Sunday, October 31, 2010

ஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +

Crank: High Voltage Wallpapers


சின்னப்பசங்க எல்லாம் படிக்கறாங்களே இரும்புக்கை மாயாவி,இந்த லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ்ல எல்லாம் வருமே அந்த கேரக்டரை உல்டா பண்ணி ஒரு ஆக்‌ஷன் படம் (பப்படம்).நான் எப்படி ஏமாந்தேன்னா போஸ்டர்ல டிரான்ஸ்போர்ட்டர் பாகம் 4 அப்படின்னு போட்டிருந்தது.உள்ளே போன பிறகு தான்  மேட்டர்தெரிஞ்சது. (மேட்டரே இல்லாத படம் என)

படத்தோட கதை என்னன்னா (அதாவது என்ன கதை விட்டிருக்காங்கன்னா)
ஹீரோவின் இதயத்தை ஆபரேஷன் பண்ணி எடுத்து ஒரு செயற்கை இதயத்தை பொருத்துகிறார்கள்.அந்த இதயம் வில்லனின் உடம்பில் பொருத்தனும்.ஆனால் ஹீரோ விடுவாரா?என்ன என்னவோ தகிடு தித்தம் பண்ணி தன் இதயத்தை காப்பாற்றுகிறார்.ஆனால்.... (பெரிய சஸ்பென்ஸ்,டப்பா படத்துக்கு என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடகக்கு?)


படத்தில் வரும் காது குத்தல் சீன்கள் (சாதா சீன்)


1.எந்த விதமான ஸ்பெஷல் சக்தியும் இல்லாத ஹீரோ ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தொட்டு பவர் ஏத்திக்கிறார். (நல்ல வேளை இந்த படத்தை விஜய் இன்னும் பாக்கலை).இதுக்கு நரசிம்மாவுல கேப்டன் விட்ட ரீல் எவ்வளவோ தேவலை.


2.ஹீரோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி வீக் ஆனதும் அதை சார்ஜ் ஏற்றிக்கொள்ள ஏதாவது மனித உடலுடன் உராய்வு ஏற்றிக்கொள் என சயிண்ட்டிஸ்ட் ஐடியா தர (இவர் அல்லவோ நல்ல சயிண்ட்டிஸ்ட்) ஹீரோ இருப்பதோ ஓப்பன் ரேஸ் மைதானம்,என்ன செய்வார் பாவம்?ஒரு 60 வயது லேடியை (கிழ போல்ட்டை) இடிக்கிறார்.என்ன கண்றாவி கற்பனை சார் இது.


3. மேலும் சார்ஜ் பற்றாததால் (அது எப்படி பத்தும்?) ஹீரோயினிடம் ஓப்பன் கிரவுண்டில் தள்ளி ஜல்சா பண்றார்.இந்த ஒரு சீனுக்காகவே ஆஸ்கார் தரலாம்.இன்னொவேஷன் அண்ட் கிரியேட்டிவ் மைண்ட் (INNOVATION AND CREATIVE MIND) ( இந்தக்காலத்துல நாய்ங்க கூட ஒதுக்குப்புறமா மறைவிடத்துக்கு போயிடுது.


Bai Ling stars as Ria in Lionsgate Films' Crank: High Voltage (2009)

டைரக்டர் ரசனை உணர்வு என்றால் கிலோ என்ன விலை?என கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.



இந்த லட்சணத்தில் இவர் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.தல தல என அவர் பின்னாலயே அலைகிறார்,ஹீரோவை காதலிப்பவர் ஹீரோயின் தானே எப்படி வில்லி? என புத்திசாலித்தனமாக கேள்வி கேட்போர்க்கு நான் சொல்வது அவர் படத்தில் வில்லி அல்ல, படத்துக்கு அவர் தான் வில்லி.


படத்தோட ஓப்பனிங்க் சீன் வேனா அசத்தல்.ஹீரோ பார்க்க பார்க்க அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது நல்ல் கற்பனை.
அதே போல் நீலப்பட நடிகர் நடிகைகள் கூலி (!) உயர்வு கேட்டு போராடும் சீன் செம காமெடி.


டைரக்டரையும் அறியாமல் அமைந்து விட்ட காமெடி வசனங்கள்


1.வெத்து வேட்டுப்பசங்களெல்லாம் அவங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டா அதை சாக்கா வெச்சு நீ தாதா ஆகிடறதா?


2.இந்த செவல கிட்ட வெச்சுக்கிட்டா செவுலு கிழிஞ்சிடும் (இதுக்கு சிரஞ்சீவி படமே பெட்டர்)


3. நீ வேணாம்,எனக்கு பிடிக்கலை,ஐ எஸ் ஐ முத்திரை குத்துன ஆம்பளைன்னா அது அவர்தான்.


4.போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?


கைதி - பின்னே,உன் கூட குடித்தனம் பண்ணிட்டு இங்கேயே லாக்கப்ல்யே இருப்பேன்னு நினைச்சியா?


5.ஏய், கருத்த குட்டி,நீ சிறுத்த் குட்டி மாதிரி இருக்கே..




6.எல்லா வில்லன்களும் சொல்ற அதே டயலாக் தான் அவன் எனக்கு உயிரோட வேணும்..


7. போலீஸ் - மேடம் நடந்தது என்ன? விபரமா சொல்லுங்க?


லேடி - நான் 60 வயசானவ் அப்படினு கூட பாக்காம அவன் என்னை உரசுனான்.


போலீஸ் - ஏம்மா,லைவ் ரிலே ஓடிட்டு இருக்கு,சென்சார் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்ல ,அடக்கி வாசி.


லேடி- யோவ்,நீதான்யா நடந்ததை சொல்ல சொன்னே?


போலீஸ் - சரி சரி ஆள் பாக்க எப்படி இருந்தான்?

லேடி - ஆள் வாட்டசாட்டமா, கட்டுமஸ்தா ஜம்முனு தான் இருந்தான்.


போலீஸ் - ஏம்மா, நிஜமா இது கம்ப்ளைண்ட்தானா?


லாஜிக் மீறல்கள் பல இடங்களில் குறிப்பாக 2 கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடி வரும் ஹீரோ வியர்வை துளி கொஞ்சம் கூட இல்லாமல் நிற்பது அநியாயம்.

ஹீரோ தன் பெயரை கெடுப்பதற்காகவே இந்தப்படத்தில் நடித்தார் போல.


படத்தின் விமர்சனம் எங்கே என கேட்பவர்களுக்கு இந்தப்ப்படத்துக்கு விமர்சனம் வேற எழுதனுமா? ஏதோ முடிஞ்ச வரை மொக்க போட்டாச்சு.


கீழே உள்ள படத்தில் தோன்றுவது  ஹீரோயின்.அருகில் இருப்பவர் ஹீரோ அல்ல,அவரது காதலன்.ஹீரோ இறந்து விட்டதாக நினைத்து அவர் இறந்த 37 நாட்களில் காதலிக்கத்தொடங்கிய உத்தம பத்தினி,இறந்து விட்டதாக நினைத்த கணவன் வீடு திரும்பியதும் இந்த பத்தினி என்ன செய்வது என தடுமாறும்போது இந்த காட்சி .20 வருடங்களுக்கு முன் விஜயகாந்த்,ரகுமான்,சுதா சந்திரன் நடித்த கதை இதே சீன் வரும். புதுசா நம்ம ஆளுங்க எங்கே யோசிக்கறாங்க?




டிஸ்கி 1 - 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 வது பட ஸ்டில்லை பார்க்கவேண்டாம்.அதே போல் கலாச்சாரக்காவலர்களும் டிட்டோ.


