Thursday, February 03, 2011

நாடகத்தின் 2 வது காட்சி - ராசா ராஜினாமா?கூடிய பொதுக்குழு

http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_52933466435.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, திமுக கட்சிப் பதவியில் இருந்து ஆ.ராசா ராஜினாமா செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், ராசாவுக்கு ஆதரவாக திமுக பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூடியது.
தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன், பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் அமைச்சர்கள் உள்பட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசார வியூகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX19qzDKq43lopCGDmTz91cbRnV9lNiyI5f8TcbeXxCA7SxiEOO-Y60RlfCr8zzWkhefkIMJVgh2SOXLSQLW0tj44nHAu7KR_YK1w8_EwgG8JP5mCH9P-j7NEgTM4Ysa20xeN6rJgGbfxj/s1600/K1.jpg 
ராசா ராஜினாமா..
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் புதன்கிழமை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ நேற்று டெல்லியில் கைது செய்தது.இந்நிலையில், ராசா சார்பில் திமுக பொதுக் குழுவில் ராஜினாமா கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது என்றும், அவர் தனது திமுக கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் இருந்து விலகியதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம்...
மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டதால் மட்டுமே குற்றவாளி என்று கருதிவிட முடியாது என ராசாவுக்கு ஆதரவாக திமுக பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

எல்லாமே எழுதி வைத்து அரங்கேற்றப்படும் நாடகம் போலவே உள்ளது.இதுவரை ராசாவுக்கு நெஞ்சு வலி வராமல் போனதே அதிசயம்தான்.

இனி தலித்துக்கு எதிரான நடவடிக்கை என கலைஞர் சப்பைக்கட்டு கட்டக்கூடும்.காங்கிரஸ் இதுதான் சாக்கு.. கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை என்பது போல ஆட்சியில் பங்கும் 120 சீட்டும் கேட்கும்.

அரசியல் வானில் குழப்பமான நிலையே தென்படுகிறது.. தமிழன் விழித்துக்கொள்வானா? இல்லை பழைய குருடி கதவை திறடி என குத்துனா அய்யா இல்லைன்னா அம்மா என ஒரே பக்கமாக சாய்வானா? என தெரிய வில்லை.

27 comments:

Speed Master said...

பார்ப்போம் 3 வது காட்சியை

ரஹீம் கஸ்ஸாலி said...

வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.

வைகை said...

யாருக்கு எத்தனை சீட் மிஞ்சினாலும்....தமிழனுக்கு கோவணம் மட்டுமே மிஞ்சும்!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழன் எல்லா தொகுதிலயும் ஒரு சுயேச்சையை ஜெயிக்க வெச்சுட்டா?

Anonymous said...

அரசியல் வானில் குழப்பமான நிலையே தென்படுகிறது.. தமிழன் விழித்துக்கொள்வானா?//
தமிழன் முழிச்சிகிட்டான் ஓட்டுக்கு 5000 கேட்குறான்

Anonymous said...

என்னா ஸ்பீடு

Anonymous said...

இருடி நானும் இன்னொரு பதிவு போடுறேன்

Anonymous said...

ராசாவை வெச்சே 3 பதிவு

Anonymous said...

ஆன்லைன்ல 40 அடங்கொன்னியா

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆர்.கே.சதீஷ்குமார் said...

இருடி நானும் இன்னொரு பதிவு போடுறேன்


maRupadiyumaa?மறுபடியுமா?

சசிகுமார் said...

நாடகத்தின் இறுதி காட்சி அனைவரும் அறிந்ததே ராசா மீதான குற்றம் நிரூபிக்க படாததால் அவரை அப்பட்டமான நிரபராதி என தீர்ப்பளிக்கிறோம். மேலும் தேவயில்லாமல் ஒரு நிரபராதி மீது வீண் பலி சுமத்திய சி.பி.யை அதிகாரிகளை தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றும் படி உத்தரவிடுகிறோம்.

செல்வா said...

//அவர் தனது திமுக கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் இருந்து விலகியதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

அடடா ?!

செல்வா said...

