Tuesday, February 15, 2011

நாடு ஏன் இப்படி குட்டிச்சுவரா போச்சு?

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_180507000000.jpg
1.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி: கடந்த தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்னை தான், தேர்தல் முடிவைத் தீர்மானிக்கப் போகிறது என, எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் தவறான பிரசாரம் செய்தன. குறிப்பாக, சோனியாவைப் பற்றி, "சிடி' போட்டு அவதூறு பரப்பின. அதையும் மீறித்தான் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுபோலத்தான், இந்தத் தேர்தலும் இருக்கும். ஸ்பெக்ட்ரம் மீதான ஓட்டெடுப்பாக இது இருக்கப் போவதில்லை.



வழக்கமா கலைஞருக்கு தி மு க காரங்க தானே ஜால்ரா அடிப்பாங்க.. நீங்களுமா?

---------------------------------------------------------------------------------

2.இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேட்டி: ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக, பல தரப்பினர் கோரிக்கை விடுத்ததின் பேரில் விசாரணை நடத்தியதில், ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் சுமத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வந்ததை, அரசு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா, தனக்கு ஆதாயம் தேடிக்கொண்டு சதி திட்டம் தீட்டியுள்ளார்; லஞ்சம் வாங்கி உள்ளார்; லஞ்சம் கொடுத்துள்ளார்; தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

ஆமா.. வேண்டியவங்களுக்குத்தான் உதவி பண்ணுவாங்க... வேண்டாதவங்களுக்கா உதவி பண்ணுவாங்க?ஆனா அண்ணன் இப்போ கம்பி எண்ணுறதைப்பாத்தீங்க இல்ல... பாவம் கட்டு கட்டா நோட்டை எண்ணுனாரு...

-------------------------------------

3. சமூக ஆர்வலர்கள் சாடல் : ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலையும் சந்திக்கும் அவசரம் வந்துள்ளது. இந்த ஊழலால் தி.மு.க., தொண்டனே அவமானப்பட்டு நிற்கிறான். கோர்ட் மட்டும் இல்லாதிருந்தால் நாட்டை விற்றிருப்பர். இலவச வீடு வழங்கும் திட்டத்தில், கொடுக்கப்படும் பணத்தில், கழிவறை கூட கட்ட முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ, வன்முறையில் இறங்கினாலோ சும்மா இருக்க மாட்டோம். காலை 7 மணிக்கே சென்று ஓட்டு போட்டு விடுங்கள். இல்லாவிட்டால், மற்றவர்கள் போட்டு விடுவர்.

தி மு க தொண்டன் அவமானப்பட்டு நிக்கறான், ஓக்கே. தி மு க தலைவனுங்க யாரும் அவமானப்படலையே...ராசாவை தூக்கில் போட்டாக்கூட நம்ம கலைஞரு “ ஒருவரை தூக்கில் போடுவதால் மட்டுமே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார்”னு முரசொலில எழுதப்போறாரு.

--------------------------------------------------


4. காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்ததற்காக, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள தி.மு.க., பேச்சாளர் வாகை முத்தழகன் பேட்டி: கருணாநிதியிடம் அவர் மகன்கள் கூட நம்பிக்கை வைக்க மாட்டார்கள்; தொண்டர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களில், நானும் ஒருவன். தலைவர் என்பவர் உண்மைகளை விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டார். குறையுள்ளவன் தான் மாற்று முகாம் தேடிப் போவான்; என்னிடத்தில் நிறைகள் தான் அதிகம்.

எல்லாம் இருந்து என்ன பண்றது? ஜால்ரா அடிக்கத்தெரியலையே...வாலி, வைரமுத்துவெல்லாம் பாருங்க.. என்னமா ஜால்ரா அடிச்சு பொழப்பை ஓட்டறாங்க..விசுவாசமா இருந்தா மட்டும் போதாது... கேக்கறவங்க காது கூசுற அளவு ஜால்ரா அடிக்கனும்.அப்பத்தான் கழகத்துல முன்னேற முடியும்.

