Sunday, August 08, 2010

உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம்

ஓ பக்கங்கள் பத்திரிக்கை உலகில் ஏற்படுத்திய தாக்கங்கள் நாம் அறிந்ததே.ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதில்களும்,சினிமா விமர்சனமும் வாசகர்களால் அதிகம் படிக்கும் பகுதியாகவும்,விரும்பி புரட்டும் பக்கமாகவும் விளங்கி வந்த நேரத்தில் ஓ பக்கங்கள் அதிரடியாய் அவைகளை பின்னுக்குத்தள்ளி சூப்பர் ஹிட் ஆனது.ஒவ்வொரு வாரமும் அவர் வைத்த குட்டு,ஷொட்டு,ஹிட்டு கவனிக்கப்பட்டது.டாக் ஆஃப் டவுன் (TALK OF TOWN)
ஆனது.ஆனந்த விகடனில் இருந்து ஞானி வெளி வந்த பிறகும் கூட குட்டு,ஷொட்டு,ஹிட்டு வாசகர்களால் நிரப்பப்பட்டு வந்தது அதன் வெற்றியை பறை சாற்றியது.
அடுத்து குமுதம். 2 முன்னிலைப்பத்திரிக்கைகளிலும் அடுத்தடுத்து எழுதியதால் பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைந்த அவர் எழுத்து 2வது முறையாக தேக்கம் கண்டது.ஆளுங்கட்சி மீது அவர் வைத்த விமர்சனங்கள் 2 பத்திரிக்கைகளையும் யோசிக்க வைத்தது.
அடுத்து எந்த பத்திரிக்கையில் அவர் எழுதப்போகிறார் ?ஆளாளுக்கு ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்கள்.சிலர் தினமணி இதழில் ஞாயிறு எடிசன் தினமணிக்கதிரில் எழுதுவார் எனவும் ,தினமலர் வாரமலரில் எழுதுவார் எனவும் ஆரூடம் கூறப்பட்ட்து.
தினமலர் வாரமலரில்அந்துமணியின் பார்த்தது கேட்டது,படித்தது பக்கங்கள் பரவலாக வரவேற்புப்பெற்ற பக்கம் எனவும்,ஓ பக்கங்கள் தினமலர் வாரமலரில் வந்தால் அது அந்துமணியை இருட்டடிப்பு செய்து விடும் என்று அந்துமணி அஞ்சுவதாகவும் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் கல்கி வார இதழில் அடுத்த வாரம் முதல் ஓ பக்கங்கள் வருவதாக கல்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

நமது கேள்வி எல்லாம் 6 லட்சம் முதல் 8 லட்சம் வாசகர்களை சென்றடைந்த ஓ பக்கங்கள் இனி வெறும் 40 ஆயிரம் வாசகர்களை மட்டுமே சென்றடையும்.
ஆனால் கல்கி ஒரு தரமான பத்திரிக்கை என்பதிலோ அதன் நடுநிலைத்தன்மையிலோ எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.அதன் வீச்சு குமுதம் ,விகடனுடன் ஒப்பிடும்போது பல மடங்கு குறைவாகவே இருக்கும்.
குங்குமம் பத்திரிக்கை ஆளுங்கட்சிப்பத்திரிக்கை என்பதால் 4வது இடத்தில் இருக்கும் கல்கியை அவ்ர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என எதிர்பார்க்கலாம்.

15 comments:

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கல்கியிலிருந்து அடுத்து எந்த இதழுக்கு போவார் என்பதே அவர் எழுத்தை விட பரப்பாக இருக்கப் போகும் விஷயம்!

ராஜவம்சம் said...

ஞானி ஐயாவுக்கு சரியான இடம் கல்கியென்றே தோன்ருகிறது.
பகிர்வுக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க பூங்கதிர்,ஒவ்வொரு டைம் இடம் மாறும்போதும் அவருக்கு புகழ் கூடுதே தவிர குறையவில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் வம்சம் உங்க கமெண்ட் அம்சம்.நன்றி

ரவி said...

புதிய தலைமுறையை மறந்துட்டீங்களே ?

ராம்ஜி_யாஹூ said...

கல்கி குழுமத்தினருக்கு நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க ரவி, சரியா சொன்னீங்க.ஆனா அது கலைஞர் க்ரூப் ஆச்சே

-/பெயரிலி. said...

கல்கி+ ஞாநி
அப்போ ஈழத்தமிழர்களுக்கு இன்னும் ப்ரீ அட்வைஸு இருக்குங்கிறீங்க.

/ஆனால் கல்கி ஒரு தரமான பத்திரிக்கை என்பதிலோ அதன் நடுநிலைத்தன்மையிலோ எந்த ஒரு சந்தேகமும் கிடையாது./

நீங்க அவ்

ttpian said...

ஒரு பூணூல் இன்னொரு பூணூலுக்கு இடம் தருகிறது:
ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு இடம் தருவானா

Guruji said...

முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

Thamizhan said...

கடைசியாக மனதைத் திறந்து எழுதலாம்.
கல்கியின் சில குறிப்பிட்ட எழுத்துக்கள்.
கருப்புக் காக்கை--காமராசர்.
கழுதை இந்தியத் தலைவர் ஆகிறது--செயில் சிங் . விதவைகள் பால்பட்ட நிலம்--காஞ்சி வேலூர் புகழ் சுப்புணியின் தெய்வ வாக்கு.
எழுதுவதெல்லாம் 40000 பூணூல்மேனிகளுக்கு அர்ப்பணம்.

சி.பி.செந்தில்குமார் said...

உஜிலாதேவி பெயரே வித்யாசம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க தமிழன்,உங்க வருகைக்கும்,கருத்துக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

டிடிபியன் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி

Unknown said...

இது கடுகு அல்ல பொடுகு