Sunday, August 15, 2010

விட்டுச்சென்றவளுக்கு ஒரு விண்ணப்பம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் 1999 ஆண்டில் நான் எழுதியகவிதை இது.இப்பூது படிப்பதற்கு எனக்கே அபத்தமாகத்தான் தெரிகிறது.பதின்ம பருவங்களில் நாம் செய்தது,எழுதியது எல்லாம் அபத்தமாக இப்போது தோன்றினாலும் வாழ்வியல் ரசனைகளையும் அவைதானே தருகின்றன.

வேண்டாம் என்று நீ

விலகிப்போனாலும்

காற்றின் ஒரு மூலக்கூறாய் மாறி

உன் சுவாசத்தில் நிரம்புவேன்.

நான் பார்க்கின்ற

அதே நிலாவையும்,சூரியனையும்

எங்காவது ஒரு மூலையில் இருந்து

நீயும் பார்க்கிறாய் என்பதால்

அங்கே குடியேற குறுக்கு வழியோ ,

என் முகம் அதில் பிரதிபலிக்க

விஞ்ஞான முறையோ தேடுகிறேன்.

திட்டமிட்ட பயணத்திலோ,

எதேச்சையாகவோ

நம் சந்திப்பு ஒருமுறை

நிச்சயம் நிகழும்.

அப்போது

உன் உதடுகளால் முடியாவிட்டாலும்

கண்கள் மூலமாவது

ஒரு புன்னகை சிதறவிடு.

9 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

4 நால் லீவுங்கறதுக்காக 4 பதிவு ஒரே நாளிலா?10 நாள் லீவு போட்டா..?தமிழ் மணம் படுத்துருமே

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

1 கவிதை,சில்பான்சி ஜோக்ஸ்,நையாண்டி விருது,அரசியல் நு குமுதம் ரேஞ்சுக்குவெரைட்டியா உங்க தளம் போய்கிட்டு இருக்கு

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பத்திரமா பார்த்துக்கப்பா,தளம் காணாம போகப்போகுது.

புரட்சித்தலைவன் said... Best Blogger Tips

விட்டு சென்றவள், உங்கள் கவிதையை படித்தால் நிச்சயம் திரும்பி வருவாள்.கவிதை சூப்பரா இருக்கு.அனுபவ கவிதையா....?

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

புரட்சித்தலைவன் வருகைக்கு நன்றி.அனுபவமேதான்

தோழி பிரஷா( Tholi Pirasha) said... Best Blogger Tips

கவிதை நல்லாயிருக்கு சார்

Sasi Kala said... Best Blogger Tips

வரிகளில் வாழ்கிறது காதல்.