-------------------------------------------------------------


5எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேட்டி: உலக மக்கள் பிரச்னை எல்லாம் தமிழன் எழுதியிருக்கிறான். ஆனால், தமிழர்கள் பிரச்னை என்று வந்தால், பிறமொழி எழுத்தாளர்கள் யாருமே பெரிதாக கவலைப்படவுமில்லை; எழுதவுமில்லை. நவீன படைப்பு இலக்கியவாதிகள் ஈழம் குறித்து பதிவு செய்யத் தவறிவிட்டனர்

அவங்களுக்கு அதுக்கெல்லாம் எங்கே டைம் இருக்கு...?தேகம் பற்றிய சந்தேகங்களுக்கு நாவல் எழுதவே நேரம் சரியா இருக்கு.
அப்படியே மீறி எழுதுனாலும் மீறி மீறி போனா 100 புக் விக்கும்.அது பதிப்பக வாடகைக்கு கூட கட்டாது.. 100 டிகிரி, திருப்பூர் பனியனும்,அருப்புக்கோட்டை அகிலாவும்னு நாவல் எழுதுனா 2 லட்சம் புக் விக்குது
 
  --------------------------------------------------
 http://narumugai.com/wp-content/uploads/2010/10/Sameera_Reddy1.jpg
6.தமிழக காங்., எம்.எல்.ஏ., யசோதா: எனது தொகுதியில் உள்ள ஆதனூருக்கு பாலம் தேவை என, அ.தி.மு.க., ஆட்சியிலும் கேட்டேன்; கிடைக்கவில்லை. இந்த ஆட்சியிலும் ஐந்தாண்டுகளாக தொடர்ந்து கேட்டு வந்தேன்; கிடைக்கவில்லை.

உங்களை யாரு கலைஞர்ட்ட டைரக்ட்டா கேக்க சொன்னது? நீரா ராடியா கிட்ட சொல்லி இருந்தா வாங்கற கமிஷனை வாங்கிட்டு ஆக வேண்டியதை பார்த்திருப்பாங்க... இன்னும் பச்சப்புள்ளயாவே இருந்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியாது.

-----------------------------------------------------


7.தமிழக சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன்: புழல் சிறையில், நாடாவால் தூக்கு போட்டு, ஒரு கைதி இறந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நல்லா விசாரிச்சு பாருங்க . அந்த தூக்கை போட்டதே அந்த ஜெயிலராத்தான் இருப்பான்.நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா  ராசாவிடம் இனி ஊழல் பண்ண வேணாம்னு அறிவுறுத்தி உள்ளேன்னு நம்ம தன்மானங்கெட்ட தலைவரு சொன்ன மாதிரி இருக்கு.

--------------------------------------

8முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி: நம் வீட்டு பிள்ளைகள், சினிமாவை நம்பி ஓடுகின்றனர். நடிகரின் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுகிறான்; பால் இல்லை என்றால் பீர் ஊற்றுகிறான். அவன் ஹீரோவுக்கு பிடித்தது பீர்; அதனால் அதை ஊற்றுகிறான். இது கேவலமான கலாசாரம்.

நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா 2011 எலக்‌ஷன்ல யார்கிட்டே பிச்சை எடுக்கலாம்?கலைஞரா? ஜெ-வா?ன்னு இன்னும் முடிவு பண்ணாம பச்சோந்தி மாதிரி மாத்தி மாத்தி குழப்பறாரே.. அந்த கேவலமான கலாச்சாரத்துக்கு இது மோசம் இலை.

-----------------------------------------------------

9. தமிழக அரசின் துணை மானியக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: அரசுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்த வேண்டிய மின்வரி மற்றும் மின்வரி மீதான தண்ட வட்டித் தொகை 1,235 கோடியே 13 லட்சம் ரூபாய், மின் வாரிய பங்கு மூலதனமாக மாற்றப்பட்டுள்ளது.

நல்லா விசாரிங்கப்பா.. கடைசில கலைஞர் டி வி நிர்வாகம் கணக்குல அதை வரவு வெச்சிருக்கப்போறாங்க..

