென்சேஷனல் டைட்டிலுடன் வந்துள்ள பேட்டி படிக்க செம காமெடியாக இருந்தது.அதன் ஒரிஜினல் பதிப்பை லைப்ரரியிலோ. நண்பர்களிடம் ஓ சி புக் வாங்கியோ படித்து ரசியுங்கள். ( நாம எந்தக்காலத்துல காசு குடுத்து புக் வாங்கி இருக்கோம்?).இப்போது இங்கே கேள்வி மட்டும் குமுதம் கேட்டது ,பதில் கலைஞர் சொன்னதை போடாமல் கலைஞரின் மனசாட்சி என்ன சொல்லி இருக்கும் என ஒரு கற்பனை.

1.” வரப்போகும் தேர்தலில் தி மு க வின் வியூகம் எப்படி இருக்கும்??”

இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு?எப்பவும் போலத்தான்.வர்றவங்க எல்லாம் வாங்கன்னு எல்லாரையும் கூட்டணில சேர்த்திக்க வேண்டியது. அப்புறம் தொகுதி பிரிக்கறப்ப பிரச்சனை வந்தா “உங்களுக்கு என் இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என மழுப்புவது...

2. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தி மு க சாதித்தது என்ன?

என்ன இப்படி கேட்டுட்டீங்க?.கடந்த 64 வருட காலங்களிலேயே யாராலும் பண்ண முடியாத டார்கெட் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் அச்சீவ் பண்ணி இருக்கோமில்ல..ஸ்டாலின் -அழகிரி சண்டை வராம பேலன்ஸ் பண்றதே பெரிய சாதனையா இருக்கு.. எனக்கு.


3.நீங்க இது வரைக்கும் பல தேர்தலை சந்தித்து இருக்கீங்க. அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் குங்குமச்சிமிழ் அல்லது பனை ஓலை விசிறி குடுப்போம்,ஏமாளி ஜனங்க அதுக்கே ஆளுக்கு 2 ஓட்டு போடுவாங்க. இப்போ எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க. ஒரு ஓட்டுக்கு ரூ 2000, என் கிட்டே 4 ஓட்டு இருக்குன்னு கணக்கு போட்டு கேக்கறாங்க.. ஹூம் குடுத்துத்தொலைப்போம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்க வேண்டியதுதான்.
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
4. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சிக்கல்கள் வந்தாலும் தேர்தலை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள்.அதற்கான பலம் எங்கே இருந்து கிடைக்குது?

உள்ளுக்குள்ள பயம் இருக்கு, அதை வெளில காட்ட முடியுமா? 60 சீட் தான் ஜெயிப்போம்னு தெரிஞ்சாக்கூட “உடன் பிறப்பே ,நாம் 234 தொகுதிகள்லயும் வெற்றி பெறுவது உறுதி”அப்படின்னு உதார் விட்டுத்தானே பழக்கம்?

5. தி மு க தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?அவர்களை நினைக்கும்போது  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
1000 ஊழல்களை  கட்சி  பண்ணுனாலும்,தி மு க ஊழலில் ஊறிய கட்சிங்கறதை  நம்ப மாட்டாங்க  பாசக்காரப்பய புள்ளைக... ஏதாவது சந்தேகம் வந்தாக்கூட முரசொலில உடன்பிறப்பே...அப்படின்னு ஆரம்பிச்சு எதை எழுதுனாலும் நம்பிடறாங்க.. அவங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு....

6. இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை தி மு க வின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

ம். அதனாலதான் பல்லைக்கடிச்சுக்கிட்டு ராம்தாஸ் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேண்டியதா இருக்கு. 10 சீட்டுக்கு பம்புன ஆள் கூட இப்போ 30 சீட்டுக்கு மேல வாங்கிட்டாரு.காங்கிரஸ் வேற ஆட்சில பங்குனு குண்டைத்தூக்கிப்போடறாங்க... பார்ப்போம்.முடிஞ்சவரை அடுத்த ஊழல் பண்ண சான்ஸ் கிடைக்குமா?ன்னு பார்க்கறேன். முடியலைன்னா இதுவரைக்கும் பண்ணுன ஊழல் பணத்தினை வெச்சு 5 வருஷம் தாட்ட வேண்டியதுதான்.
http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
7. ஆ ராசாவை கைது பண்றப்ப உங்களுக்கு தகவலை சொல்லிட்டுத்தான் கைது பண்ணுனாங்களாமே...