டிஸ்கி 2 - ஆங்கிலப்பட விமர்சனத்தில் எப்படி வசனத்தை இவ்வளவு தெளிவாக மொழி பெயர்க்க முடியும்? என கேட்பவர்களுக்கு இந்தப்படமே தமிழில்தான் டப் ஆகி வந்தது.



Amy Smart stars as Eve and Corey Haim stars as Randy in Lionsgate Films' Crank: High Voltage (2009)

ஜோக்ஸ்,ஜோக்ஸைத்தவிர வேறொன்றுமில்லை



1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் என்ன?

இல்லை நான் லாரி.


2. தலைவரே! நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை
கமிஷன் அமைக்கறாங்களாம்.

விடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.



3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன
வித்தியாசம்?

அவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.


4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்
அவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே?

ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட
சிநேகம் இருக்குமோனு டவுட்.


5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

ஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.


6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.

அப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா?


7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே?

அட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட
மாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.



8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...

அதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா?


9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே?

சும்மாவா? தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே?


10. தலைவரே! கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே?

சரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.



11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு
போராட்டம் பண்றாரே?

அவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.



12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.

ஏன்? அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா?


13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்?

முதலிரவு-ஹனிமூன் டூர்.

14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்?

அவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.



15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே?

ரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.
இன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு?



16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்
வந்திருக்காரே?

“பட்டாப்பட்டி 50-50” அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு
தருவாங்கனு நினைச்சுட்டாராம்.

டிஸ்கி 1  - படம் உதவி வி வி எஸ் கஜா (விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்)

Saturday, October 30, 2010

ஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்

Bitch Slapஅட 1

ஒரு புதையலைத்தேடி 3 சில்ஃபான்சிகள் + வில்லன் குரூப் அலைவதும்,ஒரு போலீஸ் ஆஃபீசர் குறுக்கிடுவதும்,அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே கதை.ஆரம்பத்துலயே சொல்லிடறேன் இது ஒரு அக்மார்க் ஏ படம் .ஏ சர்ட்டிஃபிகேட் வசனத்துக்காகவும்,வன்முறைக்காகவும் கொடுக்கப்பட்டது,எனவே ஓவராக உங்கள் கற்பனைகளை சிறகடிக்கவிடாமல் அடுத்த பேராவுக்கு போலாம் வாங்க.

படத்தில் வரும் 3 ஹீரோயின்களுமே பாஸ் மார்க் ரகம்தான்.ஆனால் டைரக்டர் என்னவோ அவர்களுக்கு கேமரா கோணம் வைப்பதில் ஆகட்டும்,ஸ்லோமோஷன் சீன் வைப்பதில் ஆகட்டும் ஏஞ்சலீனா ஜூலீ ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறார்.


bitch slap screenshotsஅட 2

 ரன் லோலா ரன் படத்தில் வரும் திரைக்கதை உத்தியை இதில் கொஞ்சமே கொஞ்சம் காப்பி செய்து டைரக்டர் தான் ஒரு புதுமை விரும்பி என காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.10 நிமிடத்துக்கு ஒரு முறை 2 நாட்களுக்குமுன், 4 நாட்களுக்கு முன் என 8 தடவை ஃபிளாஷ்பேக் சொல்லும் உத்தி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.

3 பருவ அழகிகள் (நன்றி தினத்தந்தி) ஆள் அரவம் அற்ற பாலைவனத்தில் நிற்க அங்கே வரும் போலீஸ் ஆஃபீசர் அவர்கள் மேல் எந்த ச்ந்தேகமும் படாமல் கடலை போடுவது போலீசையே அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.யூ டூ ஃபாரீன் போலீஸ்?

bitch slap cameroஅட 3.

வில்லன் & வில்லி குரூப் ஓவர் அலட்டல்.அநேகமாக  படத்தின் ஃபைனான்சியர் என நினைக்கிறேன்.ஆனால் வில்லி லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே பேபி வாய்சில் பேசுவது ரசிக்க வைப்பதற்குப்பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராதாரவி ஒரு ரவுடி கெட்டப்பில் வந்து “இந்த வெள்ளிக்கிழமை ராமசாமி ....”என்று ஆரம்பித்து ஒரு கேவலமான் பஞ்ச் டயலாக் (என அவராக நினைத்துக்கொண்டு) பேசுவார்,கையில் ஒரு செயின் இருக்கும்.அதே போல் இந்தப்படத்திலும் ஒரு ஸ்டார் டாலருடன் ஒரு செயின் உண்டு.மகா மட்டமான ரசனை.

படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.

தேடித்தேடிப்பார்த்ததில் தென்பட்ட சில பளிச் வசனங்கள்-

1.ஏய்,பியூட்டி,உன்னை பெத்தாங்களா,இல்லை அளவு குடுத்து செஞ்சாங்களா?

2.யோவ்,என்னய்யா மடில வந்து உக்காந்துக்கிட்டே

தெரியல?இதுக்குப்பேர்தான் சொர்க்காசனம்.


3.டியர்,நான் உன் மேல பாசம் வெச்சிருக்கேன்.

அடியே,நான் உன் மேல எல்லாத்தையும் வெச்சு இருக்கேன்.


4. கன்னி(!)பெண்கள் 3 பேரும் போலீஸை கூப்பிடுகிறார்கள்,உடனே அவர் ,” அட,3 பேரும் கூப்பிடறீங்க,அந்தளவுக்கு நான் ஒர்த்   (WORTH)இல்லையே?இதுல ஏதோ உள் குத்து இருக்கு.

5. போலீஸ் சார்,ஒரு ரேகிங்க் பற்றி விளக்கனும் உங்க கிட்டே,
நாங்க 3 பேரும் பிஞ்சுக்குழந்தைகள்னு கூட பாக்காம கலாய்ச்சாங்க சார்.


6, ஏய்,என் கூட கொஞ்சம் மோதிப்பாரு அப்போதான் என் பவர் என்னனு உனக்கு தெரியும்.(சத்தியமா இது ஆங்கிலபடம்தான்,தனுஷ் நடிச்ச சுள்ளான் படம் அல்ல)

பவரா?அது எங்கே இருக்கு உனக்கு?


7. யோவ் உன் பேர் என்ன?

சாமான்

அப்படி ஒரு பேரா? ( சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் சந்தானமும் பேசும்போது இதே உரையாடல்?!!)

யார் யாரைப்பார்த்து சுட்டாங்கனு தெரியலை.


bitch slap Trixie அட 4



படம் என்னவோ சுவராஸ்யமாய் போகுது என்றாலும் பாதிக்கு மேல் செம இழுவை.க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.(நீலம் நோ)பார்த்தே தீர வேண்டிய படங்கள்,டைம் பாஸ் படங்கள் ,சுமார் படங்கள்,வரிசையில் பார்க்கவே தேவை இல்லாத படம் இது  .(அப்புறம் எதுக்கு இந்த விமர்சனம்?)

டிஸ்கி 1 - படத்தில் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட வசனங்களும்,காட்சிகளும் வருவதால் கண்டிப்பாக பெண்கள்,குழந்தைகள் தவிர்க்க வேண்டிய படம்

டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் . ஹாலிவுட் கேர்ள்ஸ் -2  என வருவதால் இந்தப்படத்தில் 2 கேர்ள்ஸ்தானா என எண்ண வேண்டாம்.4 பேர் உண்டு.இரண்டாம் பாகம் என்பதை அது குறிக்கிறது.

டிஸ்கி 3- மேலே உள்ள 3வது ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையை கவனியுங்கள்.நாம் பனியன் போட்டு கழட்டிய பிறகு ஒரு தாரை தெரியும்,சூரியன் படாத இடம் தனி கலரில் இருக்கும்.அது போல்  ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையில் ஒரு  வெள்ளை லேயர் இருப்பதை கண்டு களியுங்கள்.