---------------------------------------------
10. நடு நிசி நாய்கள் படம் பல கலாச்சார சீரழிவுகளை உள்ளடக்கியது. படம் வந்தால் பல சர்ச்சைகளை சந்திக்க நேரிடும். - இயக்குநர் கவுதம் மேனன்


அப்போ சீன் எடுக்கும்போதே வேணும்னே தான் எடுத்திருக்கீங்க...தமிழ்க்கலாச்சாரம் எக்கேடு கெட்டா என்ன? உங்களுக்கு கல்லா நிரம்புனா சரி...
--------------------------------------------

டிஸ்கி -1  சமீரா ரெட்டியின்  முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.. ஆனா டாலர் சரியா தெரியலன்னு யாராவது கவலைப்பட்டா நான் கடுப்பாயிடுவேன் . ஹி ஹி .

டிஸ்கி -2  - நாடு குட்டிச்சுவர் ஆகறது இருக்கட்டும்.. நீ ஏன் இப்படி குட்டி சுவரா இருக்கேன்ன்?னு கேக்கறவங்களுக்கு நாடு எவ்வழி குடிமகன் அவ்வழி.. ஹி ஹி

57 comments:

அஞ்சா சிங்கம் said...

முதல் வடை

அஞ்சா சிங்கம் said...

சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.. ஆனா டாலர் சரியா தெரியலன்னு யாராவது கவலைப்பட்டா நான் கடுப்பாயிடுவேன் . ஹி ஹி ...............////////////////


ஆனா காதுல பார்த்தீங்களா எவ்ளோ பெரிய .............. வளையம்

சக்தி கல்வி மையம் said...

ஒரு நாளைக்கு இரண்டு ஷொவா? கலக்குங்க...

Unknown said...

இந்த பதிவுல எல்லாம் பெருசு பெருசா இருக்கே விமர்சனத்தை சொன்னேன்.

மாணவன் said...

:)))))))

settaikkaran said...

சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுலே அவர் சரியா ஏன் தலை சீவலை? இரண்டாவது ஸ்டில்லுலே செயின் தெரியுது, ஆனா டாலர் தெரியலியே, ஏன்? :-)))

Speed Master said...

அருமை

படங்களும்

Unknown said...

உங்க பதில்கள் சூப்பரு........

1.அதே நேரத்துல ரெண்டாவது கேள்விக்கு இப்படி பதில் சொல்லி இருக்கலாமோ?

வெளிய இருந்தா கனி எண்ணுவார்.......உள்ள இருக்கறதுனால கம்பி எண்ணுறார் ஹி ஹி!
(அவன் என்னடான்னா உள்ள கழியரதுக்கு கூட A/C கக்கூசு வேணும்னு கேக்குறான் நீங்க வேற!)

2.ஆமா அந்தப்பொண்ணு போட்டு இருக்கே ஒரு பதக்கம் அதுக்கு பேரு என்ன நெஞ்சப்பதக்கமா சாரிபா தங்கப்பதக்கமா ஹி ஹி!!

சி.பி.செந்தில்குமார் said...

vikki விக்கி உலகத்துக்கு என்னை மாட்டி விடறதுல அவ்வளவு குஷி ம் ம்
இருக்கட்டும்யா.. நாளைக்கு நீங்களும் பதிவு போடுவீங்கல்லா.. நாங்களும் கமெண்ட் இப்படி ஏடாகூடமா போட்டு மாட்டி விடுவோமில்ல..

பொன் மாலை பொழுது said...

சி.பி. உங்க வலைபூதான் இங்கே குமுதம் இல்லாத குறையை போக்குது அய்யா!
நெறைய நடிகைகள் படமா வருதே!!
வாழ்க உங்கள் தொண்டு.:))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்பாஸ் ஒரே நால்ல இரண்டு அசத்தலா...

அரசியல் உலகம் கடந்த 50 ஆண்டுககளில் தலை கீழாகமாறிவிட்டது..