ஆமா.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கில்ல?

8. வரப்போகும் தேர்தலில் எந்தப்பிரச்சனை மையமா இருக்கும்?உங்க பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

எல்லாத்தேர்தல்லயும் சி எம் சீட்டு யாருக்கு? இதுதான் மையமா இருக்கும். நாடு எக்கேடு கெட்டு நாசமாப்போனா நமக்கென்ன?பதவிதானே நமக்கு முக்கியம்.மேடைல பேசறப்ப ஊழல் அற்ற ஆட்சின்னு உதார் விடுவோம். தனியா வீடு வீடா போய் ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தர்றோம்னு வாக்கு குடுப்போம்.

9. உங்க குடும்பமே சினி ஃபீல்டை ஆக்ரமிச்சு இருக்கறதா குற்றச்சாட்டு இருக்கே?

அட.. அறிவு கெட்ட ஜனங்களே...சினிமாத்துறைக்கு சலுகைகளை வாரி வாரி தர்றேனே எதுக்கு? மக்கள் வரிப்பணத்துல கிடைச்ச பணத்தை தமிழ் டைட்டிலுக்கு வரி விலக்குனு அள்ளி விடறது எதுக்கு..? எல்லாம் சுய நலம் தான்.அதுவுமில்லாம சினி ஃபீல்டை மட்டுமா நாங்க ஆக்ரமிச்சு இருக்கோம்?டி வி மீடியா கூட எங்க கட்டுப்பாட்டுல தான்.அவ்வளவு ஏன் ?இப்போ பேட்டி எடுக்கற குமுதமே கூட இப்போ என் பினாமி தானே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKRbOQ3Uw088X_BzU9b9EirMJWTygPuTs0znS3IgAjYJn0em9aNcJx9HOiwZVINv0oh5u-Lxw_gScJYsJXr-ST0IBQ_l3CD3-iqw1PJXEJkqiciwjUFaK4vUI3GqzQolO6N0Ijph-p5-A/s1600/tamilmakkalkural_kalavanigal_anbucartoons.jpg
10. இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

அந்தப்பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கனும்.அப்போத்தான் தேர்தல் வாக்குறுதி தர்றப்ப 6-வது முறையாக நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனைஅனைத்தையும் தீர்ப்போம்னு சொல்ல முடியும்.இப்பவே தீர்த்துட்டா எதை வெச்சு பிழைப்பை ஓட்டறது?

11. மு க ஸ்டாலின் அண்மைக்காலமாக அபாரமாக உழைத்து வருகிறாரே...
அவரு கவலை அவருக்கு.. ஆட்சி அழகிரி கைக்குப்போயிடக்கூடாதுன்னு பார்க்கறார்.

12. கனி மொழியும் இப்போது அரசியல் பணி ஆற்றி வருகிறார்,அதைப்பற்றி?

எப்படியோ.. தமிழ்நாட்டை எங்க பரம்பரை இன்னும் 100 வருஷம் ஆனாலும் விடாம சுரண்டுவாங்க..

13. நீங்க ஓய்வின்றி உழைக்கிறீர்களே... அது ஏன்?

இதென்ன கேள்வி,, கொஞ்சம் ஏமாந்தா வேற யாராவது ஊழல் பண்ணிடுவாங்க.. முழுக்க முழுக்க எல்லா ஊழலையும் நாங்க தான் பண்ணனும்.

14. நீங்க 75 வருஷமா சினி ஃபீல்டுல இருக்கீங்க.. அப்போ.. இப்போ என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் என் வசனத்திற்காகவே படம் ஓடுச்சு. இப்போ என் வசனம்னு சொன்னாலே கட்சிக்காரன் கூட காத தூரம் ஓடறான். இளைஞன் படம் ரிலீஸ் ஆன 2 வது நாளே ஊத்திக்கிச்சு.. ஆனா ஒரு கவுரத்துக்காக பிரம்மாண்ட வெற்றின்னு கலைஞர் டி வி ல போட்டு ஒப்பேத்திட்டிருக்கோம்.

