Tuesday, September 28, 2010

அரசியல்வாதிகளின் அலப்பறையும்,சினிமாக்காரர்களின் சிரிப்புரையும்

1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது


 நையாண்டி நாரதர் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ?



2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே பேசக்கூடாது. அந்த முடிவு சோனியாவிற்கு மட்டும் தான் உண்டு. எனவே, இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

நையாண்டி நாரதர் - அண்ணே,தலைவர் நீங்களே கூட்டணி பற்றி பேசக்கூடாதுன்னா அப்புறம் எதுக்கு அந்த தலைவர் போஸ்ட்டிங்க்?


3.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
விஜயகாந்த் கட்சி உட்பட பல கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், காங்கிரஸ், மக்களின் உரிமைக்காகப் போ ராடி வரும் இயக்கம். வரும் 2016க்குள் நாம் மூன்று பெரிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆறு ஆண்டு காலமும் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வந்தால், 2016ல் ஆட்சி அமைக்க முடியும்.

நையாண்டி நாரதர் - யானை போய் குதிரை வந்தது டும் டும் டும்,குதிரை போய் கழுதை வந்தது டும் டும்,2011 போய் 2016 வந்தது டும் டும் டும்


 

4.சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு:
 கருணாநிதி கூறிய வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் ஓட்டளித்தனர். இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன.

 நையாண்டி நாரதர் - அது வேணா உண்மைதான்,கலைஞர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குது.





5.   திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் - காதலன் பிரபுதேவா

 நையாண்டி நாரதர் -ஆம்,டைவர்ஸுக்குப்பிறகு நடிப்பார்.(இத்தனை நாளா நடிச்சாரா?)




6. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க  - நயன்தாரா


 நையாண்டி நாரதர் -ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங்க்லதான் பிரச்சனை ஆகிடுது.போன வருஷம் சிம்பு,இந்த வருஷம் பிரபுதேவா,அடுத்த வருஷம் உங்க மனசை அசத்தப்போவது யாரு?



7.பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.

-நயன்தாரா




நையாண்டி நாரதர்-நீங்க வேணா பாருங்க கஜினி சூர்யா மாதிரி பல பேரை பச்ச குத்தி கலக்கப்போறீங்க.

25 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

last 2 matter superb. paaththu thaadikkaarar veettuku vanthudap poraar

சி.பி.செந்தில்குமார் said...

அவர் வந்தா டி ஆர் அவர்களை களம் இறக்கிடவேண்டியதுதான்.(எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா படி)

இளங்கோ said...

:)

என்னது நானு யாரா? said...

ஒருத்தரையும் பாக்கி விடல போல இருக்கு! செம தூள்! எல்லோரையும் க்லாய்கறதுக்கும் ஒரு தில் வேணும் தல! அது உங்ககிட்ட நிறையவே இருக்குன்னு புரிஞ்சிப்போச்சு.

சரி நண்பா! Alexa Ranking ஐ இணைச்சா நல்லதுன்னு சொன்னீங்க. அது ஏன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்!

தெரிஞ்சிக்கிட்டா அதை இணைக்கணுமா இல்லையான்னு முடிவு செய்ய சௌகரியமா இருக்கும்.

நம்ப கடைக்கு வந்து சரக்கைப்பத்தி சொல்லிட்டுப் போனதுக்கு நன்றி தல!

karthikkumar said...

எல்லோரையும் க்லாய்கறதுக்கும் ஒரு தில் வேணும் தல! அது உங்ககிட்ட நிறையவே இருக்குன்னு புரிஞ்சிப்போச்சு.///குத்துங்க எசமா குத்துங்க

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க!:-)

Anonymous said...

(இத்தனை நாளா நடிச்சாரா?)//-;))

Anonymous said...

நயன்,சிம்பு கலக்கல் ஃபோட்டோ

Anonymous said...

சரி நண்பா! Alexa Ranking ஐ இணைச்சா நல்லதுன்னு சொன்னீங்க. அது ஏன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்!//
இது பத்தி விரிவா வந்தே மாதரம் பிளாக்ஸ்பாட் சசிகுமார் எழுதி இருக்கார் படிங்க...
அலெக்ஸா ரேங்க் சர்வதேச இணையதள தர நிர்ணயம் செய்ற இணையதளம்.நம்பகமானது.அதை இணைச்சா நமக்கு ஹிட்ஸ் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது

Anonymous said...

எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.//
எங்க கவலையெல்லாம் சிம்பு இதை பத்தி என்ன நினைக்கிறார்னுதான்

Anonymous said...

கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது//
அதனால்தான் சைடு கேட் வழியா உள்ளே போனீங்களா தலைவரே

ஆர்வா said...

