Wednesday, September 29, 2010

எந்திரன் பற்றி ஷங்கரின் பேட்டியும்,நையாண்டி நாரதரின் நச் கேள்விகளும்

எந்திரன் திரைப்படம் தயாரானது எப்படி என்பதை பெரிய புத்தகமாக எழுதலாம். ரசிகர்களுக்கு மாத்திரமல்ல, திரைப்படத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பல பாடங்கள் அதிலே படிக்கக் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வித்தியாசமானது. எல்லா அனுபவங்களுக்கும் பொதுவான தன்மை ஒன்றுதான்: சுவாரசியம்.இன்று ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷங்கர்...

‘காதல் அணுக்கள்‘ ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பால ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். ஆனா, லொகேஷன் பார்க்க போனா எல்லா இடமும் ஏதோ ஒரு டீவில வர்ற பாடல்ல பார்த்த மாதிரியே இருந்துது. அதே மாதிரி, லொகேஷன் மானேஜரும் ஒவ்வொரு இடத்துக்கு போனதும், ‘போன வாரம்தான் இந்த இடத்துல ஒரு தெலுங்கு ஷூட்டிங் நடந்துச்சு.. இந்தி பாட்டு எடுத்தாங்க..’ அப்படீம்பார்.

யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். ‘காதல் அணுக்கள்‘ அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் ‘மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்’னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.


உடனே புறப்பட்டோம். லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஓட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்ல பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணிக்குள்ள ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். ஏன்னா, அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். ‘சும்மா சொல்லக்கூடாது, ஷங்கர்.. கூட்டிட்டு வந்தீங்களே இடம்.. இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை..‘ன்னு ரஜினி சார் சொல்லிட்டே இருப்பார். அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டர்ல பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு. அதோட ஒரிஜினலை ரீ கிரியேட் பண்ணணும்னு சொல்லி பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேந்து அவரை இன்னும் அழகா காட்டும். ‘ஜானி‘ படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். ரகுமான் அழகா ட்யூன் போட்ருக்கார். ரஜினி சார் கிடார் வச்சுகிட்டு ஃப்ரீயா பண்ணியிருக்கார். படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்னு கேட்டா இதைத்தான் சொல்லுவேன்.

காதல் வந்த ஒரு விஞ்ஞானி பாடுற பாடல். வழக்கமான காதல் மொழி தெரியாது. அதனால் விஞ்ஞான ரீதியா ரொமான்டிக் பாடல் வேணும்னு கேட்டேன். வைரமுத்து சார் நியூட்ரான், எலக்ட்ரான்னு வச்சு வித்தியாசமா எழுதினார். எல்லாரோட பங்களிப்பும் சேந்து அந்த பாடல் சீனை எப்படி சூப்பரா அமைச்சுருக்குன்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க.. 



‘எந்திரன்’ படத்தில் இடம்பெறும் ‘கிளிமஞ்சாரோ’ பாடல் ஷூட்டிங், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலையில் நடந்தது. அந்த அனுபவம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது: முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்... முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர். என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட் டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும்&அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிறலாம்னு 30, 40 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க... அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க.


மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க. நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க... சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது. என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க. முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே  எல்லாரும் கை தட்டினாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன, பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்தாங்க. அவங்க உடம்புலயே ரிதம் இருந்தது. அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க.


நையாண்டி நாரதரின் கேள்விகள்.

1.சிவாஜி படத்துல கறுப்பு பணத்துக்கு எதிரான கருத்தை சொன்ன நீங்க எந்திரன் ல அதை ஏன் ஃபாலோ பண்ணலை?

2.ரஜினி தன் மகளோட கல்யாணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம்,கூட்ட நெரிசலால் அவதி ஏற்படும்னு சொன்னாரே,எந்திரன் பட ரிலீஸ்க்கும் கூட்ட நெரிசல் அதை விட 4 மடங்கு அதிகமா இருக்கும்.ரசிகர்கள் யாரும் ஒரு வாரத்துக்கு தியேட்டர் பக்கமே வராதீங்கனு சொல்லலையே ,ஏன்?

3.ஈரோட்ல 6 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகுது.விடிகாலை 4-30 மணிக்கு முத ஷோ,மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தறதுனா இப்படித்தானா?

4.டிக்கட் விலை ரூ 250,ரூ 300.நார்மல் டிக்கட்டைப்போல் 23 மடங்கு அதிகம்.இது ரசிகர்களை ஏமாற்றிப்பணம் பறிப்பது ஆகாதா?