15. கலைஞர் சிறு குறிப்பு வரைகன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க?

உலக பணக்காரர் வரிசையில் முதல் இடம் லட்சியம்,ஆசியப்பணக்காரர் வரிசையில் முதல் இடம் நிச்சயம்.
16. பத்திரிக்கையாளர் சோ உங்க மேல கடுமையா தாக்குறாரே ஏன்?

நான் ஒரு தலித் என்பதால் இருக்கலாம்.என்னால சரியா பதிலடி கொடுக்க முடியாம போச்சுன்னா இந்த ஜாதி மேட்டரை கைல எடுத்துக்குவேன். ஒரு பய கேள்வி கேட்க முடியாது.


டிஸ்கி 1 - குமுதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை கொஞ்சம் நறுக் சுருக் ஆக்கி எடிட் செய்திருக்கிறேன்.கலைஞரின் பதில்களில் அவரது தமிழ் நடை வராது. ஏன் எனில் மனசாட்சியின் குரலாகத்தான் பதிவு செய்திருக்கிறேன். மனசாட்சிக்கு நடிக்கத்தெரியாது.

டிஸ்கி 2- தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் எனது செல் ஃபோனில் புது நெம்பர் வந்தால் நான் எடுப்பதில்லை. எனவே பதிவுலக நண்பர்கள் என்னுடன் பேச விரும்பினால் முதலில் உங்கள் செல் ஃபோனில் இருந்து மெசேஜ் அனுப்பி இன்னார் தான் அன்னார் (அதாவது நீங்க)என சொல்லி அப்புறம் பேசவும்.

டிஸ்கி 3 - மேலே சொன்ன டெக்னிக், பதிவர்களுக்கு மட்டுமே.. என்னை மிரட்ட நினைப்பவர்கள் அதே ஐடியாவை ஃபாலோ பண்ணக்கூடாது... ஹி ஹி

43 comments:

போளூர் தயாநிதி said...

உங்களின் இந்த இடுகை எம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது ஏறக்குறைய இதேபாணியில் தான் இந்த பாழும் தலைவர் என்று சொல்லிக்கொள்ளுகிற இவர் தமிழ மக்களை ஆட்சி செய்துவருகிறார் அனல் தமிழ மக்கள் எந்த கூச்சமும் இல்லாமல் ஓட்டுகளை போட்டு ஆட்சியில் அமர்த்துகிறார்கள் உண்மையில் எப்படி எதை சொன்னால் மக்கள் புரிந்து கொள்ளுவார்கள் என்பது பெரிய விடயமாக அல்லவா இருக்கிறது பாராட்டுகள் இடுகைக்கு .

ஆர்வா said...

சட்டையர் காமெடியில் உங்களுக்கு அசாத்திய திறமை இருக்கிறது என்பதை ஒவ்வொரு பதிவிலும் நிரூபித்துக்கொண்டே வருகிறீர்கள்.. அசத்தல்

கோவை நேரம் said...

அசத்தல் காமெடி பதிவு

தமிழ் 007 said...

இந்தப் பதிவுக்கு ஆட்டோ இல்ல சுமோவே வந்தாலும் வரலாம்.

உஷாரா இருங்க பாஸ்!

Sathish said...

இதே ரேஞ்சுல நான் கூட ஒரு பதிவை ஏற்கனவே போட்டுருக்கேன் தல

http://007sathish.blogspot.com/2011/02/blog-post_18.html

dont miss it

சித்தாரா மகேஷ். said...

கலைஞர் பாவமில்லியா ?

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

ம.தி.சுதா said...

இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

..........

யாருகிட்ட என்ன கேட்கணும் என்று விவஸ்தையில்லையா ?

Unknown said...

//ஆ ராசாவை கைது பண்றப்ப உங்களுக்கு தகவலை சொல்லிட்டுத்தான் கைது பண்ணுனாங்களாமே...

ஆமா.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கில்ல?
//
ஹிஹிஹி

Unknown said...

//
ம.தி.சுதா said...
இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

..........

யாருகிட்ட என்ன கேட்கணும் என்று விவஸ்தையில்லையா ?///
இது நல்லா இருக்கே மதி

Speed Master said...

அம்மாடி

Unknown said...

