Wednesday, February 02, 2011

சொதப்பல் vs கலக்கல்


சண்டே அன்னைக்கு கலைஞர் டி வி ல தம்பி அர்ஜூனா அப்ப்டின்னு ஒரு டப்பா படம் போட்டாங்க.. தியேட்டர்ல பாக்க முடியாம போச்சே..சரி டி வி லயாவது பாக்கலாம்னு உக்காந்தேன்..(தியேட்டர்ல ஏன் இந்தப்படத்தை பாக்க முடியலைன்னா வெள்ளிக்கிழமை காலைல 11 மணிக்கு படத்தோட காலைக்காட்சி போட்டாங்க... அன்னைக்கு நைட்டே படத்தை எடுத்துட்டு நைட் ஜங்க்கிள் பயங்கரம்னு ஒரு மலையாளப்படம் போட்டாங்க..(நைட்ல அப்படி என்ன பயங்கரமோ..?)

நீ சந்திக்கற ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும்.. அதை நீ ஃபாலோ பண்ணுன்னு பெரியவங்க சொல்ற மாதிரி.. நான் ஒண்ணு கண்டு பிடிச்ச்சிருக்கேன்.. நீ பாக்கும் மொக்கைப்படத்துல கூட பதிவைத்தேத்த ஒரு மேட்டர் சிக்கும்.. விட்ராதே,,

அந்த மாதிரி அந்த மொக்கைப்படத்துல கூட சில இடங்கள்ல வசனம் நல்லாருந்தது..அப்புறம் இன்னொன்னு கண்டு பிடிச்சேன்.. அந்தப்படம் நம்ம தல அஜித் நடிச்ச தீனா படத்தோட உல்டா...
சொதப்பல் படத்தில் பார்த்த கலக்கல் வசனங்கள்

1.வாழ்க்கைல சுவராஸ்யமான சம்பவங்கள் ஒவ்வொருத்தர் லைஃப்லயும் எப்பவாவது  நடந்தே தீரும்.  ( கண்டு பிடிச்சுட்டாரய்யா துர..)

2.காமெடியன் ஹீரோவைப்பார்த்து.. - யாரிவன்..?என்னை விட கிளாமரா இருக்கானே..?

3. ஹீரோவின் அண்ணனின் பஞ்ச் டயலாக் - ரவுடி, தாதாங்கறவன் கும்பலா வந்து மோதறவன் இல்லடா..தனியா வந்து மோதறவன்..( நம்ம கேப்டன் மாதிரி)

4. யூசுவலா லவ்வுல இருக்கறவங்களுக்குத்தான் பிளாங்க் கால்ஸ் வரும்.. ( அட லூசுங்களா.. செல் ஃபோன் வெச்சிருக்கற எல்லாருக்குமே பிளாங்க் கால்ஸ் வரும்..)

5. ஐ ஜி உன்னைக்கூப்பிட்டு வெச்சு மிரட்னாராமே...

ஆமா அவர் கிட்டே சொல்லி வை... ( ஏன் இவர் சொல்ல மாட்டாரா?)
அவரு 3 வருஷ்மா தான் ஐ ஜி யா இருக்கார்.. நான் 13 வருஷமா  ரவுடியா இருக்கேன்.. ( நாயே நாயே.. ரவுடியா இருக்கறதுல என்ன சர்வீஸ் கணக்கு வேண்டி கிடக்கு)


6. சாதாரணமா தூங்கறவன் 10 டூ 11க்குள்ள நைட்ல தூங்கிடுவான்.தண்ணி அடிச்சுட்டு தூங்கறவன் நைட் 1 மணிக்குத்தான் தூங்குவான்.  ( ஓஹோ.. வால்பையன்,ராம்சாமி, தினேஷ்னு யாராவது அனுபவம் மிக்கவங்க சொல்லுங்க.. டீட்டெயிலை..)

7.ஹீரோ - என்னைப்பார்த்து நாய்னு சொல்லீட்டியே...( குரங்குன்னு சொல்லி இருக்கனும்)

ஹீரோயின் - நாய்ன்னா ஸ்மார்ட்னு அர்த்தம்.. ( யாராவது இதைப்படிச்சுட்டு கமெண்ட்ல பதிவு நாய்னு போட்டுடாதீங்க..)