5.ஒரு தியேட்டரில் ஒரு ஷோவுக்கு 1200 பேர் பார்ர்க்கிறார்கள்.6 ஷோ ஒரு நாளுக்கு 6 தியேட்டர் 6*6*1200=
43,200 மக்கள் ஒரு நாளில் படம் பார்க்கிறார்கள்.முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் பேர் படத்தை பார்த்து விடுவார்கள்.படம் நல்லாருக்கோ,இல்லையோ,டப்பாவோ ரிசல்ட் கேட்காமலேயே இத்தனை பேர் பார்க்கறதால புரொடியூசரான சன் டிவிக்கு ஏகப்பட்ட லாபம்.ரசிகனுக்கு?


6.இந்தப்படத்தைப்பார்க்கலைன்னா அது ஏதோ தெய்வக்குத்தம் மாதிரி ஒரு இமேஜை சன் டி வி கிளப்பிட்டிருக்கு,அது ஏன்?


7.இத்தனை பிரம்மாண்டங்களுக்கு நடுவிலும் வரிவிலக்குக்கு ஆசைப்பட்டு ரோபோ டைட்டிலை தமிழ்ல மாத்தி இருக்கீங்க,ஏன்?(வரி விலக்குஎன்பது சின்ன பட்ஜட் படங்களுக்கு அரசு மக்கள் வரிப்பணத்துல இருந்து தர்றது)






34 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஷங்கருக்கு மிகவும் பிடித்த யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். ‘காதல் அணுக்கள்‘ அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் ‘மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்’னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.//

ரெண்டு தடவை இருக்குப்பா. எதுக்கு இது ரெண்டு தடவை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா நான் இந்திரன் பாக்க மாட்டேன்னு ஒரு பதிவு போடுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//(ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.//

யாரை அடிச்சு சொன்னார்

அப்பாதுரை said...

இந்தப் படம் ரீலீஸ் ஆச்சா இல்லியா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்,ரிப்பீட் ஆடியன்ஸ் மாதிரி அது ரிப்பீட் ஆகிடுச்சு,கரெக்ட் பண்ணீட்டேன்,தான்க்ஸ்பா

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா நான் இந்திரன் பாக்க மாட்டேன்னு ஒரு பதிவு போடுவீங்களா?

ஹி ஹி ,அதை ஏற்கனவே ஒரு ஃபேமஸ் பிளாக்கர் போட்டதாச்சே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//(ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.//

யாரை அடிச்சு சொன்னார்

பேட்டி குடுக்கறப்ப முன்னால இருந்த டேபிளை ... ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாதுரை said...

இந்தப் படம் ரீலீஸ் ஆச்சா இல்லியா?

இன்னும் இல்லை,ஆகும் வரை அலப்பறை தொடரும்.(அக்டோபர் 1 முதல் இங்கே, செப்டம்பர் 30 முதல் ஃபாரீனில்.)

என்னது நானு யாரா? said...

பணம்... பணம்... பணம்...!!!

சி.பி.செந்தில்குமார் said...

என்னது நானு யாரா? said...

பணம்... பணம்... பணம்...!!!

September 29, 2010 8:13 AM
அதே, அதே,அண்ணே புது பதிவு போட்டீங்கன்னா ஒரு லிங்க் குடுங்க,வந்துடறேன்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ரஜினி க்காக எல்லாம் பொறுத்துக்கலாம் சார் ...

ஆனந்தி.. said...

என்ன இது பத்தி பேசினாலும் மாஸ் ரஜினி சார் க்காக எல்லாரும் எந்திரன் பார்க்கத்தான் போறாங்க..(நானும் தான்)!!
இல்லையா சிபி..??

karthikkumar said...

இன்னும் எதனை நாளைக்குதான் பதிவுலகம் எந்திரன் புகழ் பாடும்? //ரஜினி சார் க்காக எல்லாரும் எந்திரன் பார்க்கத்தான் போறாங்க..///

karthikkumar said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா said...

ரஜினி க்காக எல்லாம் பொறுத்துக்கலாம் சார் ...
பொறுத்தது போதும் புதிய மனிதா,பொங்கி எழு,டிக்கட் வாங்க கியூவில் நில்.(லுங்க)

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆனந்தி.. said...

என்ன இது பத்தி பேசினாலும் மாஸ் ரஜினி சார் க்காக எல்லாரும் எந்திரன் பார்க்கத்தான் போறாங்க..(நானும் தான்)!!
இல்லையா சிபி..??

அதேதான்.ஆனா பிளாக்குல வாங்கிப்பக்காதீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthik said...

இன்னும் எதனை நாளைக்குதான் பதிவுலகம் எந்திரன் புகழ் பாடும்? //ரஜினி சார் க்காக எல்லாரும் எந்திரன் பார்க்கத்தான் போறாங்க..///

இன்னும் ஒரு வாரம்,அப்புறம் அடுத்த பரப்பரப்பு தேடிப்போய்டுவாங்க.

குரங்குபெடல் said...

நல்லபதிவு . . .பாராட்டுக்கள்

எஸ்.கே said...