கேலி கிண்டல் அடிக்கூட லாயக்கி அற்றவர்கள் தற்போது அரசியல் களத்தில் உள்ளவர்கள்...
அரசியல் நையாண்டி தர்பார் அருமை..

Unknown said...

கல்யாணம் ஆனவங்களே இப்படிதாம்பா ஹிஹி!! என்னதான் சொல்லிக்கிறேன்!

Unknown said...

சி பி சார் எனி கோவம் but ஆனா why ஏன்?

தப்பா இருந்தா மன்னியுங்கள் தலைவரே!

சி.பி.செந்தில்குமார் said...

ச்சே ச்சே.. கோபம் எல்லாம் இல்லை.. ஹி ஹி நானும் தமிழன் தான் தமிழனுக்கு எப்போ கோபம் வந்திருக்கு. அவன் சொரணை கெட்டு இருக்கறதாலதானே அரசியல் வாதிங்க இப்படி மிதிக்கறாங்க..

சும்மா ஜாலி கமெண்ட் விக்கி உலகம்

சி.பி.செந்தில்குமார் said...

கக்கு - மாணிக்கம் said...

சி.பி. உங்க வலைபூதான் இங்கே குமுதம் இல்லாத குறையை போக்குது அய்யா!
நெறைய நடிகைகள் படமா வருதே!!
வாழ்க உங்கள் தொண்டு.:))

நக்கலா? வாழ்த்தா?ன்னு தெரியல... ம் ம்

Unknown said...

சரி விடுங்க தமிழனா பொறந்தாச்சி, வாழ்ந்து பாத்துடுவோம் ஹி ஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

sema kalakkal machchi...... Sameera vaalka!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

very open type...... all your comments... hi.... hi...//

சேலம் தேவா said...

//நம்ம தன்மானங்கெட்ட தலைவரு//

ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ தெகிரியம் கூடாது..!! :)

சமீராவின் எந்த திரைப்படம் இது..?!

சி.பி.செந்தில்குமார் said...

சேலம் தேவா ஜோக் 10 ஐ படிக்கவும்.

பதிவுக்கு சம்பந்தமில்லாம்ல் ஸ்டில் போடமாட்டான் இந்த மற கழண்ட சாரி மறத்தமிழன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாடு ஏன் இப்படி குட்டிச்சுவரா போச்சு?//

நீங்க பதிவு எழுதுறதால இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

ஓக்கே.. இன்னும் 14 மணீ நேரம் நான் எந்தப்பதிவும் போடலைய்யா... நாடு நல்லாருக்கனும்... பார்ப்போம்

வைகை said...

சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது./////


ஆமா சிபி....நாடு உண்மைலே இந்தமாதிரி குட்டிங்க உள்ள சுவரா போச்சு!

Chitra said...

சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.. ஆனா டாலர் சரியா தெரியலன்னு யாராவது கவலைப்பட்டா நான் கடுப்பாயிடுவேன் . ஹி ஹி .


...... இதுல நாடு ஏன் குட்டிசுவரா போச்சுன்னு கவலைப்படுறாங்களாக்கும்? என்ன கொடுமை சார், இது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோபம் எல்லாம் இல்லை.. ஹி ஹி நானும் தமிழன் தான் தமிழனுக்கு எப்போ கோபம் வந்திருக்கு. அவன் சொரணை கெட்டு இருக்கறதாலதானே அரசியல் வாதிங்க இப்படி மிதிக்கறாங்க//

:)))

Ram said...

பத்து கேள்வில எத்தனையோ பேர் சொன்னத எழுதியிருக்கீங்க.. ஆனா போட்டோஸ்.??? கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் பத்தி பேசியிருக்கார்.. அவர் போட்டோ கூட இல்ல.. ஆனா சமீராவுக்கு ரெண்டு போட்டோ.!!! என்ன கொடுமை.. யாருப்பா அது வீட்ல.. சார கொஞ்சம் கவனிங்கப்பா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தமிழன் எதையும் தாங்குவான்!

Unknown said...

