Friday, October 08, 2010

கோட்டைக்கும் கோர்ட்டுக்கும் தகராறா?

தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக, பணி அனுபவம் குறைந்த லத்திகா சரண் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அவரது பணி நியமனத்தை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைவர் ஆர்.நடராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநர் விஜயகுமாரும் விளக்கம் அளித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வாதங்களும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச், தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என தீர்ப்பளித்தனர்.
அத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டிய‌லையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்தில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு தரச்சொல்லி உத்தரவிட்டும் செய்யாத மத்திய அரசை கோர்ட் கண்டித்தது,இப்போது இந்த மேட்டர்,அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது.இந்தத்தகவல் ஆனந்த விகடன் நண்பர் மூலம் கிடைத்தது.

29 comments:

செல்வா said...

//சமீபத்தில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு தரச்சொல்லி உத்தரவிட்டும் செய்யாத மத்திய அரசை கோர்ட் கண்டித்தது,//

நல்ல விஷயம் சொன்னா யாரு கேக்குறாங்க ..!

சி.பி.செந்தில்குமார் said...

சரி ,நீங்களாவது கேக்கறீங்களே?

செல்வா said...

// சி.பி.செந்தில்குமார் said...
சரி ,நீங்களாவது கேக்கறீங்களே?

//

நான் கேப்பேன்க..!!

புரட்சித்தலைவன் said...

present sir

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சி ,வெறும் வாயில பிரசண்ட் சொன்ன எப்படி?ஏதாவது பிரசண்ட் பண்ணுங்க.(பயப்படாதீங்க,உங்க வருகையே ஒரு கிஃப்ட்)

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

// சி.பி.செந்தில்குமார் said...
சரி ,நீங்களாவது கேக்கறீங்களே?

//

நான் கேப்பேன்க..!!
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

Anonymous said...

அப்பாடி அதிர்ச்சி இல்லாத பதிவு...லேபிள்ஸ் கீழே வைங்க...ஹிட்ஸ் கேட்ஜட் மேலே வைங்க...

Anonymous said...

அத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டிய‌லையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
//
இதெல்லாம் நடக்குற காரியம் இல்ல...

Anonymous said...

நயந்தாரா சீதைக்கு செம திட்டு விழுந்திருக்குமே..அதான் இந்த புது பதிவா

Anonymous said...

சினிமா விமர்சனம் போட்டு ரொம்ப வருசமாச்சு....

Anonymous said...

சாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா
-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்பாடி அதிர்ச்சி இல்லாத பதிவு...லேபிள்ஸ் கீழே வைங்க...ஹிட்ஸ் கேட்ஜட் மேலே வைங்க...


அந்தளவு அறிவு இருந்தா (டெக்னிக்கல்)நான் பிரபல பதிவர் ஆகி இருப்பனே?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டிய‌லையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
//
இதெல்லாம் நடக்குற காரியம் இல்ல...

நடக்கும் நடக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

நயந்தாரா சீதைக்கு செம திட்டு விழுந்திருக்குமே..அதான் இந்த புது பதிவா

ஹி ஹி ஆமா.

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சினிமா விமர்சனம் போட்டு ரொம்ப வருசமாச்சு....

இல்லையே,வந்தே மாதரம் போட்டு 17 நாள் ஆகுது,போடனும்.

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா
-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்

சாந்தி படமா?/எங்கே எங்கே ?எப்போ?எப்போ?

எஸ்.கே said...

//அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது//
இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாமோ?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

//அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது//
இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாமோ?


varum,வராம இருக்கனும்.

karthikkumar said...

சாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா
-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி

முத்து said...

karthikkumar said...

சாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா
-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி/////////////


வர வர உனக்கு நக்கல் அதிகம் ஆகிடுச்சு

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பெரிய பெரிய சமாச்சாரத்தை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டிங்க. வாழ்த்துகள். ஒரு வழியா இந்திரனை விட்டு வெளியே வந்திங்களே... ரொம்ப சந்தோசம். அது சரி... யார் சார் அந்த ஆனந்த விகடன் நண்பர்?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பிழைதிருத்தம். இந்திரன் என்பதை எந்திரனாக வாசிக்கவும் நண்பரே!

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா
-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி

கார்த்தி,உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சனே,சரி சாந்தி பற்றி மேலும் விபரம் அறிய 7 நாட்கள் பொறுக்கவும்,அடுத்த வாரம் 15 ரிலீஸ்,16 ல சுடசுட விமர்சனம்.

சி.பி.செந்தில்குமார் said...

முத்து said...

karthikkumar said...

சாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா
-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி/////////////


வர வர உனக்கு நக்கல் அதிகம் ஆகிடுச்சு

இந்த கமெண்ட் எனக்கா?கார்த்திக்கிற்கா? முத்து?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பெரிய பெரிய சமாச்சாரத்தை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டிங்க. வாழ்த்துகள். ஒரு வழியா இந்திரனை விட்டு வெளியே வந்திங்களே... ரொம்ப சந்தோசம். அது சரி... யார் சார் அந்த ஆனந்த விகடன் நண்பர்?

October 8, 2010 10:19 PM

பாத்தீங்களா? கம்பெனி சீக்ரெட்டை பப்ளிக்கா கேகறீங்க?நான் எப்பவாவது உங்க சின்ன வீடு பேரை கேட்டிருக்கேனா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பிழைதிருத்தம். இந்திரன் என்பதை எந்திரனாக வாசிக்கவும் நண்பரே!

October 8, 2010 10:20 PM

அதுவும் ஒரு வகைல சரிதான்,இந்திரன் தேவலோக அதிபதி,ரஜினி கோடம்பாக்க அதிபதி

முத்து said...

karthikkumar said...

சாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா
-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி/////////////


வர வர உனக்கு நக்கல் அதிகம் ஆகிடுச்சு

இந்த கமெண்ட் எனக்கா?கார்த்திக்கிற்கா? முத்து?///////////////


உங்களுக்கு இல்லை எல்லாம் அந்த கார்த்தி பய புள்ளைக்கு தான்

ம.தி.சுதா said...

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்தாதென்று... எப்பண்ணா..???

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்தாதென்று... எப்பண்ணா..???


hi hi hi