//தி மு க தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?அவர்களை நினைக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
1000 ஊழல்களை கட்சி பண்ணுனாலும்,தி மு க ஊழலில் ஊறிய கட்சிங்கறதை நம்ப மாட்டாங்க பாசக்காரப்பய புள்ளைக..//

ஹிஹி அப்ப பாருங்களேன்!!.
டிஸ்கி கமெண்டும் ஸ்டாண்ட்டர்ட் கமெண்டும்

வைகை said...

உங்களைப்போல பிரபலமானவர்கள் இதைப்பற்றி போடும்போது இன்னும் அதிக மக்களை சென்றடைகிறது! தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்குங்க பாஸ்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த பதிவு அனைவரையும் சென்றடைய நச்சுன்னு நாலு ஓட்டு போட்டாச்சி..

Unknown said...

இந்தப்பதிவுக்கு என்னால் சபாஷ் போட முடியல.......சிபி சார் நீங்க பதிவர்கள்ல முதல் இடத்துல இருக்கீங்க.......அதனால பதிவ பாத்துப்போடுங்க.......
எதிரி உங்க கிட்டயே இருக்கலாம்.....சிறிது ஜாக்கிரதை!?

சக்தி கல்வி மையம் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

karthikkumar said...

செம நக்கல். ஆட்டோ வர போகுது பாத்து பத்திரமா இருங்க ....:))

சி.பி.செந்தில்குமார் said...

என்னய்யா ஆளாளுக்கு பயமுறுத்தறீங்க...

மாணவன் said...

உங்களைப்போல பிரபலமானவர்கள் இதைப்பற்றி போடும்போது இன்னும் அதிக மக்களை சென்றடைகிறது! தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை = மாணவன்


ராம்சாமி = பட்டாபட்டி

மாதிரியா?

பொன் மாலை பொழுது said...

அப்பாடி ! சி. பி. நீங்க அவுட். கலைஞர் அய்யாகிட்ட தோத்து போயிட்டீங்க!
எப்படியா?? விடாம ஏதாவது "பொம்பள " படங்களா போட்டு போட்டு பதிவு விட்டீங்க. அதையெல்லாம் மாத்தி தன் படத்தை மட்டுமே போடா வெச்சது யாரு?
கலைஞர் தானே?!

ரஹீம் கஸ்ஸாலி said...

பாத்து சூதனமா இருங்க....அவ்வளவுதான் சொல்லமுடியும்.

குரங்குபெடல் said...

நல்ல பதிவு . . . நன்றி . . .

Unknown said...

கோவை தமிழில் நல்ல பதிவு.என்ன சொல்லி என்ன பயன்?ஜெயிக்கபோவதென்னவோ தி.மு.க.தான்.பணம் படுத்தும் பாடு.

Jana said...

ஆமா..அண்ணர். இப்ப பதுவுகளைக்கூட அப்சேவ் பண்ணுராங்க என்று எமக்கு புலனாய்வு தகவல்கள் கிடைக்குது..எனவே பார்த்து..

அண்ணாச்சி said...

"உலக பணக்காரர் வரிசையில் முதல் இடம் லட்சியம்,ஆசியப்பணக்காரர் வரிசையில் முதல் இடம் நிச்சயம்."

சான்ஸெ இல்ல சூப்பர்.

தல கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

வசந்தா நடேசன் said...

நல்ல நக்கல்கள், இருந்தாலும் ரஹீம் சொன்னதுபோல் சூதானமா இருங்கப்பூ.

காங்கேயம் P.நந்தகுமார் said...

சாக்கடை பக்கம் நாம போனா நாறத்தான் செய்யும். அண்ணே நாம நல்ல தரமான சாலையில போவாம். அங்கே டிராபிக்கே இருக்காது

காங்கேயம் P.நந்தகுமார் said...

சாக்கடை பக்கம் நாம போனா நாறத்தான் செய்யும். அண்ணே நாம நல்ல தரமான சாலையில போவாம். அங்கே டிராபிக்கே இருக்காது

காங்கேயம் P.நந்தகுமார் said...

சாக்கடை பக்கம் நாம போனா நாறத்தான் செய்யும். அண்ணே நாம நல்ல தரமான சாலையில போவாம். அங்கே டிராபிக்கே இருக்காது

பெயருள்ள என்னய்யா இருக்கு said...