//ராசாவை தூக்கில் போட்டாக்கூட நம்ம கலைஞரு “ ஒருவரை தூக்கில் போடுவதால் மட்டுமே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார்”னு முரசொலில எழுதப்போறாரு//
Super! :-)

Unknown said...

//ராசாவை தூக்கில் போட்டாக்கூட நம்ம கலைஞரு “ ஒருவரை தூக்கில் போடுவதால் மட்டுமே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார்”னு முரசொலில எழுதப்போறாரு//
Super! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.///////

என்னது செயினா எங்கே?

அன்பரசன் said...

படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கலாங்களா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பருங்க, அட சமீரா ரெட்டிய சொன்னேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட்டுக போற போக்க பார்த்தா ரெண்டு நாளைக்கு தூங்க விடமாட்டாய்ங்க போல?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பருங்க, அட சமீரா ரெட்டிய சொன்னேன்...

நம்பிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட்டுக போற போக்க பார்த்தா ரெண்டு நாளைக்கு தூங்க விடமாட்டாய்ங்க போல?

யாரை சொல்றீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. காதலர் தினத்தன்று நீங்கள் என்ன செஞ்சீங்க என்பதை ஓபனாக ஒரு பதிவு போடவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட்டுக போற போக்க பார்த்தா ரெண்டு நாளைக்கு தூங்க விடமாட்டாய்ங்க போல?

யாரை சொல்றீங்க?/////

மேல பதிவுல நீங்க போட்டிருக்கிற கமெண்ட்டைத்தான் சொன்னேன்... போட்டு பிரிச்சி மேஞ்சி இருக்கீங்களே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. காதலர் தினத்தன்று நீங்கள் என்ன செஞ்சீங்க என்பதை ஓபனாக ஒரு பதிவு போடவும்//////

ஓப்பனான்னா கதவை திறந்து வெச்சுக்கிட்டா? அது சேஃப்டி கெடையாதே சிபி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// அஞ்சா சிங்கம் said...
சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.. ஆனா டாலர் சரியா தெரியலன்னு யாராவது கவலைப்பட்டா நான் கடுப்பாயிடுவேன் . ஹி ஹி ...............////////////////


ஆனா காதுல பார்த்தீங்களா எவ்ளோ பெரிய .............. வளையம்//////

வெளங்கிருச்சு.......

சி.பி.செந்தில்குமார் said...

இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.. பதிவுலக ரசிகர்கள் ஆவலா இருகாங்க.. கூர்மதியன் பதிவு போட்டுட்டாரு.. அடுத்து நீங்க தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பருங்க, அட சமீரா ரெட்டிய சொன்னேன்...

நம்பிட்டேன்/////////

இதுல என்ன இருக்கு.....? ஏன் அந்தப் புள்ள நல்லா இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.. பதிவுலக ரசிகர்கள் ஆவலா இருகாங்க.. கூர்மதியன் பதிவு போட்டுட்டாரு.. அடுத்து நீங்க தான்///////

ஏன் இந்த வேல? இந்த ஊருல காதலாவது தினமாவது...... ஊருல இருக்கும் போதுனா கூட பரவால்ல.... ஹி....ஹி.........

சி.பி.செந்தில்குமார் said...

>>>அன்பரசன் said...

படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கலாங்களா???

ராசாவுக்கும் ,தி மு க வுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுதான் ஓட்டு போட்டமா?

நாம எந்தக்காலத்துல சம்பந்தமா ஸ்டில்ஸ் போட்டோம்?எல்லாம் சும்மா கிளாமருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சேட்டைக்காரன் said...
சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுலே அவர் சரியா ஏன் தலை சீவலை? இரண்டாவது ஸ்டில்லுலே செயின் தெரியுது, ஆனா டாலர் தெரியலியே, ஏன்? :-))//////

அப்படியா.........? எனக்கு செயினே தெரியல சேட்டை.....!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.. பதிவுலக ரசிகர்கள் ஆவலா இருகாங்க.. கூர்மதியன் பதிவு போட்டுட்டாரு.. அடுத்து நீங்க தான்///////

ஏன் இந்த வேல? இந்த ஊருல காதலாவது தினமாவது...... ஊருல இருக்கும் போதுனா கூட பரவால்ல.... ஹி....ஹி.........