டிஸ்கி 4 -  முதல்ல இந்த டிஸ்கிக்கு ஒரு லிமிட் வைக்கனும்யா)
              நான் ஒரு பிரபல பதிவர் என தவறாகப்புரிந்து கொண்டு மூன்றாம் கோணம் எனும் பிளாக் எனது பேட்டியை கேட்டு வாங்கி போட்டுள்ளது.அதற்கான லிங்க் கீழே அதை க்ளிக்கவும்
உங்கள் பேட்டி 

பதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-bloggers-interview-cpsenthilkumar.html

டிஸ்கி 5 - எமது அடுத்த வெளியீடு  நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலாய்க்கும் கவுண்டமணி ( இவரு பெரிய ஏ வி எம் சரவனன்,ரிலீஸ் டேட் ,டைம் எல்லாம் சொல்லித்தான் ரிலீஸ் பண்ணுவாரு.

Friday, October 29, 2010

நோஸ்கட் குடுப்பது எப்படி?



ஒரு முறை ஈரான் மன்னரான் ஷா அமெரிக்கா நாட்டுக்குச் சென்றார். ஒரு
விழாவில் கலந்துகொண்ட ஷாவை நோக்கி, “உங்கள் நாட்டுப் பெண்களுக்கும், எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்டார்கள்.

            ஈரான் மன்னர் ஷா, கீழ்காணுமாறு பதிலளித்தார்:

            “எங்கள் நாட்டுப் பெண்களைப் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் பார்க்க
முடியும், தெருக்களில் பார்க்க முடியாது. உங்கள் நாட்டுப் பெண்களையோ தெருக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, வீட்டுக்குள் எவரையும் பார்க்க முடிவதில்லை. இதுதான் வித்தியாசம்.”


டிஸ்கி 1 - மேலே உள்ள படத்தில் தோன்றுவது ஹிந்தி நடிகை பிபாஷா பாஸூ,அவர் சேலையில் உள்ள ஒரே ஸ்டில் இதுதான்.இவர் பற்றி அறிமுகம் தேவை இல்லை,ரொம்ப கண்ணியமான நடிகை.சச்சின் படத்தில் நம்ம இளைய தளபதியுடன்  குத்தாட்டம் போட்டவர்.

டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.


டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில்லில்  18 என்ற எண் வந்து குழப்புகிறதா?அது தவறான தகவல்.அநேகமாக 36 என நினைக்கிறேன்.

Thursday, October 28, 2010

டாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்


1.எந்திரன் படத்தில் விஜய் நடித்திருந்தால்....

கடவுள் படச்சதுலயே மொக்கையான ரெண்டே விஷயம் என்னனு தெரியுமா?

1.நீ    2  நான்   (கண்ணாடி முன் நின்று கொண்டு விஜய்)



2.போன வாரம் ஆனந்த விகடன் புக்குல மேட்டர் எல்லாம் நல்லாத்தானே இருந்தது,ஏன் சேல்ஸ் ரொம்பக்குறைஞ்சுது?


உனக்கு விஷயமே தெரியாதா?போன வார விகடன் அட்டைப்படத்துல நம்ம விஜய் இருந்தாரே,பாக்கலை?

3.ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு? (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)

ஐந்து அறிவு ஜந்து

4.கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே?

ஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா?நர்ஸ் எங்கேனு கேட்டாராம்.


5.ஊர்ல  நாலு அஞ்சு அஜித் படம் பார்த்தவன் எல்லாம் ஜாலியா இருக்கான்,ஒரே ஒரு விஜய் படம் பார்த்துட்டு நான் படற அவஸ்தை இருக்கே.....




6.விஜய் - டைரக்டர் சார்,காவலன் பட கதையை இன்னும் நீங்க சொல்லவே இல்லையே?

டைரக்டர் - படத்தோட ஹீரோயின் கிட்டயும்,காமெடியன் கிட்டயும் சொல்லியாச்சு,போதாதா?

7. ராகுல் சார்,இளைஞர் காங்கிரஸ்ல ஏன் என்னை சேத்துக்க மாட்டேங்கறீங்க?

மிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா?கட்சியையும் காலி பண்ணனுமா?

8. எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.

பப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா?


9. ஆனந்த விகடன் பேட்டியில் விஜய் - நான் அப்பாவியா ,வெகுளியா நடிச்ச படம் எல்லாம் ஹிட்,காவலன்ல நான் ரொம்ப இஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.


பப்ளிக் - அதை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பாக்கனுமா?


10. அதே ஆனந்த விகடனில் ஜெ விடம் விஜய் - அம்மா உங்க மேடைப்பேச்சை கேட்டேன்,அருமை,உங்களுக்கு ஏகப்பட்ட கூட்டம் கூடுதே?

ஜெ -நான் கூட உங்க படங்களை பார்த்தேன்,ஒண்ணு கூட உருப்படியா இல்ல,தியேட்டர் காத்து வாங்குது.

Wednesday, October 27, 2010

கவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா


  கவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா?

கலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதா?வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்! (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ?)

கவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?

கலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம் தம்பி,அப்படி ஒரு வார்த்தையே அகராதியில் இல்லை.

 கவுண்டமணி - ஐயா,அந்தப்பேரில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பலரின் குல தெய்வ சாமி பேரே ஒச்சாயி அம்மன்னு சொல்றாங்க.

கலைஞர்- சாமியே இல்லைனு சொல்றேன்,நீ சாமி பேர்க்கு வாதிட வந்துள்ளாயே தம்பி.

 கவுண்டமணி - ஐயா,ஒண்ணுமில்லைங்க,தமிழ்ப்படம்னு நினச்சுதான் டைட்டில் வெச்சிருக்காங்க,இப்போ திடீர்னு தமிழ்ப்பட டைட்டில் இல்லைன்னா அவங்க எங்கே போவாங்கஏதோ வரி விலக்கு இருந்தாலாவது
4 காசு பாப்பாங்க.

கலைஞர் - தம்பி,யாருக்காகவும்,எதுக்காகவும் கழகமும் சரி,சட்டமும் சரி வளைந்து கொடுக்காது..இது பற்றி நான் முரசொலியில் எழுதிய கவிதை ஒன்று வந்ததே,படிக்கவில்லையா?

 கவுண்டமணி  (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...

கலைஞர்  - ஐயம் என தமிழிலேயே கேள்



 கவுண்டமணி  - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயரா?அதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படி?உங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பன்னாடை பரதேசிப்பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா எல்லாரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.


கலைஞர் - அது ... அது வந்து... ஒரு னிதை  , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?

 கவுண்டமணி  - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்க?விபரம் தெரியாத யாரோ பன்னாடைப்பரதேசிப்பசங்க என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?

கலைஞர் - ம் ம் போகும்போது முரசொலி வாங்கிட்டு போங்க.

 கவுண்டமணி  - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.

கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின்  நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.


கலைஞர் செல்கிறார்.பிறகு கவுண்டமணி கோடம்பாக்கம் போகிறார்.

 கவுண்டமணி  - யோவ்,யாருய்யா அது என்னைப்போய் நியாயம் கேக்க சொன்னது?டே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்க?ஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியா?ஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாரா?இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா

Tuesday, October 26, 2010

கோடம்பாக்கமும்,தீபாவளிக்கொண்டாட்டமும் (ஜோக்ஸ்)




1. மைனா  வெடி-னு  சொல்றீங்களே,  இதனோட  ஸ்பெஷாலிட்டி  என்ன?

பட்டாசுக்கடைல இருந்து முதுகுல சுமந்துக்கிட்டே வீட்டுக்கு கொண்டு வந்து வெடிக்கனும்.