ஹீரோ - உலகத்துலயே நாயை ஸ்மார்ட்னு சொன்னது நீ ஒருத்திதான்.. ( உலகத்துலயே நாய்னு சொன்ன பிறகும் அந்த பொண்ணு பின்னால சுத்தறது நீ தான் )

8. ஒருத்தனுக்கு அம்மா, அப்பா இல்லாம இருக்கலாம்.. ஃபிரண்டு இல்லாம கூட இருக்கலாம்.ஆனா காதல் இல்லாத ஆளே கிடையாது.. ( ஏன் நான் இல்ல.?)  ( டைரக்டர் இந்த இடத்துல ஒரு மிஸ்டேக் பண்ணீட்டார். விக்ரமன் படத்துல வர்ற மாதிரி லா லா ல ல அப்படின்னு ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கனும்..ஜஸ்ட் மிஸ்.. ( ஆமா அந்த மியூசிக்கைப்போட்டிருந்தா மட்டும் படம் 100 நாள் ஓடிடவா போகுது..?)

35 comments:

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் டா..வா..ணா..வா?

எல் கே said...

கடமை உணர்சிக்கு ஒரு அளவில்லையா

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

கலக்கல் டா..வா..ணா..வா?

daa டா ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

கடமை உணர்சிக்கு ஒரு அளவில்லையா

கை வசம் சரக்கில்லைன்னா... ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயோ.. அண்ணே.. டி வி ல போடுற படத்துக்கு கூடவா விமர்சனம்... முடியல..

மலையாளம் (பிட்டு படம் இல்ல) மற்றும் தெலுங்கு படங்கள் பற்றியும் விமர்சனம் எழுதலாமே..

சி.பி.செந்தில்குமார் said...

hi hi மறுபடியும் அண்ணனா?

ரஹீம் கஸ்ஸாலி said...

சொதப்பல் படத்தையும் பார்த்து விமர்சனம் எழுதும் அண்ணன் சிபி-யின் கலைசேவை தொடரட்டும்

settaikkaran said...

//எல் கே said...

கடமை உணர்சிக்கு ஒரு அளவில்லையா//

ரிப்பீட்டுக்கறேன்! :-)

இப்படியெல்லாம் படம் வந்திருக்குதுன்னு இதைப் படிச்சதுக்கு அப்பாலே தான் தெரியுது.

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

சொதப்பல் படத்தையும் பார்த்து விமர்சனம் எழுதும் அண்ணன் சிபி-யின் கலைசேவை தொடரட்டும்
February 2, 2011 7:45 AM

hi hi ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//எல் கே said...

கடமை உணர்சிக்கு ஒரு அளவில்லையா//

ரிப்பீட்டுக்கறேன்! :-)

இப்படியெல்லாம் படம் வந்திருக்குதுன்னு இதைப் படிச்சதுக்கு அப்பாலே தான் தெரியுது.

ஹிஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாய்ன்னா ஸ்மார்ட்னு அர்த்தம்.. ( யாராவது இதைப்படிச்சுட்டு கமெண்ட்ல பதிவு நாய்னு போட்டுடாதீங்க..)///

ச்சே ச்சே நாங்க நாயை கேவலப் படுத்த மாட்டோம். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆனா காதல் இல்லாத ஆளே கிடையாது.. ( ஏன் நான் இல்ல.?) //



ஆமா சிபி அண்ணனுக்கு காதல் இல்லை. காதல்கள் காதலிகள் உண்டு.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாய்ன்னா ஸ்மார்ட்னு அர்த்தம்.. ( யாராவது இதைப்படிச்சுட்டு கமெண்ட்ல பதிவு நாய்னு போட்டுடாதீங்க..)///

ச்சே ச்சே நாங்க நாயை கேவலப் படுத்த மாட்டோம். ஹிஹி


நல்லவங்களுக்கு சோதனை வரும்.. ஆனா ஒரு நல்லவனாலயே சோதனை வந்திடுச்சே.. அய்யகோ..

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆனா காதல் இல்லாத ஆளே கிடையாது.. ( ஏன் நான் இல்ல.?) //



ஆமா சிபி அண்ணனுக்கு காதல் இல்லை. காதல்கள் காதலிகள் உண்டு.