அதெப்படிங்க காமெடி உங்களுக்கு அட்டகாசமா வருது. கலக்குறீங்க. நயன்தாரா ஃபோட்டோ சூப்பர். (எப்படி இருந்த நயன்தாரா இப்படி ஆகிட்டாங்களே) பதிவர்கள் சங்கத்துல கவிஞர்கள் லிஸ்ட்'ல என்னையும் குறிப்பிட்டிருந்தீங்க. ரொம்ப நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

இளங்கோ said...

:)


/?//???!!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger என்னது நானு யாரா? said...

ஒருத்தரையும் பாக்கி விடல போல இருக்கு! செம தூள்! எல்லோரையும் க்லாய்கறதுக்கும் ஒரு தில் வேணும் தல! அது உங்ககிட்ட நிறையவே இருக்குன்னு புரிஞ்சிப்போச்சு.

சரி நண்பா! Alexa Ranking ஐ இணைச்சா நல்லதுன்னு சொன்னீங்க. அது ஏன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்!

தெரிஞ்சிக்கிட்டா அதை இணைக்கணுமா இல்லையான்னு முடிவு செய்ய சௌகரியமா இருக்கும்.

நம்ப கடைக்கு வந்து சரக்கைப்பத்தி சொல்லிட்டுப் போனதுக்கு நன்றி தல!


சொல்றேன்,வெயிட் பிளீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthik said...

எல்லோரையும் க்லாய்கறதுக்கும் ஒரு தில் வேணும் தல! அது உங்ககிட்ட நிறையவே இருக்குன்னு புரிஞ்சிப்போச்சு.///குத்துங்க எசமா குத்துங்க


பாத்து,வலிக்கப்போவுது

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க!:-)

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

(இத்தனை நாளா நடிச்சாரா?)//-;))


ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சரி நண்பா! Alexa Ranking ஐ இணைச்சா நல்லதுன்னு சொன்னீங்க. அது ஏன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்!//
இது பத்தி விரிவா வந்தே மாதரம் பிளாக்ஸ்பாட் சசிகுமார் எழுதி இருக்கார் படிங்க...
அலெக்ஸா ரேங்க் சர்வதேச இணையதள தர நிர்ணயம் செய்ற இணையதளம்.நம்பகமானது.அதை இணைச்சா நமக்கு ஹிட்ஸ் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது


அப்புறம் என்ன ,என் குருவே சொல்லியாச்சு,போதுமா><

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.//
எங்க கவலையெல்லாம் சிம்பு இதை பத்தி என்ன நினைக்கிறார்னுதான்

அவர் நினக்கமாட்டார்,கண்ணிரால நனைச்சிட்டிருப்பார்.

சி.பி.செந்தில்குமார் said...

எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.//
எங்க கவலையெல்லாம் சிம்பு இதை பத்தி என்ன நினைக்கிறார்னுதான்

September 28, 2010 6:27 PM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது//
அதனால்தான் சைடு கேட் வழியா உள்ளே போனீங்களா தலைவரே

September 28, 2010 6:28 PM


அப்படிப்போடு அற்ய்வாள

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

அதெப்படிங்க காமெடி உங்களுக்கு அட்டகாசமா வருது. கலக்குறீங்க. நயன்தாரா ஃபோட்டோ சூப்பர். (எப்படி இருந்த நயன்தாரா இப்படி ஆகிட்டாங்களே) பதிவர்கள் சங்கத்துல கவிஞர்கள் லிஸ்ட்'ல என்னையும் குறிப்பிட்டிருந்தீங்க. ரொம்ப நன்றி.

அதெப்பிடீங்க உங்களுக்கு கவிதை அட்டகாசமா வருது?(எப்படி வாய்க்கால திருப்பி விட்டேன் பாத்தீங்களா/?

DR.K.S.BALASUBRAMANIAN said...

நயந்தாரா மீது தனிப்பட்ட கோபம் ஏதாவது உண்டா ?
இப்படி போட்டு தாக்குறீங்க.....

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவா பெரிய இடத்தை எல்லாம் ரொம்ப சீண்டிப் பாக்கறிங்க. வீட்டுக்கு ஆட்டோ வராமா பார்த்துக்குங்க....!

சி.பி.செந்தில்குமார் said...

drbalas said...

நயந்தாரா மீது தனிப்பட்ட கோபம் ஏதாவது உண்டா ?
இப்படி போட்டு தாக்குறீங்க.....


hi hi ஒரு ஆற்றாமைதான்(அது என்ன ஆமைனு எல்லாம் கேக்கக்கூடாது)

சி.பி.செந்தில்குமார் said...

29, 2010 9:33 PM
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவா பெரிய இடத்தை எல்லாம் ரொம்ப சீண்டிப் பாக்கறிங்க. வீட்டுக்கு ஆட்டோ வராமா பார்த்துக்குங்க....!

September 29, 2010 9:34 PM

எங்க வீட்டுக்குள்ள சைக்கிளே வர முடியாது,ரொம்ப குறுகலான இடம்.