2.   ‘சாமி’  புஷ்வாணமா?  இதுல  என்ன  ஸ்பெஷல்?

மாமனார்  பத்த  வெச்சார்ணா,  புஷ்வாண  மத்தாப்பூ  மருமக  மேல  பூ  சொரியும்.

3.  நிருபர்:  மேடம்,  வருஷா  வருஷம்  தலை  தீபாவளி கொண்டாடறீங்களே,    எப்படி?

நடிகை:  இது  என்ன  பிரமாதம்?  வருஷா  வருஷம்  புது  புருஷனை  கல்யாணம் பண்ணுனா  போச்சு.

4.  பழநில  போய்  தலைவர்  பட்டாசு  வாங்கறாரே?  ஏன்?

குருவி  வெடி  அங்கே  சிட்டுக்  குருவி  லேகிய  வெடியா  விற்கறாங்களாம்.

5.  கல்யாணமாகி  2  மாசம்தானே  ஆகுது.  அப்போ  இது  தலை  தீபாவளிதானே  உங்களுக்கு?

எங்க  ‘தல’  படம்  மங்காத்தா  ரிலீஸ்  ஆனாத்தான்  எனக்கு  தல  தீபாவளி.

6.  பாரதியார்  -  வைரமுத்து  என்ன  வித்தியாசம்?

அவரு  முட்டாசுக்  கவிஞர்.  இவரு  பட்டாசுக்  கவிஞர்.


7.  கதையல்ல  நிஜம்  வெடி-னு  சொல்றீக்களே!  இப்படிக்  கூடவா  பேரு  வைக்கறாங்க?

அட!  பழைய  லட்சுமி  வெடிதாங்க.  பேரை  மட்டும்  மாடர்னா  வெச்சிருக்காங்க.


8.  லட்சுமி  வெடி  ஒரு  பாக்கெட்  குடுங்க.

அது  பழைய  வெடிங்க.  லட்சுமிராய்  வெடி  வாங்கிட்டுப்போங்க.  பற்ற  வெச்சு  10  செகண்ட்ல  டான் -னு  டோனி-னு  வெடிக்கும்.


 

9.  த்ரிஷா  வெடிங்களா?  இதுல  என்ன  புதுசு?

இங்கே  பற்ற  வெச்சா  மும்பைல  போய்  வெடிக்கும்.  செம  கிக்கா  இருக்கும்.



10.  தலைவரு  டைரக்டர்  ஷங்கரோட  தீவிர  ரசிகராம்.

இருக்கட்டும்,  அதுக்காக  பிரம்மாண்டமா  வெடிக்கறேன் -னு  கேஸ்  சிலிண்டரை  வெடிக்க வைக்கறது  ஓவர்.



11.  இந்த  ராக்கெட்ல  கமல் - த்ரிஷா  படம்  ஒட்டி  இருக்கே?

 ‘மன்மதன்  அம்பு’  ராக்கெட்டுங்க.  பற்ற  வெச்சீங்கன்னா  கப்பல்  தளத்துல  விழுந்து  வெடிக்கும்.


12.  ‘கேப்டன்  வெடி’  இருக்கு  வேணுங்களா?

வேணாம்ங்க.  பற்ற  வெச்சா  திரி  முதல்ல  சீறும்.  அப்புறம்  புஸ்ஸு-னு  போயிடும்.  வெடிக்காது.  டம்மி  பட்டாசு.



13.  எதுக்கு  பட்டாசை  பற்ற  வெச்சு  தண்ணீர்த்  தொட்டில  போடறே?

இது  நீர்யானை  வெடி  ஆச்சே?



14.  தலைவரு  ரொம்ப  முசுடு  பிடிச்சவர்-னு  எப்படி  சொல்றே?

அவரு  கிராமத்துக்காரர்ங்கறதுக்காக  கட்டு  விரியன்  பாம்பு  மாத்திரை,  சாரை  பாம்பு  மாத்திரை-னு  வித  விதமா  கேட்டா  எப்படி?


15.  அமைச்சரே!  நான்  ராஜ  வம்சத்தில்  பிறந்தவன்.

இருக்கட்டும்  மன்னா!  அதற்காக  ராஜ நாகபாம்பு  மாத்திரை  வேணும்-னு  கேட்டா  எப்படி?


16.  அந்த  பட்டாசுக்  கடைக்காரர்  ரொம்ப  ஸ்ட்ரிக்ட்  ஆனவர்-னு  எப்படி  சொல்றே?

பாம்பு  மாத்திரை  கேட்டாக்கூட  பிரிஸ்கிரிப்ஷன்  ஷீட்  இருந்தாத்தான்  தருவேன் -கறேரே?

 டிஸ்கி 1 :  முதல் பட ஸ்டில் மைனா படத்தோடது,இந்தப்பட டைரக்டர் இந்த சீனை படத்துக்கு பெரிய டர்னிங்க் பாயிண்ட்டா நினைச்சிருப்பாரு போல,எல்லா தியேட்டர்லயும்,விளம்பரங்கள்லயும் இதுதான்,உப்பு மூட்டை தூக்கற ஹீரோ கிட்டா மூட்டையை திருப்பி போட்டு தூக்கி இருக்கலாமே என நக்கலாக கேட்டதுக்கு (நன்றி -ஆராரோ ஆரிராரோ வசனக்ர்த்தா கே பி)
ஹீரோ சொன்னாரு “ஹூம் ரெண்டும் ஒண்ணுதான்,எந்த சேஞ்சும் தெரியலன்னுட்டாரு,

டிஸ்கி 2- 2வது ஸ்டில் காதலைக்காதலிக்கிறேன் படத்தோடது (என்னமா கற்பனை பண்றாங்கப்பா டைட்டிலுக்கு)18 வயசுக்கு கம்மியா இருக்கறவங்க அதை பாக்க வேணாம்.அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்? னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)

Monday, October 25, 2010

தலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா?



1.  பெண்கள்  ஏன்  அதிகமா  அரசியலுக்கு  வர்றதில்லை?

அவங்களுக்கு  ஆண்களை  ஆட்டி  வெச்சுதான்  பழக்கம்.  ஓட்டு  கேட்டு  பழக்கமில்லை.

2.  தலைவருக்குத்தான்  படிக்கவே  தெரியாதே,  எதுக்கு  லைப்ரரி  போறாரு?

கன்னி  மாரா  லைப்ரரி-னா  ஏகப்பட்ட  கன்னிங்க  வருவாங்க-னு  நினைச்சுட்டார்.

3.  மக்களுக்கு  விழிப்புணர்வை  ஊட்டுவதில்  எங்கள்  கட்சிக்கே  முதலிடம்-னு தலைவர்  சொல்றாரே?

ஆமா...  நைட்  டைம்ல  கரண்ட்டே  இருக்கறதில்லை.  எவனும்  தூங்க  முடியறதில்லை.


4.  தலைவரே!  நம்ம  கட்சில  இருக்கற  16  எம்.எல்.ஏ. க்களுக்கும்  மகளிர்  அணித்தலைவியோட  ஃபேஸ்கட்  பிடிக்கலையாம்.

ஓஹோ...  அதிருப்தி  எம்.எல்.ஏ. க்கள்  இந்த  ரூபத்திலும்  உருவாகறாங்களா?


5.  தலைவருக்கு  எப்பவும்  கட்சி  ஞாபகம்தான் -னு  எப்படி  சொல்றே?

தலைவரோட  சம்சாரம்  ஒரு  குழந்தை  வேணும்-னு  கேட்டதுக்குக்கூட  அதைப்பத்தி  நான்  எதுவும்  கருத்துக்கூற  முடியாது,  கட்சி  மேலிடம்தான் முடிவு  பண்ணனும்கறாரே?