நகைசுவையோடு விழிப்பு உணர்வு தரும் பதிவு. தமிழக மக்களுக்கு இன்றைய தேவையான பதிவு. நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களைப்போல பிரபலமானவர்கள் இதைப்பற்றி போடும்போது இன்னும் அதிக மக்களை சென்றடைகிறது! தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!

செங்கோவி said...

//தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால்..// யாருங்க மிரட்டறது? உங்க ஊர் தியேட்டர் ஓனர்களா? பின்னே, எந்தப் படம் வந்தாலும் ‘வேஸ்ட்..சீனே இல்லை..போகாதீங்க’ன்னு குறுக்க விழுந்து மறிச்சா கொஞ்சவா செய்வாங்க?

Philosophy Prabhakaran said...

இன்னைக்கு அரசியல் தோசையா...

Philosophy Prabhakaran said...

@ செங்கோவி
// யாருங்க மிரட்டறது? உங்க ஊர் தியேட்டர் ஓனர்களா? //

அவனுங்க ஏன் மிரட்டப்போறாங்க... அவங்க கல்லா கட்டுறதே இவரால தானே...

'பரிவை' சே.குமார் said...

haa... ha...haaa....
Nice... Very Nice...

பூங்குழலி said...

அவரோட மனசாட்சி புதையுண்டு போய் ரொம்ப நாளாச்சு ....அத போயி இப்ப கூப்பிட்டுக்கிட்டு ....கலக்கல் பதிவு ..அம்மாவுக்கு பிறந்தநாள் பரிசா?

சசிகுமார் said...

அருமை அருமை அருமை செந்தில் மிக அருமை உங்களுக்கே உரித்தான காமெடி பாணியில் விழிப்புணர்வு ஊட்டும் பதிவு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் இன்னும் களிங்கர்ஜீய விடலையா? குத்துங்க எஜமான் குத்துங்க.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என் பெயரை மெசேஜ் செய்துவிட்டு, யாரும் திட்டினால் அது நான் இல்லை என எடுத்துக் கொள்க...... (போனை எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி ஐடியாவும் கொடுத்த இந்தமாதிரிதான் நடக்கும்)

நிலவு said...

http://powrnamy.blogspot.com

pls read relavant articles and comment it

tHE bOSS said...

நீங்க என்ன வேணுமானாலும் எங்க தலைவரை கிண்டல் பண்ணினாலும் எங்களுக்கு
சூடு சொரணை வராதுங்கோ.. உங்களுக்கு வேற வேலை இல்லை.. இப்படி மனசாட்சியை
வைத்து புலம்பிக்கிட்டு இருப்பிங்க.. அதை உங்களை மாதிரி வேலைவெட்டி இல்லாத
மானங்கெட்ட தமிழனனுங்க படிச்சுட்டு அவங்களும் உங்களை மாதிரி புலம்பிகிட்டோ, இல்லை...
இதுக்கு விமர்சனம் எழுதிக்கிட்டோ நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நீங்க
சொலரதுக்கு எல்லாம் எங்க தலைவரு பதில் சொல்லுக்கிட்டு நேரத்தில் இன்னும் நாலஞ்சு ஊழல்களை
செஞ்சாருன்னா.. வர்ற தேர்தலில என்னை மாதிரி அப்பாவி தமிழ் நாட்டு குடிமகன்களுக்கு ஒரு
வோட்டுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுக்கறதுக்கு வசதியா இருக்கும்..
போங்கப்பு.. போய் எங்க தலைவரு தமிழ் நாட்டை விலைக்கு வாங்கிக்கிட்டு இருக்கறதை கெடுக்காம
நீங்களும் மனசாட்சியை தூக்கி போட்டுட்டு.. சம்பாதிக்கற வழியை பாருங்க...
- அடுத்து இலவசமா என்ன கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்து தன்னையே வித்துக்கிட்டு இருக்கற
வேசியை விட மோசமான தமிழ் குடிமகன்களில் ஒருத்தன்..

பிரபாஷ்கரன் said...

நன்றாக இருக்கிறது மனம் திறந்த பாராட்டுக்கள்