//எல்லாமே எழுதி வைத்து அரங்கேற்றப்படும் நாடகம் போலவே உள்ளது.இதுவரை ராசாவுக்கு நெஞ்சு வலி வராமல் போனதே அதிசயம்தான். //

நீங்க தான் இந்த நாடகத்துக்கு கதை எழுதுறீங்களா ? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>சசிகுமார் said...

நாடகத்தின் இறுதி காட்சி அனைவரும் அறிந்ததே ராசா மீதான குற்றம் நிரூபிக்க படாததால் அவரை அப்பட்டமான நிரபராதி என தீர்ப்பளிக்கிறோம். மேலும் தேவயில்லாமல் ஒரு நிரபராதி மீது வீண் பலி சுமத்திய சி.பி.யை அதிகாரிகளை தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றும் படி உத்தரவிடுகிறோம்.


hi hi நான் என்ன கவர்மெண்ட் ஆஃபீசரா?

MANO நாஞ்சில் மனோ said...

/ஒருவர் கைது செய்யப்பட்டதால் மட்டுமே குற்றவாளி என்று கருதிவிட முடியாது என ராசாவுக்கு ஆதரவாக திமுக பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.///


இந்த கூத்தை அப்பவே நான் எதிபாத்தேன்...
வெளங்குச்சு போ.....

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

//எல்லாமே எழுதி வைத்து அரங்கேற்றப்படும் நாடகம் போலவே உள்ளது.இதுவரை ராசாவுக்கு நெஞ்சு வலி வராமல் போனதே அதிசயம்தான். //

நீங்க தான் இந்த நாடகத்துக்கு கதை எழுதுறீங்களா ? ஹி ஹி

kavithai கவிதை எழுதவே தட்டுத்தடுமாறுது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவங்க கச்சேரியை ஆரம்பிச்சிடாங்களா..
எல்லாமே நாடகம்..

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

/ஒருவர் கைது செய்யப்பட்டதால் மட்டுமே குற்றவாளி என்று கருதிவிட முடியாது என ராசாவுக்கு ஆதரவாக திமுக பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.///


இந்த கூத்தை அப்பவே நான் எதிபாத்தேன்...
வெளங்குச்சு போ.....


நேத்தே நீங்க சொன்னீங்க ஜோசியரோ # டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...

இவங்க கச்சேரியை ஆரம்பிச்சிடாங்களா..
எல்லாமே நாடகம்..


உலகமே ஒரு நாடக மேடை

Arun Prasath said...

ஐயோ அரசியல்

தங்கராசு நாகேந்திரன் said...

எல்லாமே எழுதி வைத்து அரங்கேற்றப்படும் நாடகம் போலவே உள்ளது.இதுவரை ராசாவுக்கு நெஞ்சு வலி வராமல் போனதே அதிசயம்தான்.
நல்லாச் சொன்னிங்க

Unknown said...

இது இன்னா எனக்கென்னமோ செக் வைக்கப்படுது சுத்தின்னு தோணுது......ஆனா நம்ம சனம் இப்போ டாஸ்மாக்குல பாருங்க இதுதான் டாப் டாப்பிக்கு!!

Unknown said...

எதாவது பாம்டாப்போட சுத்துரீங்களா இப்படி பதிவா போட்டு தாக்குறீங்க யப்பா முடியல!!

Unknown said...

இவர் ஆட்சியில் தான் மூணு வேலை சோறு சாப்பிடுகிறார்களாம்...
- மேடையில் பெண் அமைச்சர்
(அரிசியை கண்டு பிடித்தவர் கலைஞரோ ?)

Unknown said...

/ஒருவர் கைது செய்யப்பட்டதால் மட்டுமே குற்றவாளி என்று கருதிவிட முடியாது என ராசாவுக்கு ஆதரவாக திமுக பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.///

இதுதான் கருணா நீதி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....!

முத்தரசு said...

இதே தான்....எல்லா தொகுதியிலும் சுயேச்சை வெற்றி பெற செய்தால்???? சி.பி. இதை வழிமொழிகிறேன்.

இன்னும் பேரம் முடிவாகவில்லையே? பார்ப்போம்.

மூன்றாவது அணி உருவாகுமோ?