அங்கே தான் மாட்னீங்க. சொந்த ஊர்ல தமிழன் எப்பவும் கமுக்கமாதான் இருப்பான். அசலூர்லதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.. பதிவுலக ரசிகர்கள் ஆவலா இருகாங்க.. கூர்மதியன் பதிவு போட்டுட்டாரு.. அடுத்து நீங்க தான்///////

ஏன் இந்த வேல? இந்த ஊருல காதலாவது தினமாவது...... ஊருல இருக்கும் போதுனா கூட பரவால்ல.... ஹி....ஹி.........

அங்கே தான் மாட்னீங்க. சொந்த ஊர்ல தமிழன் எப்பவும் கமுக்கமாதான் இருப்பான். அசலூர்லதான்...../////

இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல.....?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி நீங்க ஒருத்த்ர்தான் இமேஜ் பற்றி கவலைப்படாமல் ஓபனா பேசறவர்னு பதிவுலகம் போற்றுது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி ஹி நீங்க ஒருத்த்ர்தான் இமேஜ் பற்றி கவலைப்படாமல் ஓபனா பேசறவர்னு பதிவுலகம் போற்றுது..../////

இப்படிச்சொன்னா எல்லாத்தையும் உளறிடுவேன்னு ஒரு நப்பாச? யாருகிட்ட?

Ram said...

//இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.. பதிவுலக ரசிகர்கள் ஆவலா இருகாங்க.. கூர்மதியன் பதிவு போட்டுட்டாரு.. அடுத்து நீங்க தான்
//

ஏன் இந்த கொலவெறி.!!!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி ஹி நீங்க ஒருத்த்ர்தான் இமேஜ் பற்றி கவலைப்படாமல் ஓபனா பேசறவர்னு பதிவுலகம் போற்றுது..../////

இப்படிச்சொன்னா எல்லாத்தையும் உளறிடுவேன்னு ஒரு நப்பாச? யாருகிட்ட?


aa ஆ ஆ ஒத்துக்கிட்டாரு ராம்சாமி எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாரு

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி கூர்மதியன் said...

//இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.. பதிவுலக ரசிகர்கள் ஆவலா இருகாங்க.. கூர்மதியன் பதிவு போட்டுட்டாரு.. அடுத்து நீங்க தான்
//

ஏன் இந்த கொலவெறி.!!!

நீங்க இன்னும் இங்கே தான் இருக்கிங்களா? ஆஹா மாட்டிக்கிட்டேனே..?

Ram said...

//நீங்க இன்னும் இங்கே தான் இருக்கிங்களா? ஆஹா மாட்டிக்கிட்டேனே..?
//

நீங்க மாட்டல பாஸ்.. நான் தான் மாட்டிகிட்டன்.. எல்லாரும் உஷாரா இருக்க நான் மட்டும் பதிவு போட்டுட்டன்.. அந்த ப்ளாக்கையே தூக்க போறேன்.. இன்னொரு தடவ ஏமாறமாட்டேன்...

டக்கால்டி said...

அப்போ சீன் எடுக்கும்போதே வேணும்னே தான் எடுத்திருக்கீங்க...தமிழ்க்கலாச்சாரம் எக்கேடு கெட்டா என்ன?//

அப்போ அது சீன் படமா? அப்போ எப்படியும் படம் வெளிவந்த ரெண்டாவது ஷோல உங்க விமர்சனம் வந்துடும்...

Me the escape..done the escape...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆமா ஆமா... நம்ம பன்னிக்குட்டி காதலர் தினத்துல என்ன பண்ணினார் ங்கிறத ஓபன் ஆ ஒரு பதிவு போட்டு சொல்லணும்! இது காலத்தின் கட்டாயம்! இல்லைன்னா, அவரு என்ன பண்ணியிருப்பார் னு கற்பனை பண்ணிப் பார்த்து ஒரு பதிவு போட்டுவேன் னு எச்சரிக்கிறேன்!