6.  “அத்தான்...  உங்க  மேல  எனக்கு  நம்பிக்கையே  போயிடுச்சு...”

 “வேணும்னா  நம்பிக்கை  ஓட்டெடுப்பு  நடத்தலாமா?  உன்  3  தங்கைகளும் எனக்கு  ஆதராவாதான்  ஓட்டு  போடுவாங்க.


7.  தலைவரே!  கடல்  படைக்கு  நடத்தற  எக்ஸாம்ல  கொஸ்டீன்  பேப்பர்  அவுட்  ஆகிடுச்சாமே?

இதுக்கு  ஏன்  பதட்டப்படறீங்க?  ஆன்சர்  பேப்பர்  அவுட்  ஆகலையே?


8.  தலைவர்  ஏன்  மூடு  அவுட்டா  இருக்காரு?

அகில  உலக  அரசியல்  பேதை  விருது  அவருக்கு  தந்துட்டாங்களாம்.




9.  தலைவருக்கும்,  மகளிர்  அணித்தலைவிக்கும்  இடையே  கோல்டுவார்  நடக்குதாமே?

ஆமா,  உடனடியா  10  பவுன்ல  செயின்  பண்ணிப்போட்டே  ஆகனுமாம்.  GOLD WAR.


10.  இந்தில  கவர்ச்சியா  நடிக்கத்  தயார்-னு  அந்த  நடிகை  சொல்றாங்களே?

இதுலயும்  தமிழன்  ஏமாற்றப்படுகிறானா?  அய்யகோ!


11.  எதெதுக்குத்தான்  விசாரணைக்  கமிஷன்  வைக்கறதுன்னு  ஒரு  விவஸ்தை  இல்லாம  போச்சு.

ஏன்?

எனக்கு  ஏன்  எந்த  கொலைமிரட்டலும்  லெட்டரும்  வர்லை?-னு  கேட்டு  விசாரணை  கோரியிருக்காரு  தலைவரு.


12.  பவித்ரன்  சிட்டிசப்ஜெக்ட்  பண்ணுனா  என்ன  டைட்டில்  வைப்பாரு?

மாட்டு  மிடி.


13.  தலைவரோட  வீட்ல  மைனாரிட்டி  ஆட்சி  நடக்குதுனு  எப்படி  சொல்றே?

தலைவரோட  சின்ன  விட்டுக்கு  16  வயசுதான்  ஆகுதாம்.


14.  தலைவருக்கு  குழந்தை  மனசு.

 அதுக்காக,  எனக்கு  ஓட்டு  போட்டா  எல்லாருக்கும்  ஒரு  பலூன்  வாங்கித்தருவேன்னு  வாக்கு  தர்றதா?


15.  தீபாவளிப்  படங்கள்  எதுவும்  அசத்தல-னு  எப்படி  சொல்றே?

அசல்  தல  படம்  மங்காத்தா  ரிலீஸ்  இல்லையே?


16.  தலைவர்  தீபாவளிக்கு  பட்டாசு  வெடிச்சு  நான்  பார்த்ததே  இல்லையே?

அவருக்கு  மத்தவங்க  பதவிக்கு  வேட்டு  வெச்சுத்தான்  பழக்கமாம்.


டிஸ்கி 1 - முதல் ஸ்டில் ஊலலலா படம்,ஹீரோயின் சிரிப்பு வராமல் சிரிக்கிறார்,அநேகமாக இந்தப்படத்துக்கு சம்பளம் இன்னும் தந்திருக்க மாட்டார் டைரக்டர்.

டிஸ்கி 2 :-ரெண்டாவது ஸ்டில்லும் அதே படம்.பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும் என நினைக்குமாம்,காதலர்கள் கண்ணை மூடினால்...? (உடம்பையும் நல்லா கவர் பண்ணி மூடினா தேவலை)
இப்பவெல்லாம் ஹீரோக்கள் நாய் மாதிரி ஹீரோயினை மோப்பம் பிடிக்கறாங்க,ஏன்னு தெரியல.

தலைவர்கிட்டயே தகராறா?


1.  தலைவரே! சி.பி.ஐ  மத்திய அரசின்  கைப்பாவையா  செயல்படுதுனு சொன்னீங்களாமே?

பொய்...  கோயில்களில்  திருப்பாவை  பாடப்  பட வேண்டும்னுதான் சொன்னேன்.


2.  தலைவர் கட்சில  இருக்கற  மகளிர்  அணித்தலைவிக்கு  நூல்  விடறாரே?

நடமாடும்  நூலகம்-னு  இந்த அர்த்தத்துலதான்  பாராட்னாங்களா?




3.  காஷ்மீர்  இந்தியாவுடன்  இணையவில்லை  அப்டி-னு  ஏன்  தலைவரே சொன்னீங்க?  பெரிய  பிரச்சனை ஆகிடுச்சு.

நயன்தாரா காஷ்மீர்  ஆப்பிள்  மாதிரி  இருக்காங்க.  இந்தியாவின்  மைக்கேல் ஜாக்‌ஷன்  பிரபுதேவா,  இவங்க  இரண்டு பேரும்  இணையலை-னுதான் சொன்னேன்-னு  பிளேட்டை திருப்பிபோட்ரலாம்!

4.  வாரிசு  இல்லை-னு  தலைவர்  வருத்தப்படறாரே?

அதுவும்  நல்லதுக்குத்தான்.  2, 3 வாரிசு இருந்தா வாரிசு  உரிமைப்  பிரச்சனையும்  வரும்.

5.  ஊழல்  கடவுள்  மாதிரி-னு  எப்படி  சொல்றீங்க  தலைவரே?

தூணிலும்  இருக்கும்,  துரும்பிலும்  இருக்கும்;   கண்ணுக்குத்  தெரியாது,  நீக்கமற  நிறைந்திருக்கும்.


6.  இதுதான்  என்  கடைசி  தேர்தல்,  மறக்காம  எனக்கு  ஓட்டுப்  போடுங்க.

போங்க  தலைவரே!  25  வருஷமா  இதையேதான்  சொல்றீங்க?  எங்கே  ரிடையர்  ஆகறீங்க?


7.  டான்ஸ்  போட்டில  வெற்றியும்,  தோல்வியும்  ஒண்ணுதான்.

எப்படி  சொல்றே?

டான்ஸ்  போட்டில  கலந்துக்கிட்றவங்க  ஜெய்ச்சாலும்,  தோத்தாலும்  அழறாங்களே?


8.  தமிழ்-ல  டைட்டில்  வெச்சாதான்  வரிவிலக்கு-னு  சொல்லியிருக்காங்க.  ஆனா  நீங்க  ஆங்கில  வார்த்தைல  டைட்டில்  வெச்சிருக்கீங்களே?

அதையும்  தமிழ்  எழுத்துல  தானே  வெச்சிருக்கோம்-னு  சொல்லி  குழப்பி  விட்ரலாம்.  டோண்ட்  ஒர்ரி.


9.  தலைவரே!  மத்திய  அரசின்  திட்டங்களை  எல்லாம்  மாநில  அரசின்  திட்டங்கள்-னு  விளம்பரம்  பண்றீங்களாமே?

“அவங்களுது, எங்களுது-னு  பிரிச்சுப்  பேசறது  எனக்குப்  பிடிக்காது”


10.  தலைவரே!  உங்க  பண்ணை  வீட்ல  ரெய்டு  வரப்போவுதாம்.

சரி, சரி,  மகளிர்  அணித்தலைவியை  கிளம்பச்  சொல்லு.


11.  டைரக்டர்:  மேடம், எங்க  படத்துல  கௌரவத்  தோற்றத்துல  ஒரு  சீன்ல  நடிக்கனும்.

நடிகை:  ஓ.கே.  என்ன  கேரக்டர்?