அப்படி இருந்திருந்தா கவிதைகளா எழுதி தள்ளீ இருப்பேனே..?

சௌந்தர் said...

6. சாதாரணமா தூங்கறவன் 10 டூ 11க்குள்ள நைட்ல தூங்கிடுவான்.தண்ணி அடிச்சுட்டு தூங்கறவன் நைட் 1 மணிக்குத்தான் தூங்குவான். ( ஓஹோ.. வால்பையன்,ராம்சாமி, தினேஷ்னு யாராவது அனுபவம் மிக்கவங்க சொல்லுங்க.. டீட்டெயிலை..)/////

இதை விட அனுபவசாலி பாபு, ரமேஷ் எல்லாம் இருக்காங்க அவங்க...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ் நல்லவர்னு அவரே சொல்லிக்க்கறாரே..?

சௌந்தர் said...

இந்த படத்தை பற்றி நீங்க பதிவு போட்டு இருப்பது இந்த டைரக்டருக்கு தெரிந்தால் ரொம்ப சந்தோஷபடுவார்...!

சி.பி.செந்தில்குமார் said...

டப்பா படம்னு சொன்னா எப்படி சந்தோஷப்படுவாரு?

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
டப்பா படம்னு சொன்னா எப்படி சந்தோஷப்படுவாரு?////

டப்பா படம்ன்னு கூட யாரும் எழுதலைன்னு அவர் நினைச்சுட்டு இருந்தார்...

Chitra said...

நீ பாக்கும் மொக்கைப்படத்துல கூட பதிவைத்தேத்த ஒரு மேட்டர் சிக்கும்.. விட்ராதே,,


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... இப்படி கொள்கை வைத்து இருப்பவர்களுக்காகவே, இந்த மாதிரி படங்கள் தயாரிக்கிறாங்க என்று நினைக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
டப்பா படம்னு சொன்னா எப்படி சந்தோஷப்படுவாரு?////

டப்பா படம்ன்னு கூட யாரும் எழுதலைன்னு அவர் நினைச்சுட்டு இருந்தார்...


aa..ஆ.. ஆ வெதனை வெட்கம்.. அவமானம்..

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

நீ பாக்கும் மொக்கைப்படத்துல கூட பதிவைத்தேத்த ஒரு மேட்டர் சிக்கும்.. விட்ராதே,,


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... இப்படி கொள்கை வைத்து இருப்பவர்களுக்காகவே, இந்த மாதிரி படங்கள் தயாரிக்கிறாங்க என்று நினைக்கிறேன்.

ஆஹா .. சித்ராவும் கும்மி அடிக்கறாங்களே..

sathishsangkavi.blogspot.com said...

:))

சமுத்ரா said...

:) :D :)

Srini said...

ஐயோ..ஐயோ...!!

Srini said...

ஐயோ..ஐயோ...!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்தப்படம் எப்போ ரிலீஸ் பாஸ்...
இப்பவே கண்ணைகட்டுதே...
வேணா வலிக்குது...

'பரிவை' சே.குமார் said...

டிவியில் போடும் படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சி.பி. அவர்கள் இனி ரேடியோவில் வரும் கதை வசனத்துக்கும் விமர்சனம் எழுதுவார் என்று அவர் சார்பாக சொல்லிக் கொள்கிறேன்.

பாட்டு ரசிகன் said...

நாளைக்கு என்னப்படம் தலைவா

பாட்டு ரசிகன் said...

என் பாட்டையும் கொஞ்சம் கேளுங்க..

Speed Master said...

மொக்கை பதிவு போடுவார்கள் இது என்ன மொக்கை பட பதிவா

ஸ் ஸ் முடியல


http://speedsays.blogspot.com/2011/02/2.html

வைகை said...

உங்கள் பொன்னான பணி தொடரட்டும்!

வாழ்த்துக்கள்!

FARHAN said...

ஆமா இது தமிழ் படமா?

Madurai pandi said...

ஐயஹோ!!! இப்போ TV ல போடுற படத்துக்குலாம் விமர்சனம் எழுத ஆரம்பிசிடானுன்களே!!! எங்களை காப்பாத்த ஆள் இல்லையா??
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org