கேள்வியெல்லாம் நச்தான் சார்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சார் ,
நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா ...,நேத்து ஒரு பழைய புத்தக கடையில பாலகுமாரன் புக் வாங்கினபோ ...,அதில் வாசகர் கவிதையில் உங்க பேர் போட்டு கவிதை வந்திருக்கு ...,அது வெளியான வருஷம் ...2001 நினைகிறேன் ...,

சி.பி.செந்தில்குமார் said...

udhavi iyakkam said...

நல்லபதிவு . . .பாராட்டுக்கள்


நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

கேள்வியெல்லாம் நச்தான் சார்!

நன்றி எஸ் கே,எல்லாம் உங்க ஆதரவில்தான்.

சி.பி.செந்தில்குமார் said...

பனங்காட்டு நரி said...

சார் ,
நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா ...,நேத்து ஒரு பழைய புத்தக கடையில பாலகுமாரன் புக் வாங்கினபோ ...,அதில் வாசகர் கவிதையில் உங்க பேர் போட்டு கவிதை வந்திருக்கு ...,அது வெளியான வருஷம் ...2001 நினைகிறேன் ...

அடடே,கண்டுபிடிச்சிட்டீங்களா?1998 ல இருந்து எழுதறேன் அண்ணே,கவிதை,ஜோக்ஸ்,சினிமா விமர்சனம்,கட்டுரை எல்லாம்

புரட்சித்தலைவன் said...

allignment........
allignment........

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

போங்க சார்... எந்திரன் படத்தைப் பற்றிய உங்க பதிவை படிக்கும் போது எனக்கு வெட்கவெட்கமா வருது...ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னமும் எந்திரன்லதான் இருக்கீங்களா? நாங்கள்லாம் எந்திரன் பார்ட்- 2 வே எடுத்துட்டோம்! (அதுக்கும் ஒரு பேட்டி எடுத்துப் போட்ருங்க பாஸ்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி.பி.செந்தில்குமார் said...
பனங்காட்டு நரி said...

சார் ,
நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா ...,நேத்து ஒரு பழைய புத்தக கடையில பாலகுமாரன் புக் வாங்கினபோ ...,அதில் வாசகர் கவிதையில் உங்க பேர் போட்டு கவிதை வந்திருக்கு ...,அது வெளியான வருஷம் ...2001 நினைகிறேன் ...

அடடே,கண்டுபிடிச்சிட்டீங்களா?1998 ல இருந்து எழுதறேன் அண்ணே,கவிதை,ஜோக்ஸ்,சினிமா விமர்சனம்,கட்டுரை எல்லாம்//

நெஜமாவா பாஸ்? சூப்பர்!

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

allignment........
allignment........


ஓக்கே ஓகே அசைன்மெண்ட் பற்றி ஏதாவது சொல்லிட்டு போங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

போங்க சார்... எந்திரன் படத்தைப் பற்றிய உங்க பதிவை படிக்கும் போது எனக்கு வெட்கவெட்கமா வருது...ஹி...ஹி...!

அவ்வளவு ஆபாசமாவா இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னமும் எந்திரன்லதான் இருக்கீங்களா? நாங்கள்லாம் எந்திரன் பார்ட்- 2 வே எடுத்துட்டோம்! (அதுக்கும் ஒரு பேட்டி எடுத்துப் போட்ருங்க பாஸ்!)

நக்கல் அடிக்கறதுல உங்களை மிஞ்ச முடியுமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி.பி.செந்தில்குமார் said...
பனங்காட்டு நரி said...

சார் ,
நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா ...,நேத்து ஒரு பழைய புத்தக கடையில பாலகுமாரன் புக் வாங்கினபோ ...,அதில் வாசகர் கவிதையில் உங்க பேர் போட்டு கவிதை வந்திருக்கு ...,அது வெளியான வருஷம் ...2001 நினைகிறேன் ...

அடடே,கண்டுபிடிச்சிட்டீங்களா?1998 ல இருந்து எழுதறேன் அண்ணே,கவிதை,ஜோக்ஸ்,சினிமா விமர்சனம்,கட்டுரை எல்லாம்//

நெஜமாவா பாஸ்? சூப்பர்!

நன்றி அண்ணே

ம.தி.சுதா said...

சகோதரா எந்திரன் சண்ரீவியின் தந்திரன்....

சி.பி.செந்தில்குமார் said...

அப்படின்னா என்ன?சுதா?

ம.தி.சுதா said...

ஃஃஃஃசகோதரா எந்திரன் சண்ரீவியின் தந்திரன்....ஃஃஃஃஃ
ஃஃஃஃஅப்படின்னா என்ன?சுதா?ஃஃஃஃ

அத தான் சகொதரா படம் எடுக்கத் தொடங்கிய நாளிலிருந்த ஏதோ ஒன்றைக் காட்டிக் காட்டியே உளைத்தக் கொண்டிருக்கிறார்களே...
சகோதரா தயவு செய்து என் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ள முடியுமா..?