டைரக்டர்:  கேபரே  டான்சர்.


12.  தலைவருக்கு  நீலம்தான்  ராசியான  நிறமாம்.

ஓஹோ...  அதான்  அடிக்கடி  புளூஃபிலிம்  பார்க்கறாரா?


13.  தலைவர்  புளூகிராஸ்  மெம்பராம்.

அதுக்காக  வெட்னரி  டாக்டர்  பட்டம்தான்  வேணும்னு  அடம்  பிடிச்சா  எப்படி?


14.  டாக்டர்  ஆபரேஷன்  தியேட்டருக்குள்ளே  போறதை  இரண்டு  பேர்  தடுக்கறாங்களே,  யாரு?

பேஷண்ட்  போட்ட  இன்சூரன்ஸ்  கம்பெனி  ஆஃபீசர்ஸாம்.


15.  தலைவரே!  எங்க  கட்சிக்கு  இன்னும்  3  சீட்  வேணும்.

இன்னும்  வேணுமா?  இலங்கைல  போட்டி  இடறீங்களா?


16.  இலைங்கை  அகதிகளுக்கு  இங்கே  ஓட்டுரிமை  இருக்கா?-னு  தலைவர்  விசாரிக்கராரே,  ஏன்?

அவங்களுக்கு  ஆதரவா  பேசலாமா?-னு  முடிவு  பண்ணத்தான்.

Sunday, October 24, 2010

குண்டக்க மண்டக்க குறுஞ்சிரிப்ஸ்


1.உலகத்துலயே சோகமான விஷயம் லவ் ஃபெய்லியர்னு நினைச்சுட்டு இருக்கோம்,அதை விட சோகமான விஷயம் எது தெரியுமா?

நண்பனுக்காக எக்ஸாம் ஹால் வெளியே நின்று கொண்டு காத்திருப்பது ,மேலும் மனசுக்குள் “ஒரு வேளை அவன் மட்டும் பாஸ் ஆகிடுவானோ?”என்று நினைப்பது.


2. காதல்னா என்ன?

யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக  ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது  10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.


3. தெரிஞ்ச ஃபிகரை விட்டவனும் கெட்டான்,தெரியாத ஃபிகரை தொட்டவனும் கெட்டான்.


4. பெண்கள் ஸ்பெஷல் - 

1.கேரளா - அட்ராக்ட்டிவ் கண்கள் +அடர்த்தியான கருங்கூந்தல்

2.ஆந்திரா - கூர்மையான மூக்கு

3.பஞ்சாப் - கலர்ஃபுல் லிப்ஸ் (வண்ண மயமான உதடுகள் )

4.மத்தியப்பிரதேசம் - சிம்ரன்,இலியானாக்களூக்கு சவால் விடும் இடை அழகிகள்.

5.மஹாராஷ்ட்ரா - அழகிய உடல் அமைப்பு (BEAUTIFUL STRUCTURE)

6.மேற்கு வங்காளம் - அழகிய கால்கள்

7. தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.


5.  பணக்காரன் - என் கிட்ட இன்னைக்கு 34 காரு,26 ஹோட்டல்,8 பண்ணை வீடுகள்,கோடிக்கணக்குல பேங்க் பெலன்ஸ் இருக்கு,உன் கிட்ட என்ன இருக்கு?

ஏழை - என் கிட்டே ஒரே ஒரு பையன் தான் இருக்கான்,அவனோட பையன் உங்க பொண்ணு வயிற்றுல 5 மாசமா வளந்துட்டு இருக்கான்.


6.  வேலைக்காரி குளிக்கறப்ப எட்டி பாத்தீங்களா அத்தான்?

நீ போடற சோப்பை அவ போடறாளான்னு பார்த்தேன்,ஆனா அவ  ஒண்ணுமே போடலை.



7.உலகின் மிகச்சிறிய காதல் கதை - அவன் காதலை அவளிடம் தெரிவித்தான்,அவள் சிரித்தாள்,அய்யகோ பார்ட்டிக்கு பல் நஹி,(அப்போ பார்ட்டி பாட்டியா?),அவன் அதிர்ச்சியில் மயக்கமானான்.

8. CRAZY LETTER TO PRINCIPAL

RESPECTED SIR,

I AM SUFFERING FROM LOVE.BUT I AM UNABLE TO CORRECT THE FIGURE.SO KINDLY I REQUESTING YOU TO ARRENGE A GOOD HOMELY GIRL IN YOUR RELATION OR NEIGHBOUR WITHIN 2 DAYS.


தமிழில்

உயர் திரு ஐயா,

நான் காதலால் பாதிக்கப்பட்டு இருக்கேன்,(நீ மட்டுமா?உலகமேதான்)
ஆனா என்னால எந்த ஃபிகரையும் கரெக்ட் பண்ண முடியல (சரியா கனெக்ட் பண்ணி இருக்க மாட்டே)அதனால் தயை கூர்ந்து உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது உங்கள் உறவிலோ அல்லது தெரிந்தவர்களிடமோ,பக்கத்து வீட்டிலோ நல்ல ஃபிகர் இருந்தால் தெரியப்படுத்தவும்,இன்னும் 2 நாட்களுக்குள்.நன்றி

பி கு - நீங்க எனக்கு மாமா மாதிரி

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள மாப்ளே.


9. ஒரு சர்தார்ஜி தற்கொலை செய்ய ஆத்துல குதிச்சார்,அப்புறம் அவர் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு மீனை எடுத்து வெளில போட்டு சொன்னார்,நாந்தான் சாகப்போறேன்நீயாவது பிழைச்சுக்கோ.



10.காதல் நிலைகள் (பெண்கள்)

1980 - என்னை லவ் பண்ணு,  ஆனா தொடாதே

1990 - தொடு,ஆனா கிஸ் மட்டும் வேணாம்.

2000 - கிஸ் பன்னிக்கோ,ஆனா வேற எதுவும் வேணாம்.

2005 - என்ன வேணாலும் பண்ணிக்கோ,ஆனா யார் கிட்டயும் எதையும்
           சொல்லிடாதே.

2010 -எல்லாத்தையும் செய்,ஆனா செய்யாம விட்டா எல்லார்கிட்டயும் இவனால எதுவும் செய்ய கையாலாகலைனு பரப்பி விட்டுடுவேன் (மிரட்டல்)

டிஸ்கி -1  ; முதல் பட ஸ்டில் மழைக்காலம் ,2 பார்டிகளுக்கும் உள்ள பொதுவான அம்சம் 2 பேருக்கும் தலை சீவும் பழக்கம் இல்லை,அண்ணன் ஃபுல் ஹேண்ட் சர்ட் போட்டு மடிச்சு விட்ட மாதிரி அண்ணி துப்பட்டாவை கழுத்துக்கு ஒண்ட (என்ன ,இது தமிழ் வார்த்தை தானா?)  போட்டிருக்கிறார்.அண்ணீ அண்ணனை விட ஹைட் ஜாஸ்தி.

டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு?

Saturday, October 23, 2010

பிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவர்



சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.

கோர்ட்டில்

ஜட்ஜ் - கேசோட டீட்டெயிலை சொல்லுங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)

யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.

ஜட்ஜ் - யோவ்,வாசல்ல பராக்கு பார்த்துட்டு நிக்குதே அந்த கேஸ் பற்றி கேட்கலை,கோர்ட்ல நடக்கற கேஸ் டீட்டெயிலு பற்றி கேட்டேன்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - யுவர் ஆனர்,அதை என் கட்சிக்காரரே சொல்வார்,டேய் நாயே,என்ன வேடிக்கை,வாயைத்திறந்து பேசுய்யா.