MoonramKonam Magazine Group said...

நெத்தியடி சிபி

Unknown said...

//ஆமா.. வேண்டியவங்களுக்குத்தான் உதவி பண்ணுவாங்க... வேண்டாதவங்களுக்கா உதவி பண்ணுவாங்க?//
வேண்டி'ன்ன்னா பழனிக்கு மொட்டை வேண்டியா ?

//தி மு க தொண்டன் அவமானப்பட்டு நிக்கறான், ஓக்கே. தி மு க தலைவனுங்க யாரும் அவமானப்படலையே...ராசாவை தூக்கில் போட்டாக்கூட நம்ம கலைஞரு “ ஒருவரை தூக்கில் போடுவதால் மட்டுமே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார்”னு முரசொலில எழுதப்போறாரு.//

தூக்கில் (காயப்) போட அவர் என்ன ஷக்கிலா ஜாக்கெட்டா ?

//உங்களை யாரு கலைஞர்ட்ட டைரக்ட்டா கேக்க சொன்னது? நீரா ராடியா கிட்ட சொல்லி இருந்தா வாங்கற கமிஷனை வாங்கிட்டு ஆக வேண்டியதை பார்த்திருப்பாங்க... இன்னும் பச்சப்புள்ளயாவே இருந்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியாது.//

பச்சப்புள்ளயா ? அப்போ இன்னும் வயசுக்கே வரலையோ ?

//நல்லா விசாரிச்சு பாருங்க . அந்த தூக்கை போட்டதே அந்த ஜெயிலராத்தான் இருப்பான்.நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா ராசாவிடம் இனி ஊழல் பண்ண வேணாம்னு அறிவுறுத்தி உள்ளேன்னு நம்ம தன்மானங்கெட்ட தலைவரு சொன்ன மாதிரி இருக்கு.//
நல்ல ஜெயிலர்..

ராசாவையும் இந்த சிறையிலேயே அடைக்கலாம் போல !


//நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா 2011 எலக்‌ஷன்ல யார்கிட்டே பிச்சை எடுக்கலாம்?கலைஞரா? ஜெ-வா?ன்னு இன்னும் முடிவு பண்ணாம பச்சோந்தி மாதிரி மாத்தி மாத்தி குழப்பறாரே.. அந்த கேவலமான கலாச்சாரத்துக்கு இது மோசம் இலை.//

'31' சீட்டுக்குத்தான் இந்த முக்கு முக்குநீங்களோ ?


//அப்போ சீன் எடுக்கும்போதே வேணும்னே தான் எடுத்திருக்கீங்க...தமிழ்க்கலாச்சாரம் எக்கேடு கெட்டா என்ன? உங்களுக்கு கல்லா நிரம்புனா சரி...//

சீன்'ன்னா, என்ன மலையாள பட சீனோ ?



//டிஸ்கி -1 சமீரா ரெட்டியின் முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.. ஆனா டாலர் சரியா தெரியலன்னு யாராவது கவலைப்பட்டா நான் கடுப்பாயிடுவேன் . ஹி ஹி .//

ஒ' அவுங்க சமீரா ரெட்டியா...?
சமீரா மேனன் என்று அவுங்க இன்னும் பெயர் மாத்தலையோ ?

//டிஸ்கி -2 - நாடு குட்டிச்சுவர் ஆகறது இருக்கட்டும்.. நீ ஏன் இப்படி குட்டி சுவரா இருக்கேன்ன்?னு கேக்கறவங்களுக்கு நாடு எவ்வழி குடிமகன் அவ்வழி.. ஹி ஹி//

குடி குடியைத் கெடுக்கும்...
குட்டி, சட்டியை உடைக்குமோ ?

Unknown said...

நடு நிசி (இசி) நாய்கள் !
இதுக்கு, இந்தக் கதை தேவலை
http://writervisa.blogspot.com/2011/02/blog-post.html