சி பி - ஐயா,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என்னை அவமானப்படுத்திட்டாரு,அவர் மேல நான் மான நஷ்ட வழக்குபோடனும்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - டேய்,அதெல்லாம் மானம் இருக்கறவன் போட வேண்டியது,நீ மேட்டரை மட்டும் சொல்லு.


சி பி - ஒரு வாரத்துக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன்,அது கலைவாணர் கிருஷ்ணன் வாழ்க்கைல நடந்த சம்பவம்.அதை நான் லைப்ரரில இருந்து சுட்டுட்டு வந்த புக்ல இருந்து எடுத்தது.நான் சுட்ட மேட்டரை ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்பே தான் பதிவு போட்டுட்டதா என் பிளாக்லயே ஒரு கமெண்ட் போட்டு என்னை சந்தி சிரிக்க வெச்சுட்டார்.


வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை,வழக்கமா நீ டப்பா படத்துக்கு விமர்சனம் போடுவே,இல்லைன்னா ஜோக்குங்கற பேர்ல கடிப்பே,அதையே செய்யவேண்டியதுதானே,ஏன் ரூட் மாறுனே?

சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?

 ஜட்ஜ் - நிறுத்துங்க,நீங்க 2 பேருமே பேசிட்டு இருந்தா எப்படி?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - சரி நீங்க கொஞ்ச நேரம் பேசுங்க.


ஜட்ஜ் - பிரதிவாதி ரமேஷ் கிட்ட விசாரிப்போம்,அவரை வரச்சொல்லுங்க.

டவாலி - ரமேஷ்,ரமேஷ்,ரமேஷ்

ஜட்ஜ் - என்ன ஆளைக்காணோம்?

சி பி - அவர் சிரிப்புப்போலீசுங்க,அதனால மாமூல் குடுத்தாதான் வருவார்.

ரமேஷ் - வணக்கம் ஜட்ஜ் ஐயா.

ஜட்ஜ் - வனக்கம் எல்லாம் நல்லாத்தான் போடறீங்க.

ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.

ஜட்ஜ் - நீங்க எதுக்காக சி பி மேல,இம்சை அரசன் பாபு மேல அப்படி ஒரு குற்றச்சாட்டு வெச்சீங்க?

ரமேஷ் - யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக  ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.

ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.

ஜட்ஜ்  - எப்படியோ பிரச்சனை சுமூகமா தீந்தது,கோர்ட் கலைகிறது.



வக்கீல் கன்னி குட்டி காமசாமி -கோர்ட் என்ன அபார்ஷன் ஆன நடிகையோட கர்ப்பமா?கலைய?டேய் சி பி ஃபீஸை எடு.

சி பி  - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - இதையே நீ எத்தனை வருஷமா சொல்லீட்டு அலைவே,கொண்டா ,அந்த 870 டி வி டியையும் தீ வெச்சு கொளுத்திடறேன்,அப்பத்தான் அடங்குவே.

டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை

டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு நான் எப்போதும் பேனாவும் கையுடனுமே இருப்பேன்,ஏதாவது ஜோக் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா உடனே டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன்,ஏன் எனில் எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,எனவே PEN பதிவர் என எல்லோரும் என்னை கிண்டல் அடிப்பர்,பென் பதிவர் என போட்டிருக்க வேண்டியது தமிழ் அறிவு குறைவு என்பதால் பெண் பதிவர் என போட்டு விட்டேன்.

டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?

Friday, October 22, 2010

ஓ,தமிழர்களே,தமிழர்களே !

1. மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேச்சு: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத திட்டங்களையெல்லாம் கருணாநிதி செயல்படுத்தி வருவதுடன், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். திட்டங்களின் பயன்களை மக்கள் அனுபவிக்கின்றனர். இந்த சாதனைகளே தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைக்கும்.


நையாண்டி நாரதர் - அப்போ தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்றீங்களா?


2. மத்திய நிதித்துறை செயலர் கோபாலன் பேட்டி: கடன் திட்டங்கள் கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கூட்டுறவு வங்கிகள் போன்ற சிறிய வங்கிகளில் கடன் வழங்க விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. வங்கிகளும் ஏமாறக் கூடாது. வங்கிச் சேவைக்காக மக்களும் அலையக் கூடாது.

 நையாண்டி நாரதர் - எங்கே? லோன் தர்றதுக்கு பேங்க் மேனேஜர் லோ லோனு அலைய வைக்கிறார்,லோன் வாங்கின பிறகு அதைக்கட்டாம பொதுஜனம் அலைவைக்குது,பதிலுக்கு பதில்.

3.  பத்திரிகை செய்தி: விரைவில் நடக்கவுள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கான தேர்வு எழுதுவதற்காக, டாஸ்மாக் கடையில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், தேர்வு நாளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


நையாண்டி நாரதர்  - டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது?


4.  மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் அதற்கும் அதிகமாக மின் வெட்டு உள்ளது. மற்ற நகரங்களில் நிலவும் மின்வெட்டை விட, தமிழகத்தில் மின்வெட்டு குறைவு தான்.


நையாண்டி நாரதர் - ஆம்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்களுக்கு சொரணை கம்மிதான்,இல்லாவிட்டால் திருப்பி திருப்பி தி மு க, அ ,தி மு க என 2 கட்சிக்கும் மாற்றி மாற்றி சான்ஸ் குடுக்குமா?அது இருக்கட்டும் குஜராத் மாநிலத்தில் மின் வெட்டே கிடையாது,அதை  உதாரணமா சொல்ல்லாமே?





5. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பணக்காரர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.

 நையாண்டி நாரதர் -உங்க லட்சியம் அதுதான்னா ஏன் கட்சி நடத்தறீங்க? அதை கலைச்சுட்டு சமூக சேவை அல்லது தொண்டு நிறுவனம் நடத்தலாமே?


6. அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : அரிசி கடத்தல், கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசிற்கு நிகராக இருந்த தமிழக போலீஸ், கருணாநிதி ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து போலீசாக மாறிவிட்டது.

  நையாண்டி நாரதர் - மணல் கடத்தல் பற்றி சொல்லவே இல்லையே,உங்களுக்கும் பங்கு வந்துடுதா?





7. முதல்வர் கருணாநிதி: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றஞ்சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.

 நையாண்டி நாரதர் - தலைவரே,இந்த காமெடிதானே வேணாம்கறது,ஆ ராசா பற்றியோ,அழகிரி பற்றியோ பேசுனா உங்களுக்கே கோபம் வந்துடுது.

 8.




Manthira punnagai audio launch
பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.



அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.

 நையாண்டி நாரதர் - மீனாட்சி மீனாட்சி தமிழ்க்கலாச்சாரம் என்னாச்சி?

9.
Poorna turns out as Glamour babe
பூர்ணா இப்போது ரொம்ப பிசி. அவரது மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு க்ளாமரமாக இறங்கி விட்டார். நரன் படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா, மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக மாறி உருமி என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார்.
நையாண்டி நாரதர் - இதுல தமிழ் ரசிகர்களுக்கு பரி பூரண சம்மதமாம்,மிஸ் பூர்ணா


10 . இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார்  - த்ரிஷா

 நையாண்டி நாரதர் - ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?

கோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி



1.டவாலி - நயன் தாரா, நயன் தாரா ,நயன் தாரா .

நயன் தாரா - ஸாரி,நான் பிரபுதேவா கூப்பிட்டாதான் வருவேன்,டவாலி கூப்பிட்டா வரமாட்டேன்.

2.  ஜட்ஜ் - ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரை லவ் பண்றீங்களே?இது தப்பில்லை?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நெக்ஸ்ட் டைம் நீங்க சொன்ன மாதிரி ட்ரை (TRY) பண்றேன்.

3.  ஜட்ஜ் - பிரபுதேவா வீட்டுக்கு போனப்ப ரம்லத்தை அக்கான்னு பாசமா கூப்பிட்டு இருக்கீங்க,நல்லா பழகி இருக்கீங்க,இப்படி நம்பிக்கைத்துரோகம் பண்ணீட்டீங்களே?

நயன் தாரா - யுவர்ஆனர்,பொதுவா சக்களத்தியா வரப்போறவ மூத்த தாரத்தை அக்கான்னுதான் கூப்பிடுவா,அப்பவே அவங்க உஷார் ஆகி இருக்கனும்.

4. ஜட்ஜ் - உங்க  காதலர் பிரபுதேவாவை உடனடியா நீங்க மறந்துடனும், அதுக்கு என்ன சொல்றீங்க?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நான் யாரை லவ் பண்ணுனாலும் குறைஞ்சது 2 வருஷம் அவங்க கூட சுத்துவேன்,என் பாலிஸியை என்னால மாத்திக்க முடியாது.


5. ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.


நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.


6.ஜட்ஜ் - பிரபுதேவாவை நீங்க ரம்லத்துக்கு விட்டுக்குடுத்துடனும்,இதுக்கு என்ன செட்டில்மெண்ட் எதிர்பாக்கறீங்க?

நயன் தாரா - நான் என்ன 60 வருஷமா அவர் கூட குடித்தனம் பண்ணப்போறேன்?மீறிப்போனா 6 மாசம்,அதுவரைக்கும் அவரால பொறுத்துக்க முடியாதா?




7.  வக்கீல் - திடீர்னு அவர் ஆசைப்பட்டார்னு மூக்குத்தி குத்திக்கிட்டீங்களே,எப்படி?

நயன் தாரா - அவர் காதையே குத்திட்டேன்,இது என்ன பெரிய பிரமாதம்?


8. சிறந்த தம்பதியர் விருது வாங்குன நீங்க தமிழ் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

நல்ல காதல் ஜோடியை எவனும் மதிக்க மாட்டான்,கள்ளக்காதல் ஜோடி,அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படறவன் தான் மீடியா லைம் லைட்டுக்கு வர முடியும்.

9.பிரபுதேவாவுக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொல்றீங்களே,அதே மாதிரி அவரும் உங்களுக்காக உயிரை கொடுப்பாரா?

அவர் எப்பவோ என் வயிற்றுல உயிர் குடுக்க ரெடியாத்தான் இருக்கார்,நாந்தான் காலம் கடத்திட்டு இருக்கேன்.

10. ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க.



11.நயன் தாரா - யுவர் ஆனர்,எதுக்காக எனக்கு 5 வருஷ கடுங்காவல் தண்டனை தர்றீங்க?

ஜட்ஜ் -  என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைதான் நான் செஞ்சேன்னு உங்க தப்புக்கு விளக்கம் குடுத்தீங்களே,அதே போல் என் மனசுக்கு எது சரின்னு பட்டுதோ அந்த தண்டனை தான் தருவேன்.

டிஸ்கி -1 : காமெடி டிராக்கில் கூட சிலர் லாஜிக் பர்ப்பார்கள்,அவர்கள் ஜோக் 8 & 9 ரெண்டும் கோர்ட்டில் நடந்த மாதிரி தெரியலையே என கேக்க கூடும்,அவர்களுக்கு மட்டும் சொல்வது அது கோர்ட் கேஸ் முடிந்து வெளியே வரும்போது நிருபர்கள்  கேட்டது.

டிஸ்கி 2 :  நயன் தாரா சம்பந்தப்பட்ட பதிவுகளில் ஏன் பிரபுதேவா படம் போடுவதில்லை என கேட்பவர்களுக்கு நயனின்  வாழ்க்கையில் எதுவும் ,யாரும் நிரந்தரம் இல்லை,அதான்

Thursday, October 21, 2010

சினிமா,சிரிமா,கில்மா - ஜோக்ஸ்



1.சாந்தி அப்புறம் நித்யா படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை?

எல்லாம் சென்சார் பிராப்ளம்தான்.


ஓஹோ,சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் தர்லைனு சொல்லிட்டாங்களா?

அட நீ வேற,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஏ சர்ட்டிஃபிகேட்தான் வேணும்னு அடம் பிடிக்கறாங்களாம்,அப்பதான் 4 காசு பாக்க முடியுமாம்.


2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

3. சூர்யா மலையாளப்படத்துல நடிச்சா ராம்கோபால் வர்மா என்ன டைட்டில் வைப்பாரு?

அத்த சரித்திரம் (அத்த =அத்தை என பொருள் கொள்க)


4. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவுல விஜய் ஏன் வெளிநடப்பு பண்ணீட்டாரு?

அவருக்கு பெஸ்ட் காமெடி ஆக்டர் அவார்டு குடுத்துட்டாங்களாம்.



5.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?


மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.




6. உங்காளு அடுத்த படத்துக்கு மங்காத்தானு டைட்டில் வெச்சிருக்காரே,?அந்த படத்துல சீட்டாடறவரா வர்றாரா?

சீட்டாடுனா தப்பில்லை,உங்காளு மாதிரி மொக்கை படத்தை சூப்பர் படம்னு சீட்டிங்க் பண்ணுனாத்தான் தப்பு.


7.தீபாவளிக்கு ரிலீஸ் ஆகற பிரசாந்த்தோட மம்பட்டியான் படம் அப்படியே தியாகராஜனோட மலையூர் மம்பட்டியானோட டிட்டோவாமே?

கதை,திரைக்கதை அதே மாதிரி இருந்தாக்கூட சமாளிச்சு பார்த்துடலாம்,ஜோடியும் அதே மாதிரி சரிதாவா இருந்துட்டா...?



8.டி ராஜேந்த்ரின் அடுத்த படம் அஜித் - ஷாலினியோட லவ் ஸ்டோரியாமே?

என்ன உளர்றே?

படத்தோட டைட்டில் ஒரு தலைக்காதல்னு சொன்னாங்க.அதான் கேட்டேன்.

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

10. ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள்  பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)


டிஸ்கி -1   : முதல் ஸ்டில் மைனா படத்தில் வரும் மைனா (பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்.)

டிஸ்கி - 2  :  ரெண்டாவது ஸ்டில் ஆண்மை தவறேல்.படத்தோட டைரக்டரை நான் கேக்கறேன்,பட டைட்டில்ல ஆண்மை இருக்கு ஓகே ,படத்தோட ஹீரோவுக்கு ஆண்மையின் அடையாளமா மீசை இல்லையே ஏன்?


Wednesday, October 20, 2010

சினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)





அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத சம்பவம்

            தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார்.  அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது.  வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

                        சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

            அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள்.  அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி சரசமாட ஆரம்பித்தாள்.

                        ”நான் உங்களைக் காதலிக்கிறேன்.  நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்” என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.

            தன் சரசம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

            அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,
ஒரு பெண் என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள்.  அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ்.  அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.

            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு
முழுச்செவிடு. நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை.  நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.

                        அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.

            அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம்.  அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

டிஸ்கி 1 - மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?அட்லீஸ்ட் ஒரு படப்பெயரை சொன்னா போதும்,பரிசு 10 டி வி டிக்கள் .ஒவ்வொரு டி வி டியிலும் 5 படங்கள் (ஆங்கிலம்).மொத்தம் 50 படங்கள்


டிஸ்கி 2 - பரிசு 4 பேருக்கு.அதிக பேர் சரியான விடை அளித்தால் முந்தியவருக்கு முன்னுரிமை அல்லது நமீதா முறையில் பரிசு (குலுக